Category: இன்றைய சிந்தனை

தற்பெருமை இல்லா அழைத்தல் வாழ்வு

இந்த உலக வாழ்வை வாழ்ந்து முடிக்கின்ற தருவாயில் பெரும்பாலான மனிதர்கள் கேட்கக்கூடிய கேள்வி “எனது வாழ்வின் பொருள் என்ன?” என்பதுதான். இந்த கேள்வி நிச்சயம் அழைக்கப்பட்டவர்களின் வாழ்விலும் எதிரொலிக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. கடவுளுக்காக, இந்த உலக இன்பங்களை மறந்து, இந்த உலகம் சார்ந்து வாழாமல், தங்கள் வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்த, இறைவனின் ஊழியர்களுக்கு என்ன தான் கைம்மாறு? என்பது பேதுருவின் கேள்வி. நிச்சயம், இயேசுவைப் பின்தொடர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய ஆசீர்வாதம். அப்படியிருக்கிறபோது, யாரும் நிச்சயம் கைம்மாறு என்று எதிர்பார்ப்பது இல்லை. இயேசுவின் ஊழியர்களாக இருப்பதே, நிறைவான செயல்தான். இருந்தாலும், மனித கண்ணோட்டத்தில் பேதுருவின் கேள்விக்கு இயேசு அருமையான செய்தியைத்தருகிறார். இயேசுவின் ஊழியர்களாக இருக்கிறோம் என்கிற தற்பெருமை, நம்மை தவறான இடத்திற்கு அழைத்துச் சென்றுவிடும், என்பது இயேசு நமக்கு விடுக்கும் எச்சரிக்கையாக இருக்கிறது. பேதுரு இந்த மனநிலையோடு தான் கேட்கிறார். நான் இயேசுவின் சீடன். எனவே, எனக்கென்று இந்த சமூகத்தில் ஒரு...

என் நெறிகேட்டையும், பாவத்தையும் போக்கினீர்

தவறான வாழ்க்கை, செய்யக்கூடாத தவறுகளை கடவுள் போக்கினார் என்று ஆசிரியர் கூறுகிறார். கடவுள் நீதியுள்ளவர் என்று சொல்கிறோமே? நீதியுள்ளவர் என்றால் ஒரு மனிதர் செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டாமா? எப்படி செய்த தவறுகளை போக்க முடியும்? கடவுள் எந்த ஒரு ஆன்மாவும் தவறான வழிக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறவர் கிடையாது. ஒவ்வொரு ஆன்மாவும் மீட்கப்பட வேண்டும் என்று சிரத்தை எடுக்கிறவர். அதனுடைய ஒரு அடையாளம் தான், மற்றவர்களின் குற்றங்களைப் போக்குவது. கடவுளிடம் நமது தீய செயல்களை ஒளிவு மறைவின்றி, உண்மையான மனவருத்தத்தோடு வெளிப்படுத்துகிறபோது, மனமிரங்கி மன்னிக்கக்கூடியவராக இருக்கிறார். தாவீது அரசர் செய்த தவறு அனைவருக்குமே தெரியும். ஒரு அரசராக இருக்கிறவர், தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்யக்கூடாது தவறைச்செய்கிறார். யாரும் அறியவில்லை என்கிற மமதையோடு இருக்கிறார். ஆனால், அவர் செய்த தவறை கடவுள் அறிவார் என்று இறைவாக்கினரால் உணர்த்தப்பட்டபோது, தன்னுடைய தவறு வெளிப்பட்டுவிட்டதே என்று அவர் கோபப்படவில்லை. மாறாக, தன்னுடைய...

இயேசுவின் வாழ்வு

நமது குழந்தைகளுக்கு பிறந்தநாள் வருகிறபோது, அவர்களை ஆலயத்திற்கு கொண்டு சென்று, திருப்பலியில் கலந்துகொண்டு, அருட்பணியாளர்களிடம் சிறப்பாக செபிக்கச் சொல்வோம். அதுபோல, பெரியவர்களிடமும் நாம் அவர்களைக் கொண்டு செல்வோம். இது எல்லா மக்கள் மத்தியிலும் காணப்படக்கூய ஒரு நிகழ்வு. இதைத்தான் யூதப்பாரம்பரியத்தில் வாழ்கின்ற பெண்களும் செய்கிறார்கள். தங்கள் குழந்தைகளை, மக்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு போதகர், ஆசீர்வதிக்க வேண்டுமென கொண்டுவருகிறார்கள். இயேசு தன்னிடம் கொண்டு வரப்பட்ட குழந்தைகளை ஆசீர்வதிப்பதற்கு தயாராக இருக்கிறார். தனக்கு களைப்பு இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், குழந்தைகளைச் சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறார். குழந்தைகள் யூத சமுதாயத்தில் பொருளாக பார்க்கப்பட்டவர்கள். வயதுவருகிறவரை, அவர்கள் பெற்றோரின் அரவணைப்பில் தான் வளர முடியும். பெண் குழந்தை என்றால் மதிப்பே கிடையாது. அப்படிப்பட்ட சமுதாயத்தில் குழந்தைகளையும் இயேசு அரவணைப்பது, மிகப்பெரிய ஒரு நிகழ்வாக இருக்கிறது. கடவுள் தனக்கு கொடுத்த ஆசீரை, மற்றவர்களுக்கு எப்போதெல்லாம் கொடுக்க முடியுமோ, எந்த வழியில் எல்லாம் கொடுக்க முடியுமோ,...

உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்

கடவுள் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு பத்து கட்டளைகளை வழங்கினார். இந்த கட்டளைகள் பத்து கட்டளைகளாக தரப்பட்டிருந்தாலும், அந்த கட்டளைகள் காட்டும் நெறிமுறைகளாக நாம் பார்ப்பது ஒன்றே ஒன்று தான். அதுதான் அன்பு. இந்த அன்பு என்கிற நெறிமுறையின் அடிப்படையில் தான் அனைத்து கட்டளைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நம்மால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும். உதாரணமாக, “களவு செய்யாதிருப்பாயாக” என்பது பத்துக்கட்டளைகளுள் இருக்கக்கூடிய ஒரு கட்டளை. வெளிப்படையாக இது அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பதாக இருந்தாலும், சற்று ஆழமாக நாம் சிந்தித்துப்பார்க்கிறபோது, அதனுள் இருக்கிற உண்மையான பொருளை நாம் உணர்ந்து கொள்ள முடியும். ஒரு பொருளை உழைத்து ஒருவர் சம்பாதிக்கிறார். அந்த பொருள் அவருக்குரியது. அவருடைய உழைப்பில் நாம் பெறக்கூடியது. மற்றவரின் பொருளை நாம் திருடுகிறபோது, அவரிடத்தில் நமக்கு அன்பு இல்லை என்பதுதான் உண்மையான அர்த்தம். அந்த மனிதரிடத்தில் நமக்கு அன்பு இருந்திருந்தால், நிச்சயம் நாம் அதை எடுக்க நமது மனம்...

இயேசுவின் இதயத்தை பெற்றிருப்போம்

நாம் பேருந்திற்காக காத்திருக்கிறபோது, நாம் இரயிலில் பயணம் செய்கிறபோது பிச்சைக்காரர்கள் நம்மிடத்தில் பிச்சை கேட்டு வருகிறபோது, ”இவர்களுக்கெல்லாம் வேறு வேலையில்லையா?” என்று நமக்குள்ளாக கடிந்திருப்போம். ”உழைத்து சம்பாதிக்க வேண்டியதுதானே?” என்று அறிவுரை கூறியிருப்போம். இல்லையென்றால் பாராமுகமாய் இருந்திருப்போம். நாம் மட்டுமல்ல, அனைவருமே இப்படித்தான் பிச்சைக்காரர்களைப் பார்ப்போம். ஆனால், நம்மிடம் உதவி கேட்டு வரும் அனைவரையுமே, இயேசுவாக பார்க்க வேண்டும் என்று நற்செய்தி அழைப்புவிடுக்கிறது. இயேசுவை நாம் பார்த்ததில்லை. அவருடைய தோற்றத்தை நாம் அறிந்திருக்கவில்லை. ஆனால், உதவி கேட்டு இயலாமையில் வரும் அனைவருமே, இயேசுவின் சாயலில் உள்ளவர்கள் என்பதை, இயேசுவின் வார்த்தைகள் நமக்கு தெளிவாக்குகிறது. இந்த நற்செய்தி இரண்டு எளிய சிந்தனைகளை நமது மனதில் பதிக்கிறது. 1. நாம் இயேசுவின் மனநிலையில் பார்க்க வேண்டும். 2. நாம் இயேசுவை அவரில் பார்க்க வேண்டும். இந்த இரண்டு மனப்பாங்கும் நம்மிடம் இருக்கிறபோது, நிச்சயம் நம்மால் மற்றவர்களை அன்பு செய்ய முடியும். மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியும்....