Category: இன்றைய சிந்தனை

நேர்மையுற்றோரின் வாழ்வு

கடவுளின் தூதர் மரியாளை வாழ்த்துகிறபோது, மரியாள் கலங்குகிறாள். “இந்த வாழ்த்து எத்தகையதோ” என்ற அச்சம் கொள்கிறாள். மரியாள் எதற்காக கலங்க வேண்டும்? கடவுளின் தூதரே அவரை வாழ்த்துகிறபோது, அவள் மகிழ்ச்சி தானே கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து, அவள் கலங்குவது எதற்காக? என்ற கேள்வி நிச்சயம் நமது உள்ளத்திலே எழும். யார் நம்மைப் புகழ்ந்தாலும், அதிலே மகிழ்ச்சி அடைவதை விட, அதில் நாம் எச்சரிக்கை உணர்வு கொண்டிருப்பது மிக முக்கியமானதாகிறது. யார் நம்மைப் புகழ்கிறார்களோ அவர்கள் மட்டில் கொண்டிருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வல்ல, நமது வாழ்வை இதே போன்று வாழ வேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வு நமக்குத் தேவைப்படுகிறது. இதுவரை சிறப்பாக வாழ்ந்திருக்கிறோம். இனியும், மற்றவர்களின் நல்ல வார்த்தைகளுக்கு ஏற்ப, புகழ்ச்சிக்கு ஏற்ப, நமது வாழ்வை வாழ வேண்டிய பொறுப்புணர்வு இங்கே நமக்கு தேவைப்படுகிறது. அந்த பொறுப்புணர்வு, இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்வை, இனிவரக்கூடிய நாட்களிலும் சிறப்பாக வாழ வேண்டிய, அந்த...

மனஉறுதி

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், கடவுள் மீது பற்று உள்ளவர்களும் தங்களது வாழ்வில் சந்திக்கும் சோதனை, பல மடங்கு வேதனையானது. ஏனென்றால், மக்களின் கேலிப்பேச்சுக்களும், உள்ளத்தைக் காயப்படுத்தும் பேச்சுக்களும் அடிக்கடி வாழ்வில் நடக்கக்கூடியதாக இருக்கும். கடவுள், கடவுள் என்று பின்னால் சென்றானே, கடவுள் இவனுக்கு என்னதான் கொடுத்தார், என்ற எகத்தாளப் பேச்சுக்கள், மக்கள் நடுவில் அன்றாடம், நாம் பார்க்கக்கூடிய நிகழ்வு. இப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் செக்கரியா மாட்டிக்கொண்டார். செக்கரியாக ஒரு குரு. கடவுளுக்கும், மனிதருக்கும் இடையே பாலமாக இருக்கக்கூடியவர். மக்களின் விண்ணப்பங்களை, தான் செலுத்தும் பலி மூலமாக, இறைவனிடம் எடுத்துச்சொல்கிறவர். அப்படிப்பட்ட, குருவுக்கு மிக்ப்பெரிய குறை வாழ்வில் இருந்தது. அதுதான் குழந்தை இல்லாத குறை. நிச்சயம் பலபேருடைய ஏளனத்திற்கு அவர் ஆளாகியிருப்பார். பலிசெலுத்துகிறபோதெல்லாம், தனக்காக, தன்னுடைய மனைவிக்காக மன்றாடியிருப்பார். ஆனால், ஒன்று தெளிவாகத்தெரிகிறது. அவர் சோர்ந்து போகவில்லை. உறுதியாக இருக்கிறார். எனவே தான், இத்தனை ஆண்டுகளானாலும், உண்மையான கடவுளை விட்டு விலகிச்செல்லாமல்...

இயேசு என்னும் மீட்பர் !

அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் என்பது வானதூதரின் செய்தி. இயேசு என்னும் பெயருக்கு மீட்பர் என்பது பொருள். இயேசு நம்மைப் பாவங்களிலிருந்து மீட்பவர் என்பதே அவரது பெயரின் பொருள். கிறிஸ்துமஸ் விழா தரும் செய்தியும் இதுவே. அவர் நம்மைப் பாவங்களிலிருந்து மீட்பார், விடுவிப்பார். நமது பாவங்களிலிருந்து நாம் நமது சொந்த முயற்சியினால் விடுதலை பெற முடியாது. நமது இயல்பே பாவம் செய்வதற்கேற்ற இயல்பாக அமைந்திருப்பதால், நமது சொந்த ஆற்றலால் விடுதலை பெறவும் இயலாது. எனவே, இயேசுவின் அருளை நாடுகிறோம். அவரது மீட்புக்காக வேண்டுகிறோம். இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, நமது வாழ்வில் அவரது மீட்பு நிறைவாகக் கிடைக்க வேண்டுமென்று சிறப்பாக மன்றாடுவோம். மன்றாடுவோம்: மீட்பு வழங்கும் நாயகனாம் இயேசுவே, எங்களைப் பாவத்திலிருந்தும், தீமைகள் அனைத்திலிருந்தும் விடுவிக்க வந்தீரே, உம்மைப் Nபுhற்றுகிறோம். உமது மீட்பு இந்த அருளின் காலத்தில் எம்மீது நிறைவாய் இறங்குவதாக....

உண்மையான உறவு

எந்த ஒரு மனிதரைப் பற்றி அறிய வரும்போது, மக்களிடையே எழக்கூடிய இயல்பான கேள்வி, இவருடைய குடும்பம் எது? இவர் பிறந்த ஊர் எது? போன்றவை. மத்தேயு நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியை யூதர்களுக்கு எழுதுகிறார். இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர் யூதர்களுக்கு அறிவிக்க வேண்டுமென்றால், அதற்கேற்றாற்போல, தன்னுடைய நற்செய்தியை அவர் எழுத வேண்டும். யூதர்களின் வாழ்வில் மையம் கொண்டிருக்கிற முக்கியமானவர்கள், இயேசுவுக்கு நெருக்கமாக இருந்தால், அதை வைத்து, அவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பது எளிதானது. எனவே தான், மத்தேயு நற்செய்தியாளர் ஆபிரகாமை, நம் ஆண்டவர் இயேசுவுக்கு தொடக்கமாக தருகிறார். ஆபிரகாம் யார்? எதற்காக ஆபிரகாமை இயேசுவின் தொடக்கமாக மத்தேயு நற்செய்தியாளர் எழுத வேண்டும்? ஆபிரகாம் இஸ்ரயேல் மக்களின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர். மிகப்பெரிய இறைவாக்கினராகக் கருத்தப்பட்டவர். அவர் வழியாகத்தான் கடவுள் தங்களை தேர்ந்து கொண்டதாக மக்கள் நம்பினர். அதையே வழி, வழியாக ஏற்றுக்கொள்ளவும் செய்தனர். ஆபிரகாமுக்கு இணையானவராக அவர்கள் வேறு எவரையும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை....

நமது சான்று எது ?

தனது பணி இறைவனின் பணிதான் என்பதற்கான சான்றுகளாக இயேசு முன்வைப்பவற்றை இன்று வாசிக்கிறோம். திருமுழுக்கு யோவான். யோவான் “இவரே இறைவனின் செம்மறி” என்று அறிவித்தார். தந்தை ஒப்படைத்த செயல்கள். எளியோருக்கு நற்செய்தி, நோயுற்றோருக்கு நலம், சிறைப்பட்டோருக்கு உரிமை வாழ்வு என்பவை இறைவனால் அனுப்பப்பட்டவரின் செயல்கள். இயேசு அவற்றைச் செய்தார். வானகத் தந்தை. “இவர் என்பார்ந்த மகன். இவருக்கு செவிசாயுங்கள்” என்ற தந்தையின் குரலை பலர் கேட்டிருந்தனர். மறைநூல். இயேசுவின் வாழ்வில் நடந்த பலவும் மறைநூலில் முன்குறித்தபடியே நிகழ்ந்திருந்தன. யூத முறைப்படி ஒருவருக்கு இரண்டு சாட்சிகள் போதும். ஆனால், இயேசு தனது பணியின் உண்மைத் தன்மையை மெய்ப்பிக்க மறுக்க இயலாத வகையில் நான்கு சான்றுகளை வழங்குகிறார். நாம் இறைவனின் விருப்பப்படியே வாழ்கிறோம் என்பதற்கு என்ன சான்றுகள் இருக்கின்றன என்று இத்தவக்காலத்தில் ஆய்வு செய்வோம். மன்றாடுவோம்: நிறைவின் நாயகனாம் இயேசுவே, உம்மைப் பற்றுகிறோம். மறைநூலின்படியும், இறைத்தந்தையின் விருப்பப்படியும் நீர் வாழ்ந்தீர். பணி செய்தீர். உம்மைப்...