Category: இன்றைய சிந்தனை

இயேசு காட்டும் வழியில் வாழ்வோம்

வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்? என்பது, வாழ்கிற ஒவ்வொருவரின் கைகளில் இருக்கிறது. இப்படித்தான் வாழ வேண்டும் என்றும் வாழலாம். எப்படியும் வாழலாம் என்றும் வாழலாம். ஆனால், நிறைவான மகிழ்ச்சி நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால், இயேசு காட்டுகிற ”இப்படித்தான் வாழ வேண்டும்” என்கிற கொள்கை தான், நமக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. இந்த உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள், அனைத்தையுமே ஒரே நேரத்தில் பெற்றுவிடத்துடித்துக் கொண்டிருக்கின்றனர். அனைத்தையும் பெற்றுவிட்ட பிறகு அதை எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பது தெரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அனைத்தையும் எவ்வளவு அதிகமாக சம்பாதிக்க வேண்டும், எவ்வளவு விரைவாக சம்பாதிக்க வேண்டுமோ அவ்வளவு விரைவாக சம்பாதித்தும் விடுகின்றனர். ஆனால், எந்த அளவுக்கு அதிகமாக, விரைவாகச் சம்பாதித்தார்களோ, அந்த அளவுக்கு அனுபவித்தார்களா? என்றால், நிச்சயமாக இல்லை. ஒரு பாத்திரத்தில் நமக்குப் பிடித்தமான உணவு இருக்கிறது. பல பேர் விருந்திற்கு வந்திருக்கிறார்கள். உடனடியாக, விரைந்து சென்று, நமக்குப்பிடித்த...

தொடர்ந்து நன்மை செய்வோம்

இயேசுவுக்கு எதிராக எதிர்ப்பு உச்சகட்டத்தை எட்டியிருந்த காலம். பரிசேயர்களும், சதுசேயர்களும் எப்படி இயேசுவை ஒழித்துக்கட்டலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த நேரம். இயேசு செல்கிற இடங்களுக்கு எல்லாம் சென்று, அவர் செய்கிற அத்தனையிலும் குற்றம் கண்டு அவருக்கு எதிராக சாட்சியங்களை அவர்கள் திரட்டிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஓய்வுநாளில் இயேசு கைசூம்பியிருக்கிற ஒருவனை குணப்படுத்துகிறார். குணப்படுத்துவது என்பது ஒரு வேலை. ஓய்வுநாளில் குணப்படுத்துவது என்பது வேலை செய்வதற்கு சமம். அதாவது ஓய்வுநாள் சட்டத்தை மீறுவதற்கு சமம். ஆனாலும், இயேசு ஓய்வுநாளில் அவனுக்கு சுகம் தருகிறார். இயேசு எதற்காக இவ்வளவு எதிர்ப்பையும் சம்பாதித்து ஓய்வுநாளில் குணப்படுத்த வேண்டும்? உண்மையிலே இயேசு அந்த மனிதனுக்கு சுகம் தரவேண்டுமென்றிருந்தால், மற்ற நாட்களில் இந்த புதுமையை செய்திருக்கலாம். இத்தனைநாட்கள் நோயினால் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிற மனிதனுக்கு ஒருநாள் பொறுத்திருப்பது ஒன்றும் கடினமில்லைதான். அப்படி அவர் அன்றே அந்த மனிதனுக்கு சுகம் தரவேண்டுமென்று நினைத்திருந்தாலும், மறைவான இடத்தில் அந்த மனிதனைக்கூட்டிக்கொண்டு போய் சுகம் கொடுத்திருக்கலாம்....

புனித வாழ்வு

உணர்வுகளின் வெளிப்பாடு தான் அன்பு. இந்த உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனையும் முழுமையாக அன்பு செய்தவர் தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. ஏழைகள், அடிமைகள், நோயாளிகள் என்று, இந்த சமுதாயம் ஒதுக்கி வைத்திருந்த விளிம்புநிலை மக்களை, அவராகவே சென்று சந்தித்து, அவர்களும் கடவுளின் பிள்ளைகள் அவர்களுக்கும் எல்லா உரிமைகளும், கடவுளின் அன்பும் இருக்கிறது என்பதை, நிறைவோடு வாழ்ந்து காட்டியவர் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. இன்றைய நற்செய்தியிலும் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 6-11), கடவுளின் அன்பு இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்பதை வாழ்ந்து காட்டுகிறார். குறைபாடுகள் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரையும் இந்த உலகம் இழிவாகத்தான் பேசும். அவர்களை ஒதுக்கித்தான் வைக்கும். அவர்களிடத்தில் பேசுகிறவர்களையும் இழிவாக நடத்தும். இதனாலேயே பலபேர் அப்படிச்செய்வது தவறு என்று தெரிந்தும், நமக்கேன் தேவையில்லாத வம்பு? என்று, இந்த உலகத்தோடு வாழப்பழகி விடுகிறார்கள். ஆனால், இயேசு அந்த எல்லையை மீறிச்செல்கிறார். அந்த...

கிறிஸ்துவே முழுமுதற்செல்வம்

”கிறிஸ்துவின் பொருட்டு அனைத்தையும் குப்பையென்று கருதுகிறேன்” என்று, பவுலடியார் சொல்வார். இன்றைய நற்செய்தியின் சாராம்சத்தைத்தான், பவுலடியார் நிச்சயம் தன் வாழ்வில் அனுபவித்து இதனைச் சொல்லியிருக்க வேண்டும். இயேசுவின் சீடராக இருக்க வேண்டியவர் எப்படி இருக்க வேண்டும்? அவருக்குரிய தகுதிகளாக இயேசு கிறிஸ்து எதிர்பார்ப்பது என்ன? எப்படி நாம் இயேசுவின் சீடர்களாக மாற முடியும்? இந்த கேள்விகளுக்கான பதில் அனைத்தும், இன்றைய வாசகத்தில் காணப்படுகிறது. கிறிஸ்துவை முழுமுதற்செல்வமாக நாம் பெற வேண்டுமென்றால், நமது வாழ்வில் நாம் பலவற்றை இழந்துதான் ஆக வேண்டும். ஆனால், கிறிஸ்துவை நாம் பெறுகிறபோது, நமக்கு வேறு எதுவும் நிச்சயம் தேவையில்லை தான். ஏனென்றால், கிறிஸ்து தான் நமது வாழ்வின் இலக்காக இருக்கிறார். ஓட்டப்பந்த வீரன் ஒருவனுக்கு வெற்றி ஒன்று தான் இலக்காக இருக்க முடியும். அதற்காக, அவன் எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறான். அந்த வெற்றி ஒன்று தான் வாழ்வின் இலக்காக இருக்கிறது. அதை அடைகிறபோது, மற்ற இழப்புகள்,...

வாழ்வு தரும் இறைவார்த்தை

இறைவார்த்தை நமது வாழ்விற்கு வழிகாட்டியாக இருந்து நம்மை வழிநடத்துவதாக இருக்கிறது என்பதை, இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். ஓய்வுநாளைப் பற்றிய ஒரு பிரச்சனை, பரிசேயர்களால் எழுப்பப்படுகிறது. அந்த பிரச்சனைக்கு தீர்வு எப்படி காண்பது? எது சரி, எது தவறு என்பதை எப்படிச் சொல்வது. இறைவார்த்தை வழிகாட்டியாக இருக்கிறது. இயேசு தனது சீடர்களைப் பிரச்சனையிலிருந்து காப்பாற்ற, இறைவார்த்தையை மையப்படுத்திச் சொல்கிறார். பிரச்சனைகளுக்கு தீர்வாக, நிச்சயம் இறைவார்த்தை இருக்கிறது என்பதை, இது நமக்குச் சொல்கிறது. இறைவார்த்தையை மையப்படுத்தித்தான் இயேசுவின் வாழ்க்கை அமைந்திருந்தது. தொடக்கத்தில் இயேசுவின் குழந்தைப்பருவ நிகழ்ச்சிகளின் முடிவில், மறைநூல் வாக்கு நிறைவேறவே, இவ்வாறு நிகழ்ந்தது என நற்செய்தியாளர்கள் சொல்வது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இயேசு சோதிக்கப்படுகிறபோது, அந்த சோதனையை எதிர்த்து வெற்றிபெறுவதற்கு, இயேசுவிற்கு உதவியாக இருந்தது இறைவார்த்தை தான். தனது பணிவாழ்வை ஆரம்பிக்கிறபோது, கடவுளின் பணிக்காக தனது வாழ்வையே அர்ப்பணிக்கிறவர் எதனை இலக்காகக் கொண்டு வாழ வேண்டும் என்பதை,...