Category: தேவ செய்தி

ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போருக்கு பேரன்பு நிலைத்திருக்கும்

திருப்பாடல் 103: 13 – 14, 15 – 16, 17 – 18 பழைய ஏற்பாட்டிலே கடவுள் இஸ்ரயேல் மக்களோடு ஏழு உடன்படிக்கைகளைச் செய்துகொண்டார் என்று விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள். கடவுள் நமது முதல் பெற்றோரோடு செய்து கொண்டது முதல் உடன்படிக்கை. தொடக்கநூல் முதல் அதிகாரத்தில் கடவுள் மனிதர்களைப் படைத்து, இந்த உலகத்தை அவர்களது பராமரிப்பில் விட்டுவிடுகிறார். இரண்டாவதாக, நோவாவோடு கடவுள் உடன்படிக்கைச் செய்துகொள்கிறார். இனிமேல் இந்த மண்ணகத்தை நீரால் அழிக்க மாட்டேன் என்று உடன்படிக்கைச் செய்து கொள்கிறார். மூன்றாவதாக, ஆபிரகாமோடு கடவுள் உடன்படிக்கைச் செய்து கொள்கிறார். ஆபிரகாமுக்கு பல வாக்குறுதிகளைக் கடவுள் கொடுக்கிறார். ஆபிரகாம் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கும் அவா் வாக்குறுதிகளைக் கொடுக்கிறார். நான்காவதாக, அவர் இஸ்ரயேல் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கை ”பாலஸ்தீன அல்லது நில உடன்படிக்கை” என்று அழைக்கப்படுகிறது. இது இணைச்சட்டம் 30: 3 – 4 ல், தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கடவுள் உலகின் அனைத்து மூலைகளிலும்...

உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்

திருப்பாடல் 119: 12, 16, 18, 27, 34, 35 கடவுள் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு பத்து கட்டளைகளை வழங்கினார். இந்த கட்டளைகள் பத்து கட்டளைகளாக தரப்பட்டிருந்தாலும், அந்த கட்டளைகள் காட்டும் நெறிமுறைகளாக நாம் பார்ப்பது ஒன்றே ஒன்று தான். அதுதான் அன்பு. இந்த அன்பு என்கிற நெறிமுறையின் அடிப்படையில் தான் அனைத்து கட்டளைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நம்மால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும். உதாரணமாக, “களவு செய்யாதிருப்பாயாக” என்பது பத்துக்கட்டளைகளுள் இருக்கக்கூடிய ஒரு கட்டளை. வெளிப்படையாக இது அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பதாக இருந்தாலும், சற்று ஆழமாக நாம் சிந்தித்துப்பார்க்கிறபோது, அதனுள் இருக்கிற உண்மையான பொருளை நாம் உணர்ந்து கொள்ள முடியும். ஒரு பொருளை உழைத்து ஒருவர் சம்பாதிக்கிறார். அந்த பொருள் அவருக்குரியது. அவருடைய உழைப்பில் நாம் பெறக்கூடியது. மற்றவரின் பொருளை நாம் திருடுகிறபோது, அவரிடத்தில் நமக்கு அன்பு இல்லை என்பதுதான் உண்மையான அர்த்தம். அந்த மனிதரிடத்தில் நமக்கு...

நற்பேறு பெற்றவர் யார்?

திருப்பாடல் 1: 1 – 2, 3, 4, 6 நற்பேறு பெற்றவர் யார்? என்கிற கேள்வியோடு தொடங்குகிறது இன்றைய திருப்பாடல். நற்பேறு என்கிற வார்த்தை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தை. உள்ளத்தின் நிறைவை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தை. நமது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நாம் எப்படி வாழ வேண்டும்? என்று அழைப்புவிடுக்கிற வார்த்தை. இந்த உலகத்தில் வாழும் அனைவருமே மகிழ்ச்சியான வாழ்விற்கு என்ன செய்ய வேண்டும்? என்று தான் முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். அத்தகைய மகிழ்ச்சியான வாழ்விற்கு அழைப்பு விடுப்பதுதான் இந்த திருப்பாடல். பொல்லாரின் சொல்லோ, வாழ்வோ நம்மை நெருங்காதபடிக்கு பார்த்துக்கொண்டால் நமது வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்வாக அமைந்துவிடும் என்பதுதான், ஆசிரியரின் தீர்வாக இருக்கிறது. இன்றைக்கு பொல்லாரைத் தேடி சிறைக்கே செல்லக்கூடிய கேவலமான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொல்லார் என்று தெரிந்திருந்தும், சுயநலத்திற்காக, சுயஇலாபத்திற்காக, மானத்தை விட்டு, வெட்கத்தை விற்று, வாழ்வை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறவர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே காற்று...

எங்கும்! எல்லோரிடமும்!

மாற்கு 9 :38 – 40 எவனொருவன் நல்ல மனிதனாக வாழ்கிறானோ அவன் இயேசுவின் பெயராலேயே அனைத்தையும் செய்கிறான். அவன் அவரின் பெயரை வேணுமென்றால் பயன்படுத்தலாம். பயன்படுத்தாமலும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக இயேசுவின் மதிப்பீடுகளை, விழுமியங்களை விட்டுக் கொண்டு ஒருவரால் நல்ல மனிதனாக வாழமுடியாது. இவ்வுலகில் யாரெல்லாம் நல்லதை எண்ணுகிறார்களோ, செய்கிறார்களோ அவர்களோடு நாமும் இணைய வேண்டும். இந்த இணைதலுக்கு சாதி, மதம், இனம் மற்றும் வேறு எந்த வேறுபாடுகளுமே தடையாக இருக்க முடியாது. இதனைத்தான் புகழ்பெற்ற இறையியலாளர் கார்ல் ரானர் ‘அறியப்படாத கிறித்தவர்கள்’ (Anonymous Christians) என்கிறார். கிறித்துவை ஏட்டளவில் அறிந்து அவரை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தனது மனசாட்சியின் படி நல்லது செய்பவர் அவரது அருகில் நெருக்கமாகவே இருக்கிறார். திருமுழுக்குப் பெற்று தினமும் திருப்பலி வந்தவர்களோடு மட்டுமல்லாது எவரெல்லாம் கிறித்தவ மதிப்பீடுகளான அன்பு, நீதி, மன்னிப்பு….. என்று வாழ்கிறார்களோ அவர்கள் அனைவரோடு கிறித்து உயிரோடு இருந்து இயக்கிக் கொண்டுதான்...

நம்பிக்கையை அதிகமாக்கும்….

மாற்கு 9 : 14 – 21 இன்றைய நற்செய்தி நம் இறைநம்பிக்கைக்கு வலுவூட்டும் விதமாக அமைந்திருக்கின்றது. இச்சிறுவனைப் பிடித்துள்ள பேய் ஆற்றல் உள்ளது. அது அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் நுரை தள்ளிப் பல்லைக் கடிக்கிறான். அவனது உடலும் விறைத்துப் போகின்றது. இப்பேயின் ஆற்றலின் முன் சீடர்களின் ஆற்றல் குறைவாகவே இருக்கின்றது. இக்குறைவிற்கு காரணம் என்ன? என்றும், இந்த சிறுவனை எப்படி நிறைவாக்க முடியும்? என்றும் ஆண்டவர் இயேசு தெளிவுபடுத்துகிறார். இன்றைய சீடர்களாகிய நமக்கு இது எப்படி முக்கியம் என்றால் நாம் பிறருக்கு பிடித்திருக்கின்ற தீய சக்திகளை விரட்டுவதைக் காட்டிலும் நம்மிடம் நம்மைச் சார்ந்து இருக்கின்ற தீய சக்திகளை விரட்டியடிக்க வேண்டும். “என்னிடம் நம்பிக்கைக் கொள்வோர் என்னைவிடப் பெரிய காரியங்களைச் செய்வார்” ( யோவான் 14:12) என்ற இறை வார்த்தையை முதலில் நம்ப வேண்டும். நம்பிக்கை என்பது, ‘என்னால் இயலாது, இறைவா’ உம்மால் மட்டுமே எல்லாம் இயலும் என்று அவரது...