Category: தேவ செய்தி

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

அன்பே இவ்வுலகின் அச்சாணி. இதனை மதங்கள் மட்டும் வலியுறுத்தவில்லை. அறிஞர்களும், சான்றோர்களும், புலவர் பெருமக்களும் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக உலகப் பொதுமறை தந்த செந்நாப்போதரும், ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்’ என்கிறார். இப்படி அன்பினைப் பற்றிப் பேசாதவர்களே இவ்வுலகில் இல்லை எனலாம். சாதாரண மாந்தர்களே இவ்வாறு கூறும்போது, அன்பினையே தனது பேச்சாக, மூச்சாக, உணர்வாக, உயிராகக் கொண்டிருக்கும் நம் அன்பின் கடவுள் இயேசு எவ்வளவு பேசியிருப்பார். உலகின் எல்லாச் சமயங்களும் வலியுறுத்துகின்ற ஒருபொன் விதி, பொதுவிதி என்றால் “பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்பதாகத்தான் இருக்க முடியும். எடுத்துக்காட்டாக, இந்துமதம், (மகாபாரதம் 5:1517) இசுலாம் (சன்னா) யூதமதம் (தால்முத் சாபத் 3) கன்சிபூசியனிசம் (15:23) தாவோயிசம் (தாய் ஷாங் கான்யாய் பைன்) எனப் பல மதங்களைக் குறிப்பிடலாம். ஆனால் கிறித்தவத்தின் தனித்தன்மை என்னவென்றால், புதிய ஏற்பாட்டு நூல்கள் அனைத்திலும் ‘அன்பு’ பரவிக்கிடக்கின்றது. ‘கடவுள்...

குருவுக்கே சிலுவை, சீடனுக்கு செங்கோலா?

மாற்கு 9 : 2- 13. சீடர்களின் ‘மெசியா என்றால் யார்? என்ற புரியாத குழப்பத்திற்கு மத்தியிலும் மானிடமகனின் மரணத்தைப் பற்றி கேட்டு சோர்ந்து போன சீடர்களுக்கு ஒரு தெளிவையும், உற்சாகத்தையும் கொடுப்பதே இன்றைய நற்செய்தி. தன்னை தன் சீடர்களைப் புரிந்து கொள்ளாத நிலையில் குறைந்தப்பட்சம் தன் நெருங்கிய சீடர்களாவது புரிந்து கொள்ளட்டும் என்று அவர்களை மட்டும் அழைத்துச் சென்று இந்த உருமாற்றத்தை ஆண்டவர் வெளிப்படுத்துகின்றார்.  தொல்லைகளாய் துவண்டு, அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டு, என்ன செய்;ய வேண்டுமென்றே தெரியாத சூழ்நிலையில் எல்லாம், நமக்கு ஒரு குரல் கேட்கவேண்டும். ‘இவரே என் அன்பார்ந்த மகன்” இவருக்குச் செவிசாய்ப்பாயாக” இந்த குரலின் முழு வடிவம் தான் நமது திருவிவிலியம். நமது திருவிவிலியத்தின்படி நடந்தால் நாமும் சீடர்களைப் போன்று இயேசுவின் மாட்சிமைப் பொருந்திய நிகழ்வுகளில் பங்கெடுக்க முடியும். அவருடைய வார்த்தைகளை வாழ்வாக்க முடியும்.  இந்த உருமாற்றம் இன்னொரு முக்கியமான பாடத்தை நமக்கு தருகின்றது. இயேசு...

வேர்களைத்தேடி…

மத்தேயு 16 : 13- 20 அதிகாரம் என்பது ஆட்டுவித்து ஒடுக்குவதற்கல்ல! அன்போடு வழிநடத்துவதற்கு! அதிகாரம் என்பது வாட்டி வதைப்பதற்கல்;ல! வாஞ்சையோடு இருப்பதற்கு! அதிகாரம் என்பது திட்டித் தீர்ப்பதற்கல்ல! தீர்க்கமான திட்டமிடுவதற்கு! இன்றைய நாள் நம் தாய்த் திருஅவையின் முதல் திருத்தந்தை பேதுருவின் தலைமைப்பீடத்தினை நினைவு கூர்ந்து பெருமையோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந் நாளினை நாம் உண்மையிலேயே கொண்டாட வேண்டுமா என்ற கேள்வி பலரின் எண்ணத்தில் உதிப்பது இயற்கையே. ஆனால் இன்று, இக்கட்டான காலகட்டத்தில் இன்னும் சிறப்பாக கொண்டாடக் கடமைப்பட்டிருக்கிறோம். காரணம், வெளியிலிருந்து வரும் பிரச்சனையைக் காட்டிலும் கிறிஸ்தவர்களுக்குள் இருக்கின்ற சவால்கள் மிக அதிகம். இன்று நம் வேர்களை மறந்து வாழும் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் சிலர் நம் வேர்களை திட்டமிட்டு மூடி மறைக்கிறார்கள். வெட்டி அழிக்கிறார்கள். நம் வேர்களைத் தேடி இன்றைய கிறிஸ்தவர்களை அழைத்துச் சென்றாலே பல பிரிவினை சபையைச் சார்ந்தவர்களுக்கு உண்மை எது? என புலப்பட்டுவிடும். அவர்களின் சாயம் வெளுத்து...

அழைப்பும் மறுஅழைப்பும்

மாற்கு 8: 22- 26 இயேசு செய்கின்ற ஒவ்வொரு புதுமையும் பல பாடங்களை நம்முன் படம் பிடித்துக் காட்டுகின்றது. குறிப்பாக அவர் செய்த ஒவ்வொரு அற்புதமும் தன்னுடன் இருந்த, அவரைப் பின்பற்றி வந்த ஒவ்வொரு சீடருக்கும் சீடத்துவ வாழ்க்கையை எடுத்து காட்டுவது போல அமைகிறது. ஒரே சொல்லால் அவன் குணம் பெறாது சில செயல்களால் சிறிது சிறிதாக குணம் பெறுகிறான். இரண்டு முறை அவன் கண்களில் ஆண்டவர் தன் கைகளை வைத்து குணம் கொடுக்க வேண்டியதாயிற்று. இந்த மொத்த நிகழ்ச்சியையும் இயேசுவின் சீடர்களின் வாழ்க்கையோடு ஒத்து போவதாகவே காணமுடிகிறது. முதலில் தன்னிடம் வந்தவரை ஊருக்கு வெளியே அழைத்துச் செல்கிறார். சீடர்களும் இயேசுவால் அழைக்கப்பட்ட உடன் அனைத்தையும் விட்டுவிட்டு (இவ்வுலகவாழ்வினை) அவரோடு சென்றனர். (மாற்கு 1 : 20) முதலில் அழைக்கப்பட்டவர்கள் அனைவருமே ஆண்டவரை அவரது இறப்பிற்கு முன்பு தனியே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். ஆண்டவரோடு இருந்து, உண்டு, உடுத்து, உறங்கியவர்களின் அகக்கண்கள் முழுமையாகத்...

மழுங்கி போய்விட்டோமா?

மழுங்கி போய்விட்டோமா? இன்றைய நற்செய்தியை 15- ஆம் இறைவார்த்தையை வாசித்துவிட்டு மீண்டும் 14 ஆம் வசனத்தை வாசித்து, தொடர்ந்தால் இன்னும் நேர்த்தியாக இருக்கும். எப்பொழுதுமே இயேசு தனிமையில் தன் சீடர்களோடு இருக்கும் போது அவர்களுக்கு பலவற்றைக் கற்பிப்பார். அப்படித்தான் இன்றைய நற்செய்தியில் ஏற்கனவே அடையாளம் கேட்டு சோதித்த பரிசேயர்களையும் ஏரோதியர்களையும் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்று தன் பாடத்தை இயேசு கிறிஸ்து கொஞ்சம் கடினமாக ஆரம்பிக்கும் பொழுதே சீடர்கள், சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா? என்ற விவாதத்தில் வரும் குழந்தையைப் போல சாப்பாடு தான் முக்கியமென்று தங்களிடம் உள்ள அப்பத்தைப் பற்றி மாறி மாறி கண்களாலும் சாடைகளினாலும் விவாதிக்க ஆரம்பித்த விட்டார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆண்டவர் இன்னும் அதிகமாக எரிச்சலுற்று தன் இதயக் குமுறலை வெளிப்படுத்துகிறார். தான் ஏற்கனவே செய்த அப்பம் பலுகுதலைச் சொல்லி அவர்களைச் சாடுகிறார். அவர் செய்த அனைத்து அருங்குறிகளையும் உட்பொருளையும் பரிசேயரும் பொதுமக்களும் புரிந்து கொள்ளாததில்...