Category: தேவ செய்தி

நன்மைக்கு அமோக வெற்றி!

லூக்கா 21:12-19 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உலகில் வாழும் காலத்திலிருந்து கடைசி வரை நன்மைக்கும் தீமைக்கும் இடையே போட்டி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அந்த போட்டிகள் ஏதோ குறிப்பிட்ட காலத்தில் மட்டும் நடைபெறுவதல்ல. மாறாக தினம் தினம் நடைபெறுகின்றன. நாள்தோறும் நடைபெறும் இப்போட்டியில் நன்மை வெற்றி பெற்றால் நாம் சாதித்திருக்கிறறோம் என்று அர்த்தம். தீமை வெற்றி பெற்றால் நாம் சரிந்திருக்கிறோம் என்று அர்த்தம். பரிசோதித்துப் பார்க்க இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை பரிவோடும் பாசத்தோடும் அழைக்கின்றது. கிறிஸ்தவர்கள் நாம் நன்மையை வெற்றி பெற செய்ய வேண்டும். நம் வாக்குகள் அனைத்தையும் நன்மைக்கு அளிக்க வேண்டும். நன்மையை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்....

இறைவன் விடுக்கும் எச்சரிக்கை

திருவெளிப்பாடு 14: 14 – 20 ”உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும். ஏனெனில், அறுவடைக் காலம் வந்துவிட்டது. மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது” என்று, வானதூதர் கோவிலிலிருந்து வெளியே வந்து, மேகத்தின் மீது வீற்றிருந்தவரை நோக்கிக் கூறுகிறார். இந்த காட்சி, உலக முடிவைப் பற்றி எடுத்துரைக்கிறது. திருவழிபாட்டின் கடைசி வாரத்தில் இருக்கிற நமக்கு, வாழ்வைப் பற்றிய பயத்தை அல்ல, மாறாக, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை வரவேற்பதற்கான ஆயத்தமாக, இந்த வாசகம் நமக்கு தரப்படுகிறது. விவிலியத்தில், இயேசு எப்போதும் கடவுளை இரக்கமுள்ளவராக அறிமுகப்படுத்துகிறார். கடவுள் நல்லவர், இரக்கமுள்ளவர் என்கிற செய்தி, விவிலியம் முழுமைக்குமாக ஆங்காங்கே காணப்படுகிறது. இன்றைக்கு பல் வியாபாரத்திற்காக கடவுளை, கொடுமையானவராக சித்தரிக்கிறார்கள். மக்களை பயமுறுத்தி, அதன் மூலமாக இலாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். குற்றம் செய்கிறபோது, பயம் நிச்சயமாக இருக்க வேண்டும். அதேவேளையில், கடவுளின் இரக்கத்தின் மீதும் ஒருவருக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். யூதாசைப் போல கடவுளின் இரக்கத்தில்...

குவித்து வைப்பது பாவம்

லூக்கா 21:1-4 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நற்செய்தி வாசகத்தில் ஏழைக் கைம்பெண் போட்ட காணிக்கையை ஆண்டவர் இயேசு கிறிஸ்து மிகவும் பாராட்டுகிறார். ஏன்? அவர் தனக்கு பற்றாக்குறை இருந்தும் அனைத்தையும் போட்டார். அடுத்து என்ன செய்வது என்பது தெரியாதிருந்தும் காணிக்கையளித்தார். மற்றவர்கள் தங்களுக்கென்று நிறைய சேமித்து வைத்து மிகவும் கொஞ்சமாக காணிக்கை போட்டனர். ஆனால் இவரோ தனக்கென்று எதையும் சேமிக்காமல் இருந்த அனைத்தையும் போட்டுவிட்டார். ஆகவே இயேசுவின் சிறப்பு ஆசீரைப் பெறுகின்றார். அன்புமிக்கவர்களே! நாம் நமக்கென்று குவித்து சேர்த்து வைப்பது பாவம். நமக்கு தேவையானது, நமக்கு குடும்பத்திற்கு தேவையானது போக மீதமிருப்பதை கடவுளுக்கு கொடுக்க வேண்டும், மற்றவரோடு பகிர வேண்டும். இரண்டு வழிகளில் அதை செய்யலாம்....

கிறிஸ்து அரசர் பெருவிழா

இவரைப் போல வருமா? யோவான் 18:33-37 இறையேசுவில் இனியவா்களே! கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை ஆர்வத்தோடும் ஆசையோடும் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கிறிஸ்து அரசர் பெருவிழா நல்வாழ்த்துக்களை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் கிறிஸ்து அரசரின் ஆட்சி நடைபெறுவதாக! கிறிஸ்து அரசர் திருநாள், திருஅவையில் உருவாக்கப்பட்டதன் பின்னணியை நாம் சிந்திக்கும்போது, இன்னும் சில தெளிவுகள் கிடைக்கின்றன. முதலாம் உலகப்போர் முடிந்திருந்தாலும், உலகத்தில் இன்னும் பகைமை, பழிவாங்கும் வெறி ஆகியவை அடங்கவில்லை. இந்த உலகப்போருக்கு ஒரு முக்கிய காரணமாய் இருந்தது, அரசர்கள், மற்றும் தலைவர்களின் பேராசை. நாடுகளின் நிலப்பரப்பை விரிவாக்கவும், ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் தங்கள் காலனிய ஆதிக்கத்தின் வழியே, இன்னும் பல கோடி மக்களைக் கட்டுப்படுத்தவும் வேண்டுமென்ற வெறி, ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்தது....

உயிர்த்தெழ இரண்டு மட்டும் செய்வோம்…

லூக்கா 20:27-40 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அனைவருக்கும் இந்த உலகை விட்டு செல்ல கூடாது, இளமைக் குறையாமல் பல ஆண்டுகள் இந்த உலகில் வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு. அந்த ஆசையை யாரும் பெற முடியாது. பிறந்த அனைவரும் இறந்தே ஆக வேண்டும். ஆனால் மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இறந்த அனைவரும் கிறிஸ்துவோடு ஒருநாள் உயிர்ப்போம் என்பதுதான். கிறிஸ்துவோடு உயிர்த்தெழ வேண்டுமென்றால் கிறிஸ்துவுக்கேற்ற இரண்டு காரியங்களை செய்ய வேண்டும் என சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். கேட்போம். செய்வோம். உயிர்த்தெழுவோம். 1. முழுமைக்கு கொண்டு வா எந்த செயல் செய்தாலும் முழு அன்போடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் முழு அறிவோடும் செய்ய...