Category: தேவ செய்தி

வேலை நிறைய இருக்கு வேலைக்கு வாங்க…

லூக்கா 10:1-12 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இயேசு காண விரும்பிய இறையாட்சி இன்னும் நிறைவேறவில்லை. அதற்கான வேலைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. இன்னும் நிறைய வேலைகள் இருக்கின்றன. அந்த வேலையைச் செய்வதற்கு வாங்க என அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இறையாட்சியைக் கொண்டு வருவது என்பது இயேசுவின் இன்பக்கனவு. அந்த கனவை நிறைவேற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அநத கனவை இரண்டு விதங்களில் நாம் நிறைவேற்றலாம். 1. தினமும் தேடல் இறையாட்சிப் பணிக்காக நான் என்ன செய்ய வேண்டும்? என்ற தனிப்பட்ட தேடல் என்பது ஒவ்வொருக்கும் இருக்க வேண்டும். அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இருக்க வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து இந்த வேலையைச் செய்ய வேண்டும். அப்போதுதான்...

காலம் தாழ்த்தாதே… கடவுளின் கைப்பிடி

லூக்கா 9:57-62 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கடவுளைத் தேடுவதற்கும் கடவுளோடு பேசுவதற்கும் ஏன் கடவுளாயும் மாறுவதற்கும் நமக்கு பலவிதமான வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த வாய்ப்புகளை எல்லாம் நாம் சரியாக பயன்படுத்துவதில்லை. அதனால் நாம் இழந்த ஆசீர்வாதங்கள் எண்ணிலடங்கா. இந்த நாள் கடவுளோடு சேருவதற்கான நாள். ஆகவே இந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்த நம்மை வருக! வருக! என அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். கடவுளோடு நாம் இழந்த வாய்ப்புகளை திரும்ப பெற, அவரின் ஆசீரோடு வாழ இரண்டு விதமான முயற்சிகளை கையிலெடுக்க வேண்டும். 1. கடவுளுக்கு முக்கியத்துவம் நற்செய்தியில் பார்க்கின்ற போது கடவுளுக்கு முதன்மையான முக்கியத்துவம் கொடுக்காததைப் பார்க்கிறோம். அவர்கள் தங்களுடைய சுயநல காரியங்களில்...

கரிசணையோடு காவல் செய்வோம்…

காவல்தூதர்கள் திருவிழா மத்தேயு 18:1-5.10 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்று அன்னையாம் திருச்சபை காவல் தூதர்களின் விழாவைக் கொண்டாடுகின்றது. கடவுள் தான் படைத்த ஒவ்வொரு மனிதரையும் பாதுகாத்து வழிநடத்தும்படி காவல் தூதரை ஒவ்வொருவருக்கும் துணையாகக் கொடுத்துள்ளார் என்பது எமது கத்தோலிக்க மரபிலான நம்பிக்கையாகும். கடவுள் ஒவ்வொரு நாளும், நம்மைக் காக்கின்றார் என்பதும், கடவுள் எப்பொழுதும் நம்மைக் கண்காணிக்கின்றார் என்ற உண்மையும் இதிலிருந்து நன்கு விளங்குகின்றது. காவல்தூதர்களின் வல்லமையை உணர்ந்த புனிதர்களின் கூற்று இதோ: 1. தூய அகுஸ்தீனார் “கடவுளின் குரலாக இந்தக் காவல் தூதர்கள் இருந்து செயற்படுகின்றார்கள். நாம் கடவுள் விரும்பியதைச் செய்கின்றபோது நம்மைத் தட்டிக் கொடுத்து மனதிலே நிறைவான மகிழ்ச்சியைக் கொடுத்து அவர்களும் மகிழ்ந்து...

பேசக் கற்றுக்கொள்பவரே பெரியவர்

லூக்கா 9:46-50 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்களாகிய நாம் வாழ்க்கையில் பலவற்றைக் கற்றுக்கொள்கிறோம். பலவற்றை ஆர்வமாக தெரிந்துக்கொள்ளும் நாம் எப்படி பேச வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள தவறிவிடுகிறோம். குழந்தைகள் இனிய குரல் எல்லோரையும் ஈர்க்கிறது. அந்த இனிய குரலில் பேசுபவர் தான் பெரியவர். என்வே தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் சிறு குழந்தையை உதாரணமாகத் தருகின்றார். அவர்களைப் போல இனிமையாக பேசி நம்மோடிப்பவர்களை இழுக்க, ஈர்க்க அழைக்கின்றார். நாம் சரியாக பேசவில்லை என்றால் அதனால் பல விதமான தீமைகள் விளைகின்றன. கோபமாக பேசினால் குணத்தை இழக்க நேரிடும். வேகமாக பேசினால் அர்த்த்ததை இழக்க நேரிடும். வெட்டியாக பேசினால் நம் வேலை இல்லாமல்...

திறமையானவர்களே தோற்காதீர்கள்…

மாற்கு 9:38-43,45,47-48 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 26ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். ஆனால் நம்மூர் ஆண்மகன்களோ, பார் இல்லாத ஊரில் குடியிருக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு குடிப் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. காலையில் 10 மணிக்கு டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படுகின்றன. இரவு 10 மணிக்கு மூடப்படுகின்றன. காலையிலேயே இவர்கள் இப்படி என்றால், மாலையும், அதையும் தாண்டி இரவிலும் இவர்கள் எப்படி இருப்பார்கள். இது நமது உடலுக்கும் கேடு, நமது வீட்டிற்கும் கேடு என்பதை எப்போது உணர்வார்கள். ஒரு கதை உள்ளது, அதாவது ஒரு தேவதை தனது கையில் ஒரு குழந்தையையும், ஒரு மதுபானப் பாட்டிலையும் வைத்துக் கொண்டு ஒருவனிடம் சென்று, ஒன்று இந்த...