Tagged: இன்றைய சிந்தனை

என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது

விசுவாச வாழ்விற்கும், உலக வாழ்விற்கும் இடையேயான போராட்டத்தை மிக தெளிவாக எடுத்துக்காட்டுவதுதான் இன்றைய திருப்பாடல்(திருப்பாடல் 42: 1 – 2, 43: 3, 4). இந்த உலக வாழ்க்கையின் ஏமாற்றங்கள், தோல்விகள், விரக்தி, பயம் விசுவாச வாழ்விற்கான சவாலாக தென்படுகிறது. ஆனால், இவையனைத்தையும், விசுவாசம் என்கிற ஆன்மீக ஆற்றல் ஒன்றுமில்லாததாக மாற்றிவிடுகிறது. பிரச்சனைகள் இருந்தாலும், அவற்றை எதிர்கொள்வதற்கு தேவையான ஆற்றலையும், அதனை பொருட்படுத்தாமல் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஆழப்படவும் இது நமக்கு உதவியாக இருக்கிறது. கடவுள் மீது எப்போது நமக்கு ஈடுபாடு, ஆர்வம், தாகம் ஏற்படுகிறதோ, அப்போதுதான் விசுவாசம் நமக்குள்ளாக தோன்ற ஆரம்பிக்கிறது. வாழ்க்கையில் வரக்கூடிய எந்தவித பிரச்சனைகளையும் எதிர்கொள்வதற்கு இது நமக்கு உதவியாக இருக்கிறது. கடவுள் மீது நமக்கு ஈடுபாடே இந்த பிரச்சனைகளோடு தான், தோன்ற ஆரம்பிக்கிறது. பிரச்சனைகளின் தொடக்கத்தில், எதையும் நம்மால், தனி ஆளாக எதிர்கொள்ள முடியும் என்று நாம் நினைக்க ஆரம்பிக்கிறோம். நம்முடைய பலத்தில் நாம்...

நல்ல ஆயன் இயேசு

பழைய ஏற்பாட்டில் கடவுள் ஓர் ஆயனாக சித்தரிக்கப்படுகிறார். திருப்பாடல் 23: 1 சொல்கிறது: “ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை”. திருப்பாடல் 77: 20 “மோசே, ஆரோன் ஆகியோரைக்கொண்டு உம் மக்களை மந்தையென அழைத்துச்செல்கின்றீர்” ஆண்டவரால் அபிஷேகம் செய்யப்பட்ட மெசியாவும் ஆயனாக உருவகப்படுத்தப்படுகிறார். இறைவாக்கினர் எசாயா 40: 11 ல் பார்க்கிறோம்: “ஆயனைப்போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார். அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார். சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்”. பழைய ஏற்பாட்டில் நாம் பார்க்கின்ற இந்த உவமை புதிய ஏற்பாட்டிலும் தொடர்வதை இன்றை நற்செய்தி எடுத்தியம்புகிறது. பாலஸ்தீனத்தில் வாழ்ந்த இடையர்களின் வாழ்வு மற்ற நாடுகளில் வாழ்ந்த இடையர்களை விட சற்று வித்தியாசமானதாக இருந்தது. அவர்கள் தங்களோடு தோல்ப்பையை கொண்டு சென்றனர். அதில் உணவுக்காக காய்ந்த ரொட்டிகளும் உலர்ந்த பழங்களும் வைத்திருந்தார்கள். பாதுகாப்புக்காக கவண் ஒன்றையும் வைத்திருந்தார்கள். எதிரி விலங்குகளிடமிருந்து மந்தையைக் காப்பாற்றவும்,...

நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா!

இயேசு தன் சீடர்களை நோக்கி உருக்கத்துடன் கேட்ட இந்தக் கேள்வியை இன்று இயேசு நம்மை நோக்கிக் கேட்பதாக எடுத்துக்கொள்வோம். இன்றைய நாள்களில் பல்வேறு காரணங்களுக்காக இறைவனைவிட்டு, ஆலய வழிபாடுகளைவிட்டு, இறைமதிப்பீடுகளை விட்டுப் பிரிந்துபோகும் மனிதரின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்கும் இளையோரின் எண்ணிக்கை குறைகிறது. இறைபக்தி இல்லாமல், செபம் இல்லாமல், உலக நாட்டங்களில் ஈடுபட்டு வாழும் மனிதர் அனைவரும் இயேசுவை விட்டுப் பிரிந்து செல்கின்றனர். அவர்களை நோக்கி இயேசு கேட்கிறார்: “நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” நாமோ ஆண்டவரையே என்றும் பற்றிக்கொள்வோமாக!” நானும் என் வீட்டாருமோ, ஆண்டரையே என்றும் வழிபடுவோம்” என்று யோசுவா துணிவுடன் அறிக்கையிட்டதுபோல, நாமும் ஆண்டவரையே பற்றிக்கொண்டு வாழ உறுதி பூணுவோம். மன்றாடுவோம்: நிறைவின் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். உலக இன்பங்கள், செல்வம், பல்வேறு விதமான சோதனைகள் இவற்றின் மத்தியிலும், நான் உம்மை விட்டுப் பிரிந்துவிடாத அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே...

இது என் உடல்

இயேசுவின் சதை என்பது அவரது மனிதத்தன்மையை பறைசாற்றுவதாக இருக்கிறது. யோவான் தனது முதல் திருமுகத்தில் இதை தெளிவாக விளக்குகிறார். ”இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடமிருந்து வருவது. இவ்வாறு கடவுளிடமிருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள். இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடமிருந்து வருவதல்ல. இதுவே எதிர்க்கிறிஸ்துவிடமிருந்து வரும் தூண்டுதல்”. யோவான் இயேசு நம்மில் ஒருவர் என்கிற செய்திக்கு அழுத்தம் தருகிறார். இயேசுவில் கடவுளை நாம் அறிகிறோம். இதுநாள்வரை கடவுள் எப்படி இருப்பார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், இயேசுவில் நாம் கடவுளை கண்கூடாக பார்க்கிறோம். நமது வாழ்க்கைச்சூழலில் துன்பங்கள், வறுமை, நஷ்டங்கள், பலவீனங்கள், போராட்டங்கள் இயல்பாக வருவதுண்டு. அந்த நேரத்தில் நாம் இயேசுவை நினைத்துப்பார்க்க வேண்டும். அவர் நமது சுமைகளை தாங்கியிருப்பதை எண்ண வேண்டும். அவர் நமக்காகத்தான் இந்த உடலை எடுத்தார். நமக்காக தன்னையே அவர் கையளித்தார். நமக்காக...

கடவுள்தாமே கற்றுத் தருவார்

கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்” என்னும் இறைவாக்கை இன்றைய நற்செய்தி வாசகத்தில்(+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 44-51) இயேசு மேற்கோள் காட்டுகிறார். நாமும் இந்த வசனத்தையே இன்று தியானிப்போம். ஆபிரகாம் தன் ஒரே மகன் ஈசாக்கைப் பலியிட மலையுச்சிக்கு அழைத்துச் சென்றபோது, சிறுவன் ஈசாக் தன் தந்தையிடம் கேட்ட கேள்வி: பலிப்பொருள் எங்கே?”. அதற்கு ஆபிரகாம் அளித்த பதில்: கடவுள்தாமே தருவார்”. கடைசியில், கடவுளே ஒரு செம்மறி ஆட்டைப் பலிப்பொருளாக அளித்தார் என்பதை நாம் அறிவோம். நாம் நடக்க வேண்டிய பாதையைக் கடவுளே நமக்குக் காட்டுவார். நாம் பேச வேண்டிய சொற்களைக் கடவுளே நமக்குச் சொல்லித் தருவார். நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய மதிப்பீடுகளைக் கடவுளே நமக்குக் கற்றுத் தருவார். இதுவே நமது நம்பிக்கை. இதுவே நமது பட்டறிவு. எனவே, கடவுளைச் சார்ந்தே வாழ்வோம். அவரே நம்மை வழிநடத்துவார். மன்றாடுவோம்: வழியும், ஒளியும், உண்மையுமான இயேசுவே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து...