Tagged: இன்றைய சிந்தனை

இயேசுவின் நற்செய்தி தரும் படிப்பினை

யோவான் நற்செய்தியாளரின் முக்கியமான கவலைகளில் ஒன்று, இயேசுவை ஒருசிலரே நம்புகிறார்கள் என்பது. ஒரு சிலரே இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதும், அவரது கவலையாக இருந்தது. ஆனால், இயேசுவை நம்புகிறவர்கள், உடனே அவரது வார்த்தையையும் நம்புகிறவர்களாக இருந்தது அவருக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. முற்காலத்தில் ஒரு ஆவணத்தை ஒருவர் ஏற்றுக்கொள்வதாக இருந்தால், அந்த ஆவணத்தின் கீழே, தான் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக, தனது அச்சைப் பதிப்பார். அந்த அச்சு, ஒருவர் அந்த ஆவணத்தை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக இருந்தது. அந்த அச்சு தான், அந்த ஒப்பந்ததத்திற்கு, குறிப்பிட்ட நபர் கட்டுப்பட்டவர் என்பதை அறிவிப்பதாக இருந்தது. அதேபோல, இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்கள், அவரையும், அவரது வாழ்வையும், தாங்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்வையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் அர்த்தம். இன்றைக்கு நாம் இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்களாக இருந்தால், அவரையும், அவர் நமக்கு காட்டுகிற, அறிவுறுத்துகிற வாழ்வையும் ஏற்றுக்கொள்வதாகத்தான் அர்த்தமாக இருக்கும். அத்தகைய ஒரு வாழ்வை நாம் நேர்மறையான எண்ணத்தோடு வாழ,...

இருளும், உயிர்ப்பின் ஒளியும் !

இயேசு நிக்கதேமுவுடன் நிகழ்த்திய உரையாடல் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் தொடர்கிறது. அதில் இறைமகன் இயேசு உலகின் ஒளியாகச் சுட்டப்படுகிறார், உலகின் பாவ இயல்புகள் ஒளியை எதிர்க்கும் இருளாகக் காட்டப்படுகின்றன. ஒளி-இருள் பற்றி இன்று சிந்திப்போம். 1. இயேசு உலகின் ஒளி: “உலகை மீட்கவே கடவுள் தம் மகனை இந்த உலகிற்கு அனுப்பினார். உலகிற்குத் தண்டனை அளிக்க அல்ல” என்கிறார் இயேசு. இயேசுவே அந்த மீட்பு. மீட்பின் உருவமாகத் தம்மை உலகின் ஒளி என்கிறார் இயேசு. “உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள்” என்கிறார் ஆண்டவர். உயிர்ப்பின் மக்கள் இயேசுவின் பாஸ்கா ஒளியில் வாழ விரும்புகின்றனர். தங்கள் பணிகள் அனைத்தையும் இயேசுவோடு இணைந்தே செய்கின்றனர். 2. உலகின் இருள்: இயேசுவை நம்பாமல், உலகின் தீமைகளைச் செய்துவாழ்பவர்கள் இருளின் மக்கள். இவர்கள் இயேசுவை நாடுவதில்லை. “ஒளி உலகிற்கு வந்திருந்தும், தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர்...

நற்செய்தி அறிவிப்பு

ஒரு நூல் எழுதுவது என்பது இப்போது எளிதான செயலாக இருக்கலாம். ஆனால், சுமார் இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னால், அது கடினமானது மட்டுமல்ல, அது மிகப்பெரிய சவாலான செயல். ஆனாலும், இயேசுபைப்பற்றிய நற்செய்தி அனைவருக்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காக, எல்லா சவால்களையும் துணிவோடு மேற்கொண்டு, இன்றைக்கு நாம் கிறிஸ்துவைப்பற்றி அறிவதற்கான மிகப்பெரிய ஆதாரமாக இருக்கக்கூடிய இந்த மாற்கு நற்செய்தியை எழுதிய, யோவான் மாற்கு உண்மையில் மாமனிதர். நற்செய்தி நூல் எழுதுவது மட்டும் கடினமானது அல்ல, அது எழுதப்படுகிற காலச்சூழலும், நற்செய்தியாளரின் வீரதத்தையும், துணிவையும் நமக்கு எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்ட காலம். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் பலவிதமான சித்திரவதைகளுக்கு உள்ளான காலம். இயேசுவைப்பற்றி அறிவதற்கு, அறிவிப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட காலம். இந்த காலக்கட்டத்தில் நிச்சயமாக நற்செய்தி எழுதுவது என்பது மிகப்பெரிய சவால். சவால்களை துணிவோடு எதிர்கொண்டு எழுதுவதுதான் உண்மையான எழுத்துப்பணி. இது அறிவை வெறுமனே பகிர்ந்து கொள்ளக்கூடிய முயற்சி அல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்தில் மிகப்பெரிய புரட்சியை...

மீண்டும் பிறப்போம்

யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் போதனைகளைப் போதிக்கும் விதத்தில் தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறார். முதலில் இயேசு முன் ஒரு கேள்வி வைக்கப்படுகிறது. இயேசு அதனைக்கேட்டவர் புரியாத வண்ணம் அதற்கு விளக்கம் கொடுக்கிறார். சில சமயங்களில் கேட்டவர், அதனைத்தவறாகவும் புரிந்து கொள்கிறார். மீண்டும் இயேசு அதற்கு விளக்கம் கொடுத்துப் புரிய வைக்கிறார். இந்தப்பாணி யோவான் நற்செய்தியில் பல பகுதிகளில் காணப்படுகிறது. நிக்கதேமுடனான உரையாடலிலும் இதே பாணியை இயேசு பின்பற்றுகிறார். மறுபிறப்பு என்கிற வார்த்தை நிக்கதேமுக்கு குழப்பத்தையும், தவறாப்புரிந்து கொள்ளவும் தூண்டுகிறது. இதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. ஏனென்றால், கிரேக்கத்தில் “born anew” என்கிற வார்த்தைக்கு மூன்று அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. 1. தொடக்கத்திலிருந்து…2. மீண்டும்….3. மேலிருந்து… மறுபிறப்பு என்று இயேசு பொருள்படுத்துவது, அடிப்படையில் ஏற்படும் மாற்றம். கடவுளின் அருளால் ஏற்படும் மாற்றம். It is a radical change in a person. It is a change in a Person’s Being....

உயிர்த்த இயேசு தரும் சமாதானம்

யூதர்களுக்கு அஞ்சி சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தனர். சீடர்கள் தங்கியிருந்த அறை, இயேசுவோடு கடைசி இரவு உணவு உண்ட அறையாக இருக்கலாம். அவர்கள் இருந்தது மேல் அறை. யூதர்களின் கோபம், வெறுப்பு முதலானவை சீடர்களுக்கு நன்றாகத்தெரியும். இயேசுவை ஒழித்தாயிற்று. இனி எப்படியும், அடுத்த இலக்கு தாங்கள்தான் என்பது அவர்களுக்கு நன்றாகத்தெரியும். எந்தநேரமும் தலைமைச்சங்க காவலர்கள் வந்து தங்களை கைது செய்யலாம் என்று நினைத்தனர். எனவே, மேலறையிலிருந்து அவர்களுக்கு கேட்கும் ஒவ்வொரு சத்தமும், அவர்களின் இருதயத்தை கலங்கடித்துக்கொண்டிருந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் உயிர்த்த இயேசு அவர்களுக்குத் தோன்றுகிறார். உயிர்த்த இயேசு அவர்களுக்கு சொல்லும் செய்தி: உங்களுக்கு அமைதி உண்டாகுக!. கலங்கிப்போயிருந்த சீடர்களின் கலக்கத்தை இயேசு அறியாதவரல்ல. அவர்களின் வேதனையை இயேசு உணராதவர் அல்ல. அவருக்கு சாவின் பயம் நன்றாகத்தெரியும். ஏனென்றால், சாவை எதிர்நோக்கியிருந்த அவரே, கெத்சமெனி தோட்டத்தில், திகிலும் மனக்கலக்கமும் அடைந்திருந்தார். ‘எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது’...