Tagged: இன்றைய சிந்தனை

உறவின் முக்கியத்துவம்

உறவு என்பது எவ்வளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த உறவில் விரிசல் ஏற்பட்டால், அதை சரிசெய்வதற்கு நாம் எந்தளவுக்கு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தியில் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20) இயேசு நமக்குத்தருகிறார். இந்த உலகத்தில் இருக்கிற மனிதர்கள் அனைவருமே, தனித்தன்மை வாய்ந்தவர்கள். சிந்திக்கக்கூடிய ஆற்றல் மிக்கவர்கள். கருத்துக்களை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தவர்கள். பலவிதப் பிண்ணனிகளைக் கொண்டவர்கள். இந்த சூழல், பலவிதமான கருத்துக்கள் வெளிவருவதற்கு காரணமாக இருக்கிறது. அப்படி வருகிறபோது, ஒருவருடைய கருத்தும், மற்றவருடைய கருத்தும் முரண்பாட்டைச் சந்திக்கிறது. அங்கே உறவுச்சிக்கல் உண்டாகிறது. அந்த உறவுச்சிக்கல் பொதுவானது, இயற்கையானது என்பதை நாம் அடிப்படையில் உணர வேண்டும். நம்மில் வேற்றுமை இருப்பது நாம் அறிந்த ஒன்று. அனைவருமே ஒரே மாதிரியாகச் சிந்திக்க முடியாது. அப்படி நமக்குள்ளாக கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறபோது, அது உறவு விரிசலுக்கு அடிகோலிடுகிறபோது, அதை நாம் எளிதாக விட்டுவிடக்கூடாது. அந்த உறவு விரிசலை சரிசெய்ய நாம்...

மரியாவின் விண்ணேற்பும், அக விடுதலையும் !

மரியாவின் விண்ணேற்பும், அக விடுதலையும் ! இன்று அன்னை மரியாவின் விண்ணேற்பு விழாவையும், நம் நாட்டின் விடுதலைப் பெருவிழாவையும் ஒருசேரக் கொண்டாடுகிறோம். இந்நாளில் நமது புறவிடுதலை, அகவிடுதலை இரண்டையும் பற்றிச் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். அந்நிய ஆதிக்கத்திலிருந்து நாம் விடுதலை பெற்று 63 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டாலும்கூட, நமது நாடு போதுமான வளர்ச்சி பெறாததற்குக் காரணம் நமது அகவிடுதலை இன்மையே. அன்னை மரியா நமக்கு அகவிடுதலையின் மாதிரி ஆக இருக்கிறார். அகவிடுதலையின் கூறுகள் யாவை? அச்சத்தினின்று விடுதலை குற்ற உணர்வு, பழி உணர்வு போன்ற தீவிர உணர்வுகளிலிருந்து விடுதலை தீவிர ஆசைகளிலிருந்து விடுதலை பொருள்கள், மனிதர்கள், இடங்களின்மீதுள்ள பற்றுகளிலிருந்து விடுதலை கவலையினின்று விடுதலை யார் அக விடுதலை பெற்றிருக்கிறார்களோ, அவர்கள் புற விடுதலையற்ற சூழலிலும்கூடக் கவலையின்றி, அகமகிழ்வுடன் வாழ்வார்கள். எடுத்துக்காட்டாக, நெல்சன் மண்டேலா நிறவெறியின் காரணமாக 27 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்தாலும், அவரது அக விடுதலையை அவர்களால் பறிக்க முடியவில்லை. சிறைக் கம்பிகளுக்கு உள்ளேயும்...

கொடுப்பதை இறையாசீராக எண்ணுவோம்

யூதர்களுக்கு என்று ஒரே ஒரு ஆலயம் தான். அதுதான் யெருசலேம் தேவாலயம். மற்றநாட்களில் செபிப்பதற்கும், இறைவார்த்தையைக் கேட்பதற்கும் அவர்கள் செபக்கூடங்களைப் பயன்படுத்தினர். யெருசலேம் ஆலயத்தை நிர்வகிப்பதற்கு ஏராளமான பணம் தேவைப்பட்டது. ஏனெனில், ஒவ்வொருநாளும் காலையிலும், மாலையிலும் இளம்செம்மறி ஆடு பலியிடப்பட வேண்டும். பலிப்பொருளுக்கு ஏராளமான மாவும், எண்ணெயும் தேவைப்பட்டது. சாம்பிராணியும், குருக்களுக்கான ஆடம்பர உடைக்கும் செலவு அதிகமாக இருந்தது. இவற்றிற்கெல்லாம் பணம் வேண்டும். இவற்றிற்கெல்லாம் பணம் வேண்டும். எனவேதான், விடுதலைப்பயணம் 30: 13 கூறுவது போல, 20 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் ஒவ்வொருவரும், வருடத்திற்கு ஒருமுறை 2 திராக்மா, கோவில் வரியாக செலுத்த வேண்டும். இது இரண்டு நாள் கூலிக்கு இணையான கிரேக்க வெள்ளி நாணயம். ஒவ்வொரு ஆண்டும், ஆதர் மாதத்தில்(நமக்கு மார்ச் மாதம்), பாலஸ்தீன நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், கோவில் கட்டுவதற்கென நினைவூட்டும் அறிவிப்பு சொல்லப்படும். 15 வது நாளில் கோவில் வரி கட்டுவதற்கென ஒவ்வொரு ஊரிலும் அலுவலகங்கள் திறக்கப்படும்....

கவலைகளைத் தவிர்த்து அவரில் நம்பிக்கை வைப்போம்

”சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்” என்று திருப்பாடல் 23: 4 சொல்கிறது. கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைத்து வாழ்கிறவர்களின் வாழ்க்கை மட்டும்தான் நிறைவுள்ள வாழ்வாக இருக்க முடியும். துன்பங்கள், துயரங்கள், கவலைகள் இவையனைத்தும் வாழ்வின் அங்கம். இதுதான் வாழ்க்கை. அந்த துன்பங்களை எதிர்கொள்வதற்கான ஆற்றலைக் கடவுள் நமக்கு தருகிறார். துன்பங்களை நாம் எதிர்கொள்ள வேண்டுமென்றால், நம்முடைய ஆற்றலில், திறமையில் நம்பிக்கை வைக்காமல், கடவுளின் வல்லமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். கடவுளின் வல்லமையில் நம்பிக்கையில் வைத்தவர்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள் என்பது இஸ்ரயேல் மக்களின் வாழ்விலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடிய மிகப்பெரிய பாடமாக இருக்கிறது. இதையே புனிதர்களின் வாழ்வும் நமக்கு பறைசாற்றுகிறது. ஒவ்வொரு புனிதர்களுமே, துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அந்த துன்பங்களுக்கு நடுவிலும் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தார்கள். காரணம், அவர்கள் கடவுள் மீது வைத்திருந்த ஆழமான நம்பிக்கை. ”துணிவோடிருங்கள்” என்ற...

நம்பிக்கையினால் வாழ்வு !

கி.மு. 600 ஆம் ஆண்டையொட்டி யூதா நாட்டில் வாழ்ந்த இறைவாக்கினர்தான் அபக்கூக்கு. வடக்கிலிருந்து பாபிலோனியர்கள் படையெடுத்து வந்து தாக்கும் ஆபத்து எப்போதும் சூழ்ந்திருந்தது. யூதாவிலோ நாட்டின் ஒற்றுமையும், நீதியும் குலைந்து, வலியோர் எளியோரை ஒடுக்கிக்கொண்டிருந்தனர். இத்தகைய சூழலில்தான் அபக்கூக்கு இறைவாக்குப் பணியில் ஈடுபடுகிறார். கயவர்களை ஏன் இறைவன் தண்டிக்காமல் விட்டுவைக்கிறார்? பொல்லாதவர்கள் நேர்மையாளர்களை விழுங்கும்போது இறைவன் ஏன் மௌனமாய் இருக்கிறார்? என்னும் கேள்விகளை அபக்கூக்கு எழுப்பி, அவற்றுக்கு விடை காண முயல்கிறார். பன்னெடுங்காலமாக மானிட இனத்தைத் தட்டி எழுப்பும் கேள்வி அல்லவா இது! ஏன் இந்த உலகில் தீமை? ஏன் தீயவர்கள் தழைக்கிறார்கள், நல்லவர்கள் துன்புறுகிறார்கள்? இக்கேள்விக்கு விடை காண முயலும் இறைவாக்கினருக்கு ஆண்டவர் தரும் பதில்: நம்பிக்கையோடிருங்கள். எனவேதான், மிகப் பிரபலமான இந்த வார்த்தைகளோடு இன்றைய முதல் வாசகம் நிறைவுக்கு வருகிறது: “நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்”. மன்றாடுவோம்: நம்பிக்கையின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நேர்மையுடையவர்கள் தம் நம்பிக்கையினால்...