Tagged: இன்றைய சிந்தனை

வாழ்வியல் செபம்

இறைமகன் இயேசு கற்றுக்கொடுத்த இந்த செபம் ஓர் அழகான இறையியலைக் கொண்ட செபம். ஒரு செபம் எப்படி இருக்க வேண்டும்? என்பதைச் சொல்வதைக்காட்டிலும், நமது அன்றாட வாழ்க்கை எப்படி அமைந்திருக்க வேண்டும்? என்பதை, நமக்கு கற்றுத்தரக்கூடிய செபம். நமது வாழ்வில், நமது இன்றைய நிலை என்ன? கடவுளைத் தேடுகிறோம். உணவிற்காக உழைக்கிறோம். சோதனைகளைச் சந்திக்கிறோம். தீய சிந்தனைகளுக்கு பலியாகிறோம். சற்று ஆழமாகச் சிந்தித்தால், இதுதான்நமது வாழ்க்கை. இதனைக் கடந்து வாழ்கிறவர்கள், சிந்திக்கிறவர்கள் ஒரு சிலர் மட்டும் தான் இருக்கிறார்கள். நமது வாழ்வில் கடவுள் தான் எல்லாமே என்பதை, இயேசு சிறப்பாக வெளிக்காட்டுகிறார். கடவுள் தான் நமது வாழ்வின் மையம். இது யூதர்களின் இறையியல். எதைச் செய்தாலும், எது நடந்தாலும், ஏதாவது ஒரு வழியில், வகையில் அதில் கடவுள் இருக்கிறார் என்று அவர்கள் நம்பினார்கள். எனவே, கடவுள் தான் நமது வாழ்வின் மையமாக இருக்க வேண்டும். அதற்கு அடுத்த தேவையாக, நமக்கு உண்ண...

நிலைவாழ்விற்கான போதனை

நிலையான வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்பது தான் இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி. இயேசு அதற்கு எளிதான பதிலைத் தருகிறார். திருச்சட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ, அதனைச் செய், நீ நிலையான வாழ்வை பெற்றுக்கொள்வாய் என்று சொல்கிறார். இந்த உலகத்தில் இருக்கிற எல்லா மக்களின் நோக்கமும், குறிக்கோளும் நிலையான வாழ்வை அடைவதுதான் அதனை அடைவதற்காகத்தான் நாம் பல வழிகளில் முயன்று கொண்டிருக்கிறோம். அதைத்தான், திருச்சட்ட அறிஞரின் கேள்வியும் நமக்கு எடுத்துரைக்கிறது. இந்த கேள்வியை திருச்சட்ட அறிஞர் எதற்காக கேட்டார்? அவர் இந்த கேள்வியை கேட்கலாமா? ஏனென்றால், அவர் கடவுளின் சட்டத்தை அல்லும் பகலும் தியானிக்கக்கூடியவர். அதனை மக்களுக்குப் போதிக்கக்கூடியவர். இப்படி கடவுளின் வார்த்தையைப் போதிக்கக்கூடிய திருச்சட்ட அறிஞரே, நிலைவாழ்விற்கான வழியைத் தெரியாமல் இருந்தால், அவர் எப்படி மக்களுக்குப் போதிக்க முடியும்? இன்றைக்கு போதனை என்பது அடுத்தவர்க்கு மட்டும் தான், எனக்கு இல்லை என்கிற மனநிலையை இது எடுத்துக்காட்டுகிறது. இன்றைய...

பொறுப்பு

இஸ்ரயேல் நாடு கடவுளின் திராட்சைத்தோட்டமாகப் பார்க்கப்பட்டது. ”படைகளின் ஆண்டவரது திராட்சைத்தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே” (எசாயா 5: 7). திராட்சைத்தோட்டங்கள் கரடிகளிடமிருந்தும், திருடர்களிடமிருந்தும் காப்பாற்றப்பட முள்வேலிகளால் அடைக்கப்பட்டிருந்தது. அதேபோல திராட்சைப்பழங்களிலிருந்து திராட்சைச்சாறு எடுக்க, ஒவ்வொரு திராட்சைத்தோட்டங்களிலும் குழிகள் வெட்டப்பட்டிருந்தன. அதேபோல திருடர்களைக்கண்காணிக்கவும், வேலைசெய்கிறவர்கள் தங்கவும் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இயேசு வாழ்ந்த காலத்தில் பாலஸ்தீனம் வசதி வாய்ப்புகளற்ற ஒரு பகுதியாக இருந்தது. பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள் தங்க இயலாத இடமாக அது இருந்தது. எனவே, நிலக்கிழார்கள் திராட்சைத்தோட்டத்தை யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு, குத்தகைப்பணம் வாங்குவதில் மட்டும் தான் குறியாக இருந்தனர். குத்தகைப்பணம் மூன்று வகைகளில் ஏதாவது ஒன்றில் பெறப்பட்டது. பணமாகவோ, திராட்சைப்பழங்களாகவோ, விளைச்சலில் குறிப்பிட்டப்பகுதியாகவோ பெறப்பட்டது. இயேசு இந்த நற்செய்தியை சமயத்தலைவர்களுக்கு சொல்கிறார். அதாவது, எவ்வாறு இஸ்ரயேலை ஆண்டுவந்த தலைவர்கள் இறைவாக்கினர்களுக்குச்செவிசாய்க்காமல், இறுதியில் அவருடைய ஒரே மகனையே கொல்ல இருக்கிறார்கள் என்பதை இந்த உவமை நமக்கு அறிவிக்கிறது. நாம் தான் பொறுப்பாளிகள் என்பதற்காக, நாம் நினைத்ததைச்...

சீடர்களின் பயிற்சிக்காலம்

சீடர்கள் தங்களது பயிற்சி பணிக்காலம் முடிந்து ஆண்டவரிடத்தில் மகிழ்ச்சியோடு திரும்பி வருகிறார்கள். அவர்கள் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. அவர்கள் தங்கள் பணிகளுக்குச் செல்கிறபோது, நம்பிக்கை இல்லாமல் சென்றார்கள். இயேசுவைப்போல தங்களாலும் புதுமைகள் செய்ய முடியுமா? மக்களின் எதிர்ப்புக்களை மீறி, நற்செய்தி அறிவிக்க முடியுமா? தங்களை மக்கள் மதிப்பார்களா? இயேசுவைப்போல ஞானத்தோடும், அறிவோடும் பேச முடியுமா? போன்ற பல கேள்விகள் சீடர்களின் உள்ளத்தில் எழுந்திருந்தது. ஆனால், வேறு வழியில்லை. இயேசு அனைத்து சீடர்களும் செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டதனால், அவர்கள் தங்களுக்கு குறிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றார்கள். திரும்பி வருகிறபோது, அவர்களது அனுபவம் மகிழ்ச்சியானதாக இருக்கிறதை, சீடர்களின் உற்சாகமான வார்த்தைகளில் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. ஒருவிதமான பதற்றத்தோடு, பதைபதைப்போடு பணிக்குச் சென்ற சீடர்கள், மகிழ்ச்சியாக திரும்பி வந்தார்கள். இவ்வளவு நாள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். கடவுளின் பராமரிப்பைப்பற்றியும், அவரது அளவுகடந்த இரக்கத்தைப்பற்றியும் இயேசு சொல்வதை வெறுமனே கேட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போதுதான் அவர்களே நேரடியாக உணர்ந்திருக்கிறார்கள். நிச்சயமாக...

மனம்மாற அழைப்புவிடுக்கும் புதுமைகள்

ன்றைக்கு ஏராளமான புதுமைகளும், அற்புதங்களும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. திருப்பலியில் அப்பம், இயேசுவின் திரு உடலாக மாறக்கூடிய புதுமை, கன்னி மரியாளின் காட்சிகள், புனிதர்களின் பரிந்துரைகள் மூலமாக நோயாளிகள் குணமாகக்கூடிய புதுமைகள் என ஏராளமான புதுமைகள் நடந்தேறிக்கொண்டேயிருக்கிறது. இந்த புதுமைகளின் நோக்கம் என்ன? எதற்காக புதுமைகள் நடக்க வேண்டும்? இந்த கேள்விகளுக்கு விடையாக வருவது தான், இன்றைய நற்செய்தி வாசகம். புதுமைகள் என்பது ஒருவரின் ஆற்றலை வெளிப்படத்தக்கூடியது அல்ல. மாறாக, கடவுளின் வல்லமை வெளிப்படக்கூடிய ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வு, கடவுள் பெரியவர் என்பதைக் காட்டுவதற்காக அல்ல. கடவுளின் இரக்கத்தை நாம் அதிகமாகப் புரிந்து கொள்வதற்காக. நமது வாழ்க்கை மாற்றம் பெறுவதற்காகத்தான் புதுமைகள் நடந்தேறுவதாக இயேசுவின் வார்த்தைகளிலிருந்து அறிய வருகிறோம். திருந்த மறுத்த நகரங்களில் இயேசு பல புதுமைகளைச் செய்திருக்கிறார். அந்த புதுமைகள் கடவுளின் இரக்கத்தைக் குறித்துக்காட்டுவதற்காக செய்யப்பட்ட புதுமைகள். மக்கள் கடவுளை கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக நிகழ்த்தப்பட்ட புதுமைகள்....