Tagged: இன்றைய சிந்தனை

கடவுளோடு இணைந்திருப்போம்

எண் 72 என்பது யூதர்களுக்கு ஓர் அடையாள எண். மூப்பர்கள் 72 பேரை இஸ்ரயேல் மக்களுக்கு அதிகாரிகளாக, பெரியவர்களாக ஏற்படுத்துகிறார். எண்ணிக்கை 11: 16 ”ஆண்டவர் மோசேயிடம் சொன்னது: எழுபதுபேரை என்னிடம் கூட்டிவா. அவர்கள் மக்களுள் உனக்குத் தெரிந்தவர்களாகவும், பெரியோர்களாகவும் அதிகாரிகளாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்”. யூதத்தலைமைச்சங்கத்திலும் 72 உறுப்பினர் இருந்தார்கள். உலகத்தில் இருக்கிற மொத்தநாடுகளின் எண்ணிக்கையும் 72 இருப்பதாக யூதர்கள் நம்பினர். லூக்கா நற்செய்தியாளர் இயேசுவை அனைவருக்கும் பொதுவானவராக, மீட்பராக அறிமுகப்படுத்துவதால், இந்த எண்ணைப்பயன்படுத்துகிறார். இயேசுவின் இந்தப்போதனை போதிக்கக்கூடியவர்களுக்கான ஒழுங்குகளைத்தருகிறது. போதிக்கக்கூடியவர்கள் பொருட்களைச் சேர்த்து வைக்க ஆசைப்படக்கூடாது. அவர்களுக்கு கடவுள் தான் சொத்து. அதேபோல போகிற வழியில் யாருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம் என்று சொல்லப்படுவத, தங்களுடைய இலக்கிலிருந்து அவர்கள் விலக அது காரணமாகிவிடக்கூடாது என்பதற்காக. கிறிஸ்துவை நோக்கிச்செல்கின்ற நம்மிலிருந்து நாம் எந்த காரணத்தைக்கொண்டும் விலகக்கூடாது. நமது எண்ணங்கள், சிந்தனைகள், நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்துமே கிறிஸ்துவை மையப்படுத்துவதாக இருக்க வேண்டும்....

அருங்குறிகளும், அடையாளங்களும்

இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த மக்களை ஒட்டுமொத்தமாக தீய தலைமுறையினராகக் குறிப்பிடுகிறார். எதற்காக இயேசு அவர்களை இப்படிச்சொல்ல வேண்டும்? அவர்கள் செய்த தவறு என்ன? பொதுவாக, அந்த மக்கள் யாரையும் நம்புவதற்கு அற்புதங்களைச் செய்யச்சொன்னார்கள். ஒருவரை நம்புவதற்கு அவர்களின் செய்கின்ற மாய, தந்திரங்கள் தான் அளவுகோல். அப்படி அவர் செய்யவில்லை என்றால், அவர் நம்புவதற்கு உகந்தவர் அல்ல என்பது அவர்களின் கண்ணோட்டம். இயேசுவையும் அத்தகைய கண்ணோட்டத்தோடு மக்கள் பார்க்கிறார்கள். அவர்கள் மத்தியில் இயேசு பல புதுமைகளைச் செய்திருக்கிறார். அவர்கள் நம்புவதற்கு அவர் செய்த புதுமைகளே போதும். ஆனாலும், அவர்கள் இயேசுவிடத்திலே அருங்குறிகளைச் செய்யச்சொல்கிறார்கள். இது இயேசு முதல்முறையாக அலகையால் சோதிக்கப்பட்ட நிகழ்வை நினைவுபடுத்துகிறது. கல்லை அப்பமாகவும், மலையிலிருந்து கீழே குதிக்கவும், அலகையை வணங்கவும் சொல்கிற அந்த சோதனைகளில், இயேசுவை இறைமகன் என அறிந்திருந்தும், இயேசுவை சோதிப்பதற்காக இவைகளை அலகை சொல்கிறது. அதேபோல்தான், மக்களுடைய எண்ணங்களும். கடவுளை நாம் சோதிக்க முடியாது. கடவுளின்...

அழைப்புக்கேற்ற வாழ்வு வாழுவோம்

யூதப்பாரம்பரியப்படி விருந்தினர்களுக்கு இரண்டு முறை அழைப்பு கொடுக்கப்படுகிறது. விருந்து ஏற்பாடு செய்யப்படுவதற்கு முன்பாக, பொதுவான ஒரு அழைப்பு முதலிலும், விருந்து ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு மற்றொரு முறையும் விருந்தினர்கள் அழைக்கப்படுவார்கள். முதல் முறையே அழைப்பு கொடுக்கப்படுவதால், விருந்தினர்கள் எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டியது அவா்கள் காட்டும் மரியாதையைக் குறிக்கிறது. தயார் இல்லையென்றால், அழைப்பை அவமதிப்பதாக பொருள். இந்த விருந்து உவமை யூதர்களை மையமாக வைத்துச் சொல்லப்படுகிறது. யூதர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம். கடவுள் அவர்களை தனது இனமாகத் தேர்ந்தெடுத்தார். ஆனால், கடவுளின் மகன் இந்த உலகத்திற்கு வந்தபோது, அவர் பின்னால் அவர்கள் செல்லவில்லை. மாறாக, உதாசீனப்படுத்தினார்கள். எனவே, அவர்கள் அதற்கான விளைவை நிச்சயமாக சந்திக்க வேண்டும். இங்கு, விருந்தை உதாசீனப்படுத்திய அழைக்கப்பட்டவர்கள் தலைவரின் கோபத்திற்கு ஆளாகி அழிந்து போகிறார்கள். விளைவு பயங்கரமானதாக இருக்கிறது. கடவுளின் மகனை அடையாளம் கண்டுகொண்டு, கடவுளைப்பற்றிக்கொள்ளவில்லை என்றால், யூதர்களும் இதே விளைவைச் சந்திக்க நேரிடும். ஒவ்வொருவருமே...

உணர்விலிருந்து உண்மைநிலைக்கு….

இன்றைய நற்செய்தியிலே (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28) உணர்வுகளால் உந்தப்பட்ட ஒரு பெண்ணைப் பார்க்கிறோம். உணர்வுகளால் உந்தப்பட்ட அவள், இயேசுவைப் பெற்றேடுத்த தாயைப்புகழ்கிறாள். உணர்வுகள் நல்லது தான். ஆனால், உணர்வு அளவில் நாம் நின்றுவிடக்கூடாது. அதையும் தாண்டி, உண்மை நிலைக்கும், யதார்த்த நிலைக்கும் நாம் செல்ல வேண்டும் என்பதை இயேசு நமக்குக்கற்றுத்தருகிறார். நம்முடைய வாழ்வில் உணர்வுகளை பலவிதங்களில் வெளிப்படுத்துகிறோம். அழுகையாக, சிரிப்பாக, கோபமாக, வெறுப்பாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். உணர்வு அளவிலே நாம் நின்று விடக்கூடாது. உணர்வுகளையும் கடந்து யதார்த்த நிலைக்கு, உண்மை நிலைக்கு செல்வதுதான் நம்முடைய பக்குவத்தை வெளிப்படுத்துகின்ற ஒன்று. எந்த ஒரு நிகழ்வை நாம் வாழ்வில் சந்தித்தாலும் அதனை எதிர்கொள்ளும் பக்குவத்தை நாம் வளா்த்துக்கொள்வதுதான் யதார்த்த நிலைக்கு செல்வது. இயேசு அந்தப் பெண்ணின் வார்த்தைகளுக்கு மயங்கிவிடவில்லை. உணர்வு அளவிலே தங்கிவிடவில்லை. அதனைக்கடந்து தெளிந்து நிலைக்குச் செல்கிறார். அதனை நாமும் கற்றுக்கொள்ள அழைப்புவிடுக்கிறார். இயேசு உணர்வு நமக்கு வேண்டாம்...

பொல்லாரின் வழியோ அழிவைத்தரும்

கடவுளின் முன்னிலையில் நிற்கக்கூடிய தகுதி யாருக்கு கிடைக்கும்? கடவுளின் பார்வையில் பேறுபெற்றவர்களாக இருக்கிறவர் யார்? என்கிற கேள்விகளை எழுப்பி, கடவுளின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்கிற சிந்தனையை விதைக்கிறது இன்றைய திருப்பாடல் (திருப்பாடல் 1: 1 – 2, 3, 4, 6). இறைவனுடைய நிறைவான ஆசீர்வாதத்தைப் பெற்று, அவருடைய பிள்ளையாக வாழ வேண்டும் என்பதே, நம்முடைய வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது ஆசிரியரின் அறிவுரையாக இருக்கிறது. இன்றைய சமுதாயத்தில் தவறான வழிகள் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும், கவர்ந்திழுக்கிறதன்மை உடையதாகவும் இருக்கின்றன. நல்ல சிந்தனைகள், விழுமியங்கள் அவர்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை. தவறான வழியில் செல்கிறவர்கள் அழிவைத்தான் சந்திக்க வேண்டி வரும் என்கிற எச்சரிக்கை உணர்வை இந்த திருப்பாடல் அழுத்தமாக பதிவு செய்கிறது. நல்ல விதைகளும், பதரும் இருக்கிற இடத்தில் காற்று வீசுகிறபோது, பதர்கள் வெகு எளிதாக காற்றினால் அடித்துச் செல்லப்படும். நல்ல விதைகளைப் போல, பதரினால் நிலைத்து...