Tagged: இன்றைய சிந்தனை

உடனிருந்து செயலாற்றும் இறைவன்

திருத்தூதர் பணி 16: 11 – 15 இறைவன் நம்மிலிருந்து செயலாற்றுகிறார் என்பதை, இன்றைய வாசகம் நமக்கு மிகச்சிறப்பாக உணர்த்துகிறது. ”இறைவன் முன் நாங்கள் பயனற்ற ஊழியா்கள். எங்கள் கடமையைத்தான் செய்தோம்” என்கிற இறைவார்த்தைக்கு ஏற்ப, பவுலடியார் தனக்கு நடக்கிற இன்னல்களை, இடையூறுகளை நினைத்து கவலைப்படாமல், தன்னுடைய பணியை அவர் செய்து கொண்டேயிருக்கிறார். ஆச்சரியம் என்னவென்றால், கல்லைக்கூட கரைக்க முடியும் என்பது போல, கடினமான உள்ளத்தவரும், பவுலடியாரின் வார்த்தைகளைக் கேட்டு மனம் திருந்துகிற அளவிற்கு, தூய ஆவியானவர் அவரோடு உடனிருந்து செயலாற்றுகிறார். நம்முடைய வாழ்க்கையில் நாம் முயற்சிகளை எடுக்கிறபோது, அதற்கான பலனை நாம் உடனே பெற்றுவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி கிடைக்காதபோது, நாம் ஏமாற்றமடைகிறோம். அது தவறு. நம்முடைய கடமையை நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கான பலனை கடவுள் கண்டிப்பாக நமக்குத் தருவார். எப்படிப்பட்ட கடினமான காரியம் என்றாலும், நாம் கடினமாக உழைக்கிறபோது, அதற்கான பலன் நமக்கு...

உண்மையான விசுவாசம்

Success does not mean winning the battle, but winning the war – என்று பொதுவாகச் சொல்வார்கள். போர் என்பது பல நாட்களாக நடக்கக்கூடியது. அதிலே ஒருநாள் வெற்றிபெற்றால், எதிரியை விட சிறப்பாக செயல்பட்டால், அது உண்மையான வெற்றியல்ல. இறுதியாக யார் சிறப்பாகச் செயல்படுகிறார்களோ, எதிரியைத் தோற்கடிக்கிறார்களோ, அவர்கள் தான் வெற்றியாளர்கள். ஒரு விஞ்ஞானி தன்னுடைய கண்டுபிடிப்பிற்காக பலநாட்கள் செலவழிக்கிறார். அதிலே தோல்வி மட்டும் தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், திடீரென்று, இத்தனை நாட்களாக தான், எதற்காக உழைத்தோமோ அதனை அவர் சாதிக்கிறபோது, வெற்றி பெற்றுவிடுகிறார். இதுதான் வெற்றி. இதனை மையப்படுத்தி தான், இன்றைய வாசகங்கள் அமைந்திருக்கிறது. இயேசுவின் வாழ்க்கை வெற்றியா? தோல்வியா? என்று யாரிடமாவது கேட்டால், அவரது இறப்பை வைத்து அதை தோல்வி என்று தான் சொல்வார்கள். அவர் அநீதியாக தீர்ப்பிடப்பட்டார் என்று தான் சொல்வார்கள். ஆனால், அது உண்மையல்ல. உயிர்ப்பு இயேசுவின் வெற்றியை எடுத்துச் சொல்கிறது....

உலகைச் சார்ந்தவர்கள் அல்ல !

இன்றைய நற்செய்தி வாசகம் மூலமாக இயே நமக்குத் தரும் செய்தி: “நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல”. இயேசு உலகினரை இரு பிரிவினராகப் பிரிக்கவே வந்தார். இருளைச் சார்ந்தவர்கள், ஒளியைச் சார்ந்தவர்கள், இந்த உலகைச் சார்ந்தவர்கள், இவ்வுலகில் வாழ்ந்தாலும், விண்ணைச் சார்ந்தவர்கள். இயேசுவின் சீடர்கள் அனைவரும் இரண்டாம் பிரிவைச் சொந்தமாக்கிக்கொண்டவர்கள். நாம் இந்த உலகில் வாழ்ந்தாலும், நாம் இவ்வுலகைச் சார்ந்தவர்கள் அல்லர். இவ்வுலகின் தலைவன் என அழைக்கப்படும் அலகையின் அடிமை அல்ல. மாறாக, விண்ணகமே நமக்குத் தாய்நாடு. நாம் இங்கே பயணிகள் மட்டுமே. நமது கால்கள் மண்ணில் இருந்தாலும், நமது கண்களும், இதயமும் விண்ணை நோக்கிய வண்ணமே இருக்கவேண்டும். நமது எண்ணங்கள் இவ்வுலக எண்ணங்கள் போல் இல்லாமல், நமது கவலைகளும் இவ்வுலகக் கவலைகளாக இருக்கக் கூடாது. நாம உயிர்ப்பின் மக்கள். ஆவியின் ஆற்றல் பெற்றவர்கள். எனவே, நமது வாழ்வின் தரத்தை உயர்த்திக்கொள்வோமாக. மன்றாடுவோம்: எங்களின் ஆர்வமும், ஆற்றலுமான இறைவா, உம்மைப் போற்றுகிறோம். தந்தை...

உயிர்ப்பு தரும் அர்ப்பணம்

திருத்தூதர் பணி 15: 22 – 31 இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்ததில், தூய பவுலடியார் எந்த அளவுக்கு முன்மதியோடும், அர்ப்பண உணர்வோடும் செயல்பட்டார் என்பதை, இன்றைய வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. ஒரு சிலர் மக்களை குழப்புகிற நேரத்தில், சரியானவிதத்தில் அதனைக் கவனித்து, அவர்களை தெளிவுபடுத்துவதற்காக, சரியான ஆட்களை அனுப்புகிறார். அதுமட்டுமல்லாது, தன்னுடைய கடிதத்தின் மூலமாகவும் சிறப்பாக அவர்களை வழிநடத்துகிறார். அவருடைய கடிதத்தை வாசித்துக் கேட்டவுடன், மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்களது விசுவாசம் உறுதிப்படுத்தப்படுகிறது. இறைமக்களை விசுவாசத்தில் கட்டியெழுப்ப, எவ்வளவுக்கு சாதாரண காரியங்களில் எல்லாம் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பது, இங்கே வெளிப்படுத்தப்படுகிறது. கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி அறிவிப்பதில் தன்னுடைய நேரம் முழுவதையும் செலவிட்டார். எந்த அளவுக்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக கிளம்பினாரோ, அதனை விட பல மடங்கு கிறிஸ்துவுக்காக உழைத்தார். பவுலின் இத்தகைய முழுமையான மாற்றத்திற்கான காரணத்தைத் தேடுகிறபோது, உயிர்ப்பு தான் நம்முடைய நினைவுக்கு வருகிறது. உயிர்த்த இயேசுவின் அனுபவம் அந்த...

ஆண்டவர் தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்

திருப்பாடல் 96: 1 – 2a, 2b – 3, 10 இறைவன் இஸ்ரயேல் மக்களை அற்புதமாக வழிநடத்தியிருக்கிறார். இறைவனின் வழிகாட்டுதலை, அற்புதமான முறையில், அதிசயமான முறையில் அவர்களை வழிநடத்தியதை, இஸ்ரயேல் மக்கள் மட்டும் தான் அறிவார்கள். இன்றைய திருப்பாடல், இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு செய்திருக்கிற சிறப்பான செயலை அறிவிப்பதாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்களுக்கு பலவிதமான செயல்களைச் செய்திருந்தாலும், இந்த திருப்பாடல் குறிப்பிட்ட நிகழ்ச்சியை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடலாக விளங்குகிறது. 1குறிப்பேடு புத்தகத்தில்ன 13 வது அதிகாரத்திலிருந்து நாம் வாசிக்கிறபோது, இத்தியரான ஓபேது, ஏதோம் இல்லத்தில் கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்ததை நாம் வாசிக்கலாம். அந்த பேழை அங்கே இருந்தவரை, கடவுள் அவரது குடும்பத்தை அற்புதமாக ஆசீர்வதித்தார் என்று விவிலியம் சொல்கிறது. அந்த பேழையை மீண்டுமாக கடவுளின் இல்லத்திற்கு கொண்டு வருகிறபோது, இந்த பாடல் பாடப்பட்டதாக நாம் சொல்லலாம். இதில் தான், கடவுள் எப்படியெல்லாம், படைபலம் பொருந்திய பெலிஸ்தியர்களையும், மற்ற நாட்டினரையும்...