Tagged: இன்றைய சிந்தனை

பவுலடியாரின் நற்செய்திப் பணி

திருத்தூதர்பணி 22: 30, 23: 6 – 11 சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ளும் திறனை பவுல் இன்றைய வாசகத்தில் வெளிப்படுத்துகிறார். ஏதேன்ஸ் நகரத்து மக்கள் பெயர் தெரியாத கடவுளை வணங்குவதை, அவர்களது அறிவு மொழியில் பாராட்டி, இறுதியாக அவர்கள் வணங்குகிற கடவுளைப் பற்றித்தான் அறிவித்துக்கொண்டிருப்பதாக, அறிவாற்றல் கொண்டு விளக்குகிறார். இந்த பகுதியிலும் தன்னுடைய அறிவாற்றலை அவர் வெளிப்படுத்துகிறார். தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தினர் அனைவரும் கூடிவருமாறு, ஆயிரத்தவர் தலைவர் ஆணைபிறப்பிக்கிறார். பவுல் சிறையிலிருந்து அழைத்துவரப்படுகிறார். பவுல் அங்கே கொண்டுவரப்பட்டபோது, பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் ஏராளமாக திரண்டிருப்பதைப் பார்க்கிறார். உயிர்ப்பு உண்டென அறிவித்ததால், தான் இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக அறிவிக்கிறார். சிறையில் இருப்பது என்பது, பவுலடியாருக்கு ஒன்றும் புதிதல்ல. அந்த நிலையிலும் அவர் துணிவோடு பேசுகிறார். உயிர்ப்பு பற்றிய பவுலடியாரின் பேச்சு அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. காரணம் இதுதான்? பரிசேயர்கள் உயிர்ப்பை நம்புகிறவர்கள். சதுசேயர்கள் உயிர்ப்பை நம்பாதவர்கள். இவர்கள்...

தூய ஆவியானவரின் வழிநடத்துதல்

திருத்தூதர்பணி 20: 28 – 38 எபேசு நகரிலிருந்து, மிலேத்துவிற்கு மூப்பர்களை அழைத்த பவுல், அவர்களுக்கு அறிவுரை கூறுகிறார். அங்கிருந்து தான், எருசலேம் செல்லவிருப்பதாகவும், இனிமேல் அவர்களை காண மாட்டேன் எனவும் சொல்கிறார். பவுலின் இந்த வார்த்தைகளை இயேசுவின் வார்த்தைகளோடு நாம் இணைத்துப் பார்க்கலாம். எருசலேம் செல்வது என்பது, இயேசுவுக்கு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதாகும். எருசலேம் பயணம் எப்படி அமையப்போகிறது என்பது இயேசுவுக்கு நன்றாக தெரிந்திருந்தது. அதுதான், தன்னுடைய கடைசி பயணம் என்று அறிந்திருந்தார். அறிந்திருந்தார் என்பதைவிட, தூய ஆவியானவர் அவருக்கு உணர்த்தியிருந்தார். கிட்டத்தட்ட அதே போல ஒரு சூழ்நிலைதான், பவுலடியாரின் வாழ்விலும் நடைபெறுகிறது. எருசலேமுக்கு செல்கிற தன்னுடைய பயணம் பாடுகளின் பயணம் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். அவர் பலவிதமான பாடுகளை தாங்க வேண்டியிருக்கிறது என்பதை உணர்ந்திருந்தார். உணர்ந்திருந்தார் என்பதை விட, தூய ஆவியானவர் அவருக்கு வெளிப்படுத்தியிருந்தார். இறைத்திட்டத்திற்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறபோது, தூய ஆவியானவர் நமக்கு...

பவுலடியாரின் இறைப்பற்று

திருத்தூதர்பணி 20: 17 – 27 பவுலடியார் எபேசு நகரத்தைச் சேர்ந்த திருச்சபையின் மூப்பர்களை வரவழைக்கிறார். மூப்பா்கள் என்பவர்கள் ஆன்மீகத் தலைவர்கள். எந்த ஒரு விவிலியப்பகுதியை வாசித்தாலும், எங்கே? ஏன்? எப்போது? யார்? என்ன? எப்படி? என, கேள்விகளை வைத்து, நாம் பதில் காண முயலுகின்றபோது, விவிலியம் நமக்கு சொல்ல வருகிற செய்தியை, ஓரளவு புரிந்து, கடவுள் நமக்கு சொல்கிற அறிவுரையைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த பகுதி பவுலின் மூன்றாவது திருத்தூதுரைக்கும் பயணத்தின் தொடக்கம் என்று சொல்லலாம் 18: 23 – 21: 16). திருத்தூதர் பவுல், அவருடன் இருந்தவர்கள் மற்றும் திருச்சபையின் மூப்பர்கள் இதில் பங்கெடுக்கிறார்கள். இடம்: மிலேத். பவுல் எதற்காக எபேசு சென்று அவர்களை சந்திக்கவில்லை? எதற்காக அவர்களை மிலேத்துவிற்கு வரவழைக்கிறார்? 20: 16 தெளிவாகச் சொல்கிறது: பவுல் காலம் தாழ்த்த விரும்பாததால் எபேசுக்குப் போகாமலே, எருசலேமுக்குச் செல்லத் தீர்மானித்திருந்தார். முடியுமானால், பெந்தகோஸ்து நகரில் அங்கிருக்க வேண்டும் என்று...

நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்

திருப்பாடல் 68: 1 – 2, 3 – 4, 5 – 6 நேர்மையாளர்கள் யார்? அவர்கள் ஏன் மகிழ்ச்சியடைவார்கள்? நேர்மையாளர்கள் என்பவர்கள், கடவுளின் சட்ட திட்டங்களுக்கு தங்களையோ முழுமையாக ஒப்புக்கொடுத்து மன்றாடுகிறவர்கள். கீழ்ப்படிதலோடு வாழ்கிறவர்கள். தங்கள் மனச்சான்றுக்கு பயந்து வாழக்கூடியவர்கள். சுயநலத்தோடு எல்லாவற்றையும் அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள். அவர்கள் எப்போதும் கடவுளுக்காகவே தங்களது வாழ்வை அர்ப்பணித்திருக்கிறவர்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று ஆசிரியர் சொல்கிறார். இந்த உலக வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்க்கிறபோது, மேலே சொல்லப்பட்டிருக்கிற விழுமியங்களோடு ஒரு மனிதர் வாழ்ந்தால், அவர் நிச்சயம் கவலைகொள்வதற்குத்தான் அதிகமான காரணங்கள் நமக்குக் கிடைக்கிறது. பின்னர் எப்படி நோ்மையாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்? அநீதி இந்த உலகத்தில் இருந்தாலும், அதற்கென்று ஒரு வரைமுறை இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பிறகு அநீதி செய்கிறவர்களால், தொடர்ந்து அநீதியோடு வாழ முடியாது. அவர்களுக்கும் ஒரு முடிவு வரும். அதுதான் இந்த திருப்பாடலில் வெளிப்படுகிறது. அநீதி செய்கிறவர்கள்...

இயேசுவின் விண்ணேற்றம்

சீடர்கள் மகிழ்வோடு யெருசலேம் திரும்புகிறார்கள். அந்த மகிழ்ச்சியோடு கடவுளைப்போற்றிப் புகழ்கிறார்கள். சீடர்களின் மகிழ்விற்கு என்ன காரணம்? எது இயேசுவின் பிரிவிலும் சீடர்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவியது? காரணம், இத்தனை ஆண்டுகளாக அவர்களோடு இருந்த இயேசு, இப்போது அவர்களிடமிருந்து நிரந்தரமாக பிரிகிறார். எனவே அந்த பிரிவு சீடர்களுக்கு வருத்தத்தைத்தான் கொடுத்திருக்க வேண்டும். ”யாரிடம் செல்வோம் இறைவா?” என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்த சீடர்களால், எப்படி இயேசுவின் பிரிவை மகிழ்வோடு பார்க்க முடிந்தது? சீடர்களின் உறுதிப்பெற்றிருந்த விசுவாசம் தான் அவர்களுக்கு அந்த மகிழ்ச்சியைத் தந்தது? அது என்ன விசுவாசம்? இயேசு எங்கும் செல்லவில்லை. நம்மில் அவர் கலந்திருக்கிறார். இத்தனை நாட்களாக, அவர் ஒரு இடத்தில் மட்டும் இருந்தார். ஆனால், இப்போது எங்கு சென்றாலும் இருக்கிறார். அந்த எண்ணம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. வாழ்க்கையில் எது நடந்தாலும் அவர்களுக்கு கவலையில்லை. ஏனென்றால், உயிர்த்த இயேசு அவர்களோடு இருக்கிறார். அவர்களை வழிநடத்துகிறார். அவர்களை உற்சாகப்படுத்துகிறார். அவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறார்....