Category: இன்றைய சிந்தனை

புனிதர் அனைவர் பெருவிழா

சாதாரணமானது ஆனால் வரலாறானது மத்தேயு 5:1-12 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் புனிதர் அனைவரின் பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அனைத்து புனிதர்களின் பரிந்துரை உங்களுக்கு இந்த நாளில் கிடைப்பதாக! மனிதர்கள் என நாம் மரியாதை செலுத்துவோர் தங்களுடைய வாழ்வையும் பணியையும் முழுமையாக இறைசித்தத்திற்கு அர்ப்பணித்து துன்பங்களை, இன்பங்களாக ஏற்று, உலக மக்களின் நலனுக்காகவும், அவர்கள் நெறிபிறழாமல் வாழ வழிகாட்டிகளாக இவ்வுலகில் வாழ்ந்தவர்கள். இவர்களையே கத்தோலிக்கத் திருச்சபை புனிதர்கள் என அடையாளப்படுத்துகிறது. கடவுளை வழிபடுகிற நாம், அவரோடு நெருங்கிய உறவு கொண்டு நமக்காகப் பரிந்து பேசுகிற புனிதர்களுக்கு மரியாதை செலுத்துவது நமது மேலான கடமையாகும். அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்விற்கு நன்றி கூறுவது தகுதியும் நீதியுமாகும். இவ்விழா நாம் புனித வாழ்விற்குள் நுழைய...

பவுலடியாரின் அர்ப்பண வாழ்வு

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாள் முதல், கிறிஸ்துவுக்காக உடல், பொருள், ஆன்மாக அனைத்தையும் முழுமையாக அர்ப்பணித்தவர் பவுலடியார். அவர் நற்செய்தியின் மீது கொண்ட தீராத அர்ப்பண உணர்வால், பல கடுமையான பயணங்களை மேற்கொண்டு, கிறிஸ்துவுக்கு உண்மையான சீடராக விளங்குவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அதனுடைய வெளிப்பாடாக இருப்பது தான், இன்றைய முதல் வாசகத்தில் அவர் சொல்லும் வார்த்தைகளாகும். ”நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. நான் இறந்தால் அது ஆதாயமே” என்கிற வார்த்தைகள், அவர் தன் வாழ்வை எப்படி வாழ்ந்தார் என்பதற்காக அடித்தளமாக அமைந்திருக்கிறது. இந்த உலகத்தில் தனக்காக வாழ வேண்டும் என்று அவர் வாழவில்லை. தான் வாழ்ந்தால், இன்னும் ஏரளாமான ஆன்மாக்களை மீட்டெடுக்க முடியும். இன்னும் பல பயணங்களை மேற்கொண்டு, எங்கெல்லாம் கிறிஸ்துவை அறியாத மக்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம், நற்செய்தி அறிவிக்க முடியும், என்று அவர் நினைக்கிறார். அதே வேளையில், கிறிஸ்துவை சந்திக்க வேண்டும் என்கிற ஆவலும் அவரை வாட்டுகிறது. கிறிஸ்துவை முகமுகமாக தரிசிக்க...

தாழ்ச்சி என்னும் உயர்ந்த மதிப்பீடு

விருந்து இடங்களுக்குச் செல்லும்போது, அங்கே விருந்தினர்கள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். முதல் வரிசை முக்கியமான பிரமுகர்கள், நெருங்கிய நண்பர்கள் அமரக்கூடியதாக இருப்பதை, நமது வீட்டு நிகழ்ச்சிகளிலும் நாம் பார்த்திருப்போம். இப்படிப்பட்ட இடங்களில், நீங்கள் உங்களை முதன்மையானவராக நினைத்தாலும், நீங்கள் முன்வரிசையில் அமர வேண்டாம். அந்த விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறவர் வந்து, உங்களை முன்னிலைப்படுத்துவதுதான் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்று, இயேசு சொல்கிறார். கிரேக்கோ-உரோமை சமுதாயத்தில் விருந்து என்பது, ஏற்றத்தாழ்வுகளை அப்பட்டமாக வெளிக்காட்டுவதாக அமைந்த ஒன்று. அதிகாரவர்க்கத்தினர், ஆளும்வர்க்கத்தினர், உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறவர்களுக்கு முதன்மையான இடமும், ஏழைகள், எளியவர்களுக்கு கடைசி இடமும் கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஒரு விருந்து வீட்டில் நாம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு, பல ஒழுங்குகளும் வகுக்கப்பட்டிருந்தன. சீராக் 32: 11 ல் நாம் வாசிக்கிறோம்: ”விருந்தைவிட்டு நேரத்தோடு எழுந்திரு. கடைசி ஆளாய் இராதே. அலைந்து திரியாது வீட்டிற்குச் செல்”. இப்படிப்பட்ட ஒழுங்குகளும், ஏற்றத்தாழ்வுகளும் மிகுந்திருந்த சமுதாயப்பிண்ணனியில், இயேசுவின்...

இயேசுவின் துணிவு

கடவுளின் பணியாளர்களிடம் பகைமை பாராட்டுவதும், அவர்களை எதிரிகளாக பாவிப்பதும் இன்றைக்கு நேற்றல்ல, நூற்றாண்டுகளுக்கு முன்னரே இது தொடர்ந்து வருகிறது. கடவுளின் பணியாளர்களை மிரட்டுவதும், அவர்களை அவமானப்படுத்துவதும் தொடக்க காலத்திலிருந்தே, வரலாற்றில் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி எதிர்ப்புக்கள் வருகிறபோது, அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்பதற்கு இயேசு சிறந்த எடுத்துக்காட்டு. பரிசேயர்கள் சிலர், இயேசுவின் மீது நல்லெண்ணமும், அன்பும் கொண்டவர்கள் தங்களுக்குக் கிடைத்த தகவலைக்கொண்டு, இயேவிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அவருக்கு எதிராக தீட்டப்பட்டிருக்கிற சதித்திட்டங்களை, அவரிடத்தில் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டதும், இயேசு பயந்துவிடவில்லை. ஓடிவிடவும் இல்லை. துணிவோடு எதிர்க்கிறார். தவறை, தவறு என்று சுட்டிக்காட்டும் வலிமை, வல்லமை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்கொள்கிற பிரச்சனையில் வெற்றி, தோல்வி பற்றி கவலையில்லை. இறுதிவரை நிலைத்து நிற்க வேண்டும். நியாயத்திற்காக, நீதிக்காக நிற்க வேண்டும். அதுதான், இயேசுவின் வாழ்வு நமக்குக் கற்றுத்தரும் பாடம். வாழ்க்கையில் சவால்களை துணிவோடு சந்திக்க, இயேசுவின் வாழ்க்கை...

சொல்லுமில்லை, பேச்சுமில்லை

இயற்கையின் சிறப்பை, கடவுளின் கைவண்ணத்தை திருப்பாடல் ஆசிரியர் புகழ்ந்து பாடுகிறார். மனிதர்கள் அதிகமாக பேசுகிறார்கள். தங்களை எப்போதும் உயர்வாகவே பேசுகிறார்கள். அவர்கள் தங்களுடைய வார்த்தைகளுக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகளை அவர்களின் பேச்சோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, சொற்கள் தான் அதிகமாக இருக்கிறது, செயல்பாடுகள் சொல்லக்கூடிய அளவில் இல்லை. திருப்பாடல் ஆசிரியர் இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடமாக நமக்கு மிகப்பெரிய செய்தியைத் தருகிறார். இயற்கைக்கு சொல்லுமில்லை, பேச்சுமில்லை. ஆனால், தங்களுடைய செயல்பாடுகளால் அவை கடவுளின் மாட்சிமையை பறைசாற்றுகின்றன. கடவுளுக்கு தங்களது நன்றியுணர்வை எடுத்துரைக்கின்றன. கடவுளைப் பற்றிப்பிடித்துக் கொண்டு, கடவுள் தங்களுக்கு கட்டளையிட்டவாறே பணிகளைச் செய்து முடிக்கின்றன. தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து முடிக்கின்றன. அவற்றைச் செய்து முடிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றன. நம்முடைய வாழ்வில், நாம் பேசுகிற வார்த்தைகளைக் குறைத்துக்கொண்டு நன்றிக்குரியவர்களாக வாழ்வோம். நம்முடைய செயல்பாடுகள் நம்முடைய வாழ்வை பாராட்டிப்பேசட்டும். நாம் நம்மைப் புகழாமல், நம்முடைய செயல்பாடுகள் மற்றவர்களிடமிருந்து...