Category: தேவ செய்தி

ஆண்டவரிடமிருந்தே மீட்பு நேர்மையாளருக்கு வருகின்றது

திருப்பாடல் 37: 3 – 4, 5 – 6, 23 – 24, 39 – 40 நேர்மையாளராக வாழ வேண்டுமா? நேர்மையாளராக இந்த உலகத்தில் வாழ முடியுமா? இந்த உலகம் அப்படிப்பட்டவர்களை விட்டு வைக்குமா? நேர்மையாளர்களாக வாழ்கிறபோது, நமது நண்பர்களை நாம் இழக்க நேரிடும். நமது உறவுகள் நம்மை விட்டுவிட்டுச் சென்று விடும். இவையெல்லாம் நம்மால் எதிர்கொள்ள முடியுமா? – இது போன்ற கேள்விகள் நிச்சயம் நமது உள்ளத்தில் எழும். இத்தனை கேள்விகளுக்கும் இன்று நாம் தியானிக்கும் திருப்பாடல் பொறுமையாக பதில் தருகிறது. நேர்மையாளர்கள் துன்பங்களைச் சந்திக்க மாட்டார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், அவற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான ஆற்றலை இறைவன் வழங்குவார். அவர் நேர்மையாளர்களின் கால்களை உறுதிப்படுத்துவார். தாங்கள் நின்றுகொண்டு இருக்கக்கூடிய நேர்மை என்னும் விழுமியத்தை முழுமையாகப் பற்றிப்பிடித்துக் கொள்வதற்கு, ஆண்டவர் உடனிருப்பார். எவ்வளவு சோதனைகள் வந்தாலும், நாம் வீழ்ந்து போக ஆண்டவர் அனுமதிக்க மாட்டார். ஏனென்றால், நேர்மையாளர்களை...

பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்

திருப்பாடல் 96: 1 – 2a, 2b – 3, 7 – 8, 10 இந்த திருப்பாடல் 1 குறிப்பேடு 16 வது அதிகாரத்தோடு தொடர்புடையது. கடவுளின் பேழை நகரத்தின் கூடாரத்தில் வைக்கப்படுகிறது. பின்பு எரிபலிகளும், நல்லுறவுப் பலிகளும் செலுத்தப்படுகிறது. கூடியிருந்த மக்கள் கடவுளைப் போற்றிப்புகழவும், மகிமைப்படுத்தவும் செய்தனர். கடவுளின் மகிமையும், மகத்துவமும் இங்கே பாடலாக வெளிப்படுத்தப்படுகிறது. இஸ்ரயேல் மக்கள் வணங்கும் கடவுள் தான், அனைத்துலகத்திற்கும் அரசர் என்கிற செய்தி, அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தப்படுகிறது. கடவுளை புற இனத்து மக்களுக்கு அறிமுகப்படுத்துகிற மிகப்பெரிய பொறுப்பு இஸ்ரயேல் மக்களுக்கு இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் தான் கடவுளின் வல்ல செயல்களை முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் கடவுளின் ஆற்றலையும், வல்லமையையும் முழுமையாக அனுபவித்திருக்கிறார்கள். கடவுளைப்பற்றி முழுமையாக அறிந்திருக்கிற இஸ்ரயேல் மக்கள் கண்டிப்பாக, இதனை பிற இனத்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிப்பதன் மூலம் பிற இனத்து மக்களும், உண்மையான இறைவனை முழுமையாகக் கண்டுகொள்ள...

மண்ணகம் – இறைவனின் பிரசன்னம்

உலகம் என்பது கடவுளின் படைப்பு மட்டுமல்ல, கடவுளின் பிரசன்னம் முழுவதும் நிரம்பியிருக்கக்கூடிய இடம். இந்த உண்மையை இயேசு தனது போதனையின் வாயிலாக எல்லா இடங்களிலும் வெளிப்படுத்துகிறார். இயேசுவின் போதனை, அறிவுப்பூர்வமாக, அறிவில் சிறந்தவர்கள் மட்டும் புரிந்து கொள்ளக்கூடியது அல்ல. அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கருத்துச்சிந்தனைகள் நிறைந்ததாக இருந்தது. இன்றைய நற்செய்தியில் விதைகளை வைத்து இயேசு அருமையானச் செய்தியைத் தருகிறார். பொதுவாக, விண்ணகத்தை, பூமியோடு ஒப்பிடுகிறபோது, மண்ணகம் ஒன்றுமே இல்லாததுபோல, மண்ணகத்தை வெறும் ஒரு படைப்பு போல பார்க்கக்கூடிய நிலை, நம்மிடமே உள்ளது. ஆனால், இயேசுவின் போதனையில் உள்ள கருத்துக்களைப்பார்த்தால், எந்த அளவுக்கு மண்ணகம் கடவுளின் பிரசன்னத்தால் நிறைந்துள்ளது என்பதும், மண்ணகம் கடவுளின் வெறும் படைப்பு மட்டுமல்ல, அது இறைவன் வாழும் ஆலயம் என்பதும் நமக்குப்புலப்படும். இன்றைக்கு கடவுளின் படைப்பான இந்த பூமி, சிலபேரின் சுயநலத்திற்காக சிதைக்கப்படுவது கொடுமையானது. இந்த பூமி, இறைவனின் பிரசன்னம் தாங்கிய இடம் என்றால், அதை சிதைப்பது,...

உமது திருவுளம் நிறைவேற்ற கடவுளே இதோ வருகின்றேன்

திருப்பாடல் 40: 1 – 3, 6 – 7, 9 – 10 விருப்பம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. நமது விருப்பத்தை நிறைவேற்ற நாம் முயற்சி எடுக்கிறோம். எல்லா விருப்பங்களையும் நிறைவேற்ற முடியுமா? எல்லா விருப்பங்களும் நிறைவேற்றுவதற்கு தகுதியானதா? நிச்சயம் இல்லை. மனம் ஒரு குரங்கு என்று சொல்வார்கள். மனம் நினைப்பதையெல்லாம் நாம் நிச்சயம் நிறைவேற்ற முடியாது. அப்படி நிறைவேற்றினால் அதில் 90 விழுக்காடு தவறான காரியமாகத்தான் இருக்கும். ஏனென்றால், நாம் நமது மனதைக் கட்டுப்படுத்தவில்லையென்றால், அது தன்போக்கில் சென்று, பல தவறுகளுக்கு வழிவகுத்துவிடும். இந்த நிலையை தாவீது அரசர் அறியாதவரல்ல. அவர் ஏற்கெனவே பத்சேபா விஷயத்தில் அனுபவப்பட்டிருக்கிறார். இந்த திருப்பாடல், உள்ளத்தில் எழுந்திருக்கிற ஒருவிதமான சோதனையை வென்று, மகிழ்ச்சியின் நிறைவில் வெளிப்படக்கூடிய திருப்பாடல். தாவீது அரசருக்கு ஒருவிதமான சோதனை. தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற நெருடல் மனதிற்குள்ளே அரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அது தவறானது என்பதை, அவரது அறிவு...

ஆண்டவரது வியத்தகு செயல்களுக்காய் புதியதோர் பாடல் பாடுங்கள்

திருப்பாடல் 98: 1, 2 – 4, 5 – 6 பாடல் பாடுவது என்பது ஒருவரை மகிமைப்படுத்துவதற்கு சமம். பிறந்தநாளில் ஒருவரைப்பற்றி வாழ்த்த வேண்டும் என்றால், பாடல் வழியாக வாழ்த்துகிறோம். நமது உள்ளத்தில் இருக்கக்கூடிய சிந்தனைகளை, இசைமீட்டி, ஒருவரது சிறப்பையும், நன்றி உணர்வையும் வெளிப்படுத்துகிறோம். திருப்பாடல் ஆசிரியர் புதியதொரு பாடல் பாடச்சொல்கிறார். ஏன்? கடவுள் அந்த அளவுக்கு, வியத்தகு செயல்களை, இஸ்ரயேல் மக்களுக்குச் செய்திருக்கிறார். அவர் செய்திருக்கிற செயல்களுக்காக, பாடல் பாடச்சொல்கிறார். கடவுள் என்ன வியத்தகு செயல்களை, இஸ்ரயேல் மக்களுக்குச் செய்திருக்கிறார்? இஸ்ரயேல் மக்கள் பெற்ற வெற்றி அனைத்தையும், அவர்கள் தங்களது புயவலிமையினால் பெற்றதாகச் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், அது அவர்களால் இயலாத காரியம். தாங்கள் போரிடச் சென்ற பகைநாட்டினா் அனைவருமே, போர்த்தந்திரத்தில் சிறந்தவர்கள். பல போர்களைச் சந்தித்தவர்கள். பல போர்களில் வெற்றிவாகைச் சூடியவர்கள். புதிய போர்முறைகளை அறிந்தவர்கள். இப்படிப்பட்ட வலிமைமிகுந்தவர்களை வெல்ல வேண்டுமானால், நிச்சயம் எதிர்க்கிறவர்கள் அவர்களை விடச்...