Category: Daily Manna

இயல்புகளுக்கேற்ப வாழ்வை முன்னெடுப்போம்

செபம் என்றால் “இதுதான்“ என்பதை நாம் அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால், இதுதான் இன்றைக்கு திருச்சபையில் நாம் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாகவும் இருக்கிறது. திருச்சபை என்பது பலதரப்பட்ட எண்ணங்களையும், சிந்தனைகளையும், இயல்புகளையும் கொண்ட மிகப்பெரிய அமைப்பு. ஒரு சிலர் இயல்பாகவே துடிப்பாக இருப்பர். சிலர் அமைதியான இயல்பைக் கொண்டவர்களாக இருப்பர். திருச்சபையின் வழிபாட்டு முறை அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்படி நடக்கிறபோதுதான், அனைவருமே ஈடுபாட்டோடு பங்கு பெறுவதற்கு வசதியாக இருக்கும். ஒரு சிலர் ஆடிப்பாடி இறைவனைப் போற்ற விரும்பலாம். ஒரு சிலர் அமைதியாக இறைவனை மனதிற்குள் நினைத்து போற்றலாம். அவரவர் இயல்பிற்கேற்ப வழிபடுவதற்கு, அனைவருமே உதவியாக இருக்க வேண்டும். இதுதான் சிறந்தது, வழிபாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நமது எண்ணங்களைப் புகுத்துகிறபோது, அங்கே இயல்பாக பிரச்சனை எழுகிறது. இன்றைய நற்செய்தியிலும் அதைத்தான் பார்க்கிறோம். மார்த்தாவின் உபசரிப்பு, விருந்தோம்பல் பற்றிய எண்ணம் வேறு. மரியாவின் உபசரிப்பு, விருந்தோம்பல் பற்றிய எண்ணம் வேறு. இரண்டுமே...

இயேசுவின் மறைப்பணி உத்தி !

“பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்” என இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகிறது. “கூக்குரலிட மாட்டார். தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நீதியை வெற்றிபெறச் செய்யும்வரை நெரிந்த நாணலை முறியார்” என்னும் எசாயா இறைவாக்கினரின் வாக்கு நிறைவேறியதாக வாசகம் முடிகிறது. ஒரு பக்கம் இயேசு பரிசேயரின் சூழ்ச்சியை அறிந்தவராய், அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்கிறார். தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேசவேண்டாம் என்று தாம் குணமாக்கியவர்களிடம் கண்டிப்பாகச் சொன்னார். ஆனால், அதே வேளையில் தமது குணமாக்கும், நற்செய்தி அறிவிக்கும் பணியையும் சென்றவிடமெல்லாம் தொடர்ந்து ஆற்றினார். இதையே நாம் அவரது மறைப்பணி உத்தி என்று அழைக்கலாம். பரிசேயர்களுக்கு அஞ்சி, தமது பணியை இயேசு கைவிட்டுவிடவில்லை. ஆனால், இயன்றவரையில் அவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் தம்மைக் காத்துக்கொண்டார். தமது “நேரம் வரும்வரையில்” தாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும், வீணாகச் சிக்கிக்கொண்டு, பணி செய்யும்...

நீதியின் கடவுள்

எசாயா 42: 1 – 4 பகுதியிலிருந்து, மத்தேயு இயேசுவின் பணிவாழ்வை ஒப்பிடுகிறார். பழைய ஏற்பாட்டில், முதலில் இது பாரசீக அரசர் சைரசுக்கு ஒப்பிடப்படுகிறது. சைரஸ் தொடர்ந்து நாடுகளை வெற்றி பெற்றுக்கொண்டிருந்தார். அவருடைய வெற்றியை கடவுளின் திட்டமாகவே இறைவாக்கினர் எசாயா பார்த்தார். சைரஸ் அறியாமலேயே, கடவுள் அவரைப்பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்று அவர் நினைத்தார். இந்தப் பகுதி சைரஸ் அரசரைப்பற்றி எழுதப்பட்டதாக இருந்தரலும், இயேசுவுக்கான, இயேசுவின் பணிக்கான இறைவாக்காகவே இது பார்க்கப்படுகிறது. சைரஸ் குறிப்பிட்ட பகுதிகளை வெற்றி கொண்டார். இயேசுவோ இந்த அவனி முழுவதையும் வெற்றிகொண்ட வெற்றி வீரராக மதிக்கப்படுகிறார். இயேசுவின் முக்கியப்பணியாக இறைவாக்காகக் கூறப்படுவது, நீதியை அறிவிப்பது. நீதி என்கிற கிரேக்க வார்த்தையின் பொருள்: கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும், மக்களுக்குரியதை மக்களுக்கும் கொடுப்பது. இயேசு கடவுளுக்குரியதை கடவுளுக்கும், மக்களுக்கானதை மக்களுக்கும் கொடுப்பதற்காகவே வந்தார். எனவே தான், தங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியது கிடைக்காமல் வாழ்ந்த, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை உயர்வுக்காக, அவர்கள் சார்பாக...

தாயன்பு

ஒரு தாய் தன் குழந்தையின் மீது ஒவ்வொரு மணித்துளியும் நினைவு வைத்திருப்பாள். அந்த குழந்தையின் தேவையை, அவளாகவே அறிந்து, அதனை நிறைவேற்றுகிறவள் தான் தாய். எந்த ஒரு தாயும் தன் குழந்தை வேதனைப்படுவதையோ, துன்பப்படுவதையோ விரும்பமாட்டாள். இந்த தாயன்பு தான், கடவுளின் அன்பாகச் சொல்லப்படுகிறது. இந்த தாயன்பை விட பல மடங்கு மேலானது கடவுளின் அன்பு. தாயன்பையே நாம் வியந்து பார்க்கிறோம். அப்படியென்றால், கடவுளின் அன்பு எந்த அளவிற்கு மகத்துவமானது என்பதை, இங்கே நாம் அறிந்து கொள்ளலாம். சுமைகளால் சோர்ந்திருப்பவர்களை இயேசு அழைக்கிறார். வழக்கமாக, நண்பர்களின் மகிழ்ச்சியில் நாம் அதிகமாகப் பங்கெடுப்போம். அவர்களோடு மகிழ்ந்திருப்போம். ஆனால், அவர்களின் துயரத்தில் பங்கெடுக்க வேண்டுமென்றால், ”என்னுடைய நிலையே எந்த அளவுக்கு மோசமானதாக இருக்கிறது” என்று, அதிலிருந்து ஒதுங்கிவிடுவோம். துன்பத்திலும், துயரத்திலும் பங்கெடுக்கிறவர்கள் வெகு குறைவுதான். ஆனால், இங்கே இயேசுவே முன்வருகிறார். அவராகவே முன்வந்து, நமது துன்பத்தில் பங்கெடுக்கிறார். நம்மை மீட்பதற்கு துணையாக இருக்கிறார். கடவுளின்...

இறை அனுபவம்

இயேசு தன்னுடைய அனுபவத்தை இங்கு விவரிக்கிறார். அவருடைய அனுபவம் என்ன? சாதாரண, எளிய மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். ஆனால், ஆளுகின்றவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல் புறந்தள்ளுகின்றனர். இயேசு இங்கு அறிவு ஆற்றலை கண்டிக்கவில்லை. மாறாக, அறிவுச்செருக்கை சாடுகிறார். தன்னை ஏற்றுக்கொள்ளாததால் கோபப்படவில்லை. மாறாக, உண்மைக்கு அவர்கள் செவிசாய்க்காததால் கண்டனம் செய்கிறார். நற்செய்தியை அறிவுப்பூர்வமாக அணுகினால் புரிந்து கொள்ள முடியாது. மாறாக, இதயப்பூர்வமாக அணுக வேண்டும். சாலமோன் போல ஞரனத்தைப்பெற்றிருந்தாலும், குழந்தையின் இதயத்தையோ, எளிமையையோ, கடவுள் நம்பிக்கையையோ பெற்றிருக்கவில்லை என்றால், அதனால் பயன் ஒன்றும் இல்லை. யூதப்போதகர்களும் கூட இதை தாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் ஏற்றுக்கொண்டிருந்தனர். அறிவினால் அல்ல, எளிமையான நம்பிக்கையினால் கடவுளை அடைய முடியும் என்பது அவர்கள் ஏற்றுக்கொண்ட உண்மை. தங்களை விட சாதாரண மக்கள் கடவுளுக்கு நெருக்கமாக இருந்தனர் என்பது அவர்கள் உணராதது அல்ல. இருந்தபோதிலும் அவர்களின் அறிவுச்செருக்கு, கடவுளைப்பற்றி நாங்கள் முழுமையாக அறிந்து வைத்திருக்கிறோம் என்கிற மமதை, அவர்கள் கடவுளை...