Category: Daily Manna

மற்றவர்களை உயர்ந்தவர்களாக எண்ணுவோம்

அன்பானவர்களே!!!  இந்த உலகத்தில் யாரும் அறிவாளியும், கிடையாது.  யாரும் முட்டாளும் கிடையாது. அவரவர் தேவைக்கேற்ப கடவுள் ஞானத்தையும்,புத்தியும்,கொடுக்கிறார். யார் அவரிடம் அதிகமாக கேட்கிறார்களோ அவர்கள் யாவரும் பெற்றுக்கொள்வார்கள். இதை யாக்கோபு 1:5,6 ஆகிய வசனங்களில் காணலாம். ஆனால் நாம் கேட்பதை மிகுந்த நம்பிக்கையோடு கேட்கவேண்டும்.  இதைதான் நம் தேவன மிகவும் விரும்புகிறார். சில சமயத்தில் நம்மைவிட சிறிய வயதில் இருப்பவர்களிடம் இருந்து நமக்கு ஒரு நல்ல விஷயம் கிடைக்கும்.வேதத்தில் நாம் 2 அரசர்கள் 5ம் அதிகாரத்தில் 1லிருந்து 13 வரை உள்ள வசனத்தை வாசிப்போமானால் சீரியா மன்னனின் படைத்தளபதி நாமான் போரிட்டு அந்த நாட்டுக்கு பெரும் வெற்றியை வாங்கி கொடுத்தான். ஆனால் அவனோ தொழுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தான்.மன்னனின் நன்மதிப்பை பெற்ற அவன் வலிமை மிக்க வீரனாகவும் இருந்தான். அவன் வீட்டில் இஸ்ரவேல் நாட்டை சேர்ந்த ஒரு சிறு பெண் அவன் மனைவிக்கு பணிவிடை செய்து வந்தாள். சிறுபெண் தன் தலைவியிடம் என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் எலிசாவிடம் சென்றால் அவர் இவர் தொழுநோயை...

கடவுளின் மீட்பு

விண்ணுலகையும், மண்ணுலைகையும் படைத்து, விண்ணுலகை ஆள்வதற்கு தேவதூதர்களையும், மண்ணுலகை ஆள்வதற்கு தமது தொற்றத்தின்படியே மனிதனை உருவாக்கி, ஒரே இரத்தத்தால் தோன்றச் செய்து ஆசீர்வதித்து உலகம் தோன்றின காலமுதல் இன்றுவரை யதார்த்தமாய் வழிநடத்திய நம் கடவுளுக்கு மிகவும் பிரியமான அன்பானவர்களே!  நாம் பாவத்திலும், சாபத்திலும், விழுந்து போகாதபடிக்கு சாத்தானின் நரித்தனமான சோதனைகளிலிருந்து மீட்கவே நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகில் குழந்தையாய் அவதரித்து நம்முடைய சமாதானத்துக்காக, சந்தோசத்திற்காக அவர் தம்மையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தார். இயேசுகிறிஸ்து தம்மை தாழ்த்தி சிலுவையை சுமந்து தலையில் முள்முடி சூட்டப்பட்டது எதற்காக? மனுகுலமே உங்கள் ஒவ்வொருவருக்காக. கிறிஸ்து என்பது ஒருவழி. அதுவும் ஒரேவழி அதுமட்டும்தான்.  திருத்தூதர்பணி 4:12;  யோவான் 14:6 ; அவராலே அன்றி மீட்பு யார் மூலமாகவும் இல்லை என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். சிலபேர் அறியாமல் அவர் கிறிஸ்துவர்களுக்காய் சிலுவை சுமந்தார் என்று நினைத்து [நானும்  ஒருகாலத்தில் இதுமாதிரி அறியாமல் இருந்ததால் இதை உங்களுக்கு சொல்கிறேன்.] தங்களுக்கென்று ,ஒரு கல்லினாலோ அல்லது மரத்தினாலோ ஒரு தெய்வத்தை உண்டுபண்ணி வணங்கி அதற்கு பலி செலுத்துகிறார்கள். இந்த உலகத்தையே படைத்த கடவுளை...

அன்பில் ஆழமானவர் நம் இயேசுகிறிஸ்து

உலகில் உள்ள மரங்களை எல்லாம் பேனாவாக்கி, பரந்து விரிந்திருக்கும் வானத்தை தாளாக்கி, மேகத்தில் இருந்து பொழியும் மழைநீரை மையாக்கி, ஜொலிக்கும் நட்சத்திரத்தை எல்லாம் என் கற்பனையாக்கி, இப்பூமி முழுவதையும் எழுத்தாக்கி, கடல் அலையின் சீற்றத்தை என் சிந்தனையாக்கி, பூக்களை எல்லாம் வார்த்தையாக்கி, மெதுவாய் தவழும் தென்றலை வரிகளாக்கி, இதயம் என்னும் குளத்தில் என் ஆண்டவரை நினைவாக்கி, இயேசுவின் சிலுவை பாதையை உருக்கமாக்கி, ஆதிமுதல் அவர்செய்த செய்கைகளை ஆச்சரியமாக்கி, இஸ்ரவேல் ஜனங்களின் வழிநடத்தலை சாட்சியாக்கி, எனக்கு நீர் கொடுத்த ஆவியை தீபமாக்கி, என் தலை தண்ணீரும்,என் கண்களை நீரூற்றுக்களாக்கி, அவர் கடந்த பாதையை கண்களால் காணாத, நம்புகிற நிச்சயமாக்கி, அவர் செய்த நன்மைகளுக்கெல்லாம் என்னையே காணிக்கையாக்கி, அவர் செய்த தியாகத்தை எல்லாம் பெருமையாக்கி, இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தை உண்மையாக்கி, மண்ணான என் சரீரத்தை ஆலயமாக்கி, அவருக்காக என் வாழ்க்கையை தியாகமாக்கி, கிறிஸ்துவின் பாடுகளை எல்லாம் தியானமாக்கி, என் உள்ளத்தில் அவரை உயர்ந்தவராக்கி,...

கீழ்படியுங்கள்

ஆண்டவருக்குள் அருமையான அன்பின் இறைமக்களுக்கு,     இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாக பிறந்தபொழுது தன்னை இந்த உலகத்திற்கு அனுப்பிய தமது தந்தைக்கும், இந்த உலகத்திற்கு வர காரணமாயிருந்த யோசேப்பு, மரியாள் ஆகிய தமது பெற்றோருக்கும் கீழ்படிந்தே வாழ்ந்தார், என்று நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம்.   மனிதர்கள் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வை இழப்பாரானால் அவர்களுக்கு கிடைக்கும் பயன் என்ன? மத்தேயு 16:26 ; மாற்கு 8:36 ல் படிக்கிறோம். நாம் அவரிடத்தில் கேட்டும் சில காரியங்கள் கிடைக்கவில்லையே என்று மனம் சோர்ந்து போயிருக்கிறீர்களா? கவலைப்படாதிருங்கள். நீங்கள் விரும்பும் எல்லாவற்றையும் கொடுக்கவே ஆண்டவர் உங்கள் அருகில் உங்கள் இருதயத்தில் காத்திருக்கிறார். அதற்குமுன் ஆண்டவர் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்கிறார். என்ன தெரியுமா? கீழ்படிதல். அவருடைய வாக்குகளை கேட்டு அவர் திருவுளச்சித்தப்படி நடந்தால் நாம் எதைக்கேட்டாலும் அவர் இல்லை என்று சொல்லவே மாட்டார்.  1 யோவான் 5 – 14. உங்கள் தீச்செயல்கள் உங்களுக்கும் ஆண்டவருக்கும் இடையே பிளவை உண்டாக்காமலும், அவர் முகத்தை மறைக்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்....

இந்நாளின் ஆசீர்வாதம்

இந்த நாளுக்குரிய ஆசீர்வாதத்தை கடவுள் உங்களுக்கு தர ஆவலோடு இதோ உங்கள் அருகில்,உங்கள் பக்கத்தில் நின்றுக்கொண்டு இருக்கிறார் பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் – மத்தேயு 11:28. இதோ என்னையே உங்களுக்காக கொடுத்தேனே. நீங்கள் விரும்பி கேட்கும் ஆசீர்வாதத்தை தரமாட்டேனா என்னை நோக்கி கூப்பிடும் யாவரையும் நான் ஆற்றி தேற்றுவேன். “நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்” – யோவான் 14 :14. ஜெபம். ————- அன்பே உருவான இயேசப்பா, உம்மிடத்தில் வருகிரயாவரையும் அணைத்து காத்து நடத்தும் தகப்பனே உமக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன். என்னை நோக்கி கூப்பிடு,அப்பொழுது நான் உனக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன் என்று வாக்கு கொடுத்த இறைவா, உம்மையே நம்பி கூப்பிடுகிறேன். என்னுடைய எல்லா கஷ்டத்தையும் நீக்கி கரம் பிடித்து வழி நடத்தி காத்துக்கொள்ளும். எல்லா துதி,கணம்,மகிமை,உமக்கே  உண்டாகட்டும். கிறிஸ்துவுக்கே புகழ்!  கிறிஸ்துவுக்கு நன்றி ! ஆமென்.