Category: Daily Manna

ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோர் இதயம் உறுதியாய் இருக்கும்

திருப்பாடல் 112: 1 – 2, 7 – 8, 9 ஆண்டவரில் நம்பிக்கை கொள்கிறவர் யார்? கடவுளை தங்களது வாழ்வில் முதன்மையானவராக ஏற்றுக்கொண்டவர்கள் தான், ஆண்டவரில் நம்பிக்கை கொள்கிறவர்கள். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நெருங்கிய உறவு என்று யாராவது இருப்பர். அது நட்பின் அடிப்படையில் அமைந்திருக்கலாம், உறவினராக இருக்கலாம். நமக்கு பிடித்தவர்களாக இருக்கலாம். நம்முடைய வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களாக இருக்கலாம். வாழ்க்கையில் எந்த ஒரு முடிவு எடுத்தாலும், நாம் அவர்களிடத்தில் ஆலோசனை செய்துதான், முக்கிய முடிவுகளை எடுப்போம். அவர்களிடம் தான், நாம் முழுமையான நம்பிக்கை கொண்டிருப்போம். ஆண்டவரில் நம்பிக்கை கொள்வது என்பது, கிட்டத்தட்ட இப்படிப்பட்ட உறவு தான். நமது வாழ்வில் நாம் எதைச்செய்தாலும், கடவுளை நம்பி, கடவுளின் வழிநடத்துதலை நம்பி, அவருடைய எண்ணத்தின் அடிப்படையிலும், சிந்தனையின் அடிப்படையிலும் செய்வதுதான், ஆண்டவரிடத்தில் நம்பிக்கை கொள்வது. இப்படி நாம் ஆண்டவரிடத்தில் நம்பிக்கை கொள்கிறபோது, நமக்குள்ளாக முதிர்ச்சி, பக்குவம், தெளிந்த மனநிலை உருவாகிறது. அதைத்தான் இன்றைய...

ஆண்டவரே! நீர் உருவாக்கிய அனைத்தும் உமக்கு நன்றி செலுத்தும்

திருப்பாடல் 145: 10 – 11, 12 – 13, 21 கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார். இந்த உலகத்தில் இருக்கிற அனைத்துமே கடவுள் உருவாக்கியவை தான். ஆனால், கடவுளிடமிருந்து பலவற்றைப் பெற்றிருக்கிறவர்கள் நன்றி செலுத்துகிறார்களா? படைப்பு அனைத்தும் கடவுளை நினைத்துப் பார்க்கிறதா? இந்த கேள்விகள் அனைத்தையும் நாம் சற்று சிந்தித்துப் பார்க்கிறபோது, நாம் பெறுகிற பதில் நெருடலாகத்தான் இருக்கிறது. ஆனால், அந்த உண்மையை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். மனிதர்கள் நன்றி இல்லாதவர்களாக, படைத்தவரை மறக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். இந்த திருப்பாடலில், ஆசிரியர் ஒரு நம்பிக்கை விதையை விதைக்கிறார். அதாவது, நிச்சயம் இந்த உலகத்தில் இருக்கிற மனிதர்கள் என்றாவது ஒருநாள், கடவுளின் வல்லமையை நினைத்துப் பார்ப்பார்கள். அவருக்கு உரிய மரியாதையை தருவார்கள் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இந்த பாடல் அமைகிறது. ஒன்றை இழந்தால் தான், அதன் அருமை தெரியும் என்பார்கள். பலவற்றை நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த இயற்கையை நமது சுயநலத்திற்காக...

படைப்புக்களின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகிறது

திருப்பாடல் 19: 2 – 3, 4 – 5 கடவுள் இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்? கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் என்ன? இவை போன்ற கேள்விகள், மனித உள்ளத்தில் அடிக்கடி எழக்கூடியவை. ஏனெனில், மனிதர்களாகிய நாம் எப்போதுமே, காரணங்களை, விளக்கங்களைத் தேடுகிறவர்களாக இருக்கிறோம். இன்றைய திருப்பாடல் கடவுளின் இருப்பை, அவருடைய மாட்சிமையை, மகிமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இந்த திருப்பாடலில் வரக்கூடிய முதல் நான்கு இறைவார்த்தைகளுமே, கடவுளின் வல்லமையை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. நாம் காலை விழித்தெழுவதிலிருந்து பார்க்கக்கூடிய எல்லாவற்றிலும், கடவுளின் மகிமையைக் கண்டுனரலாம். காலையில் எழக்கூடிய சூரியன், எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிற மேகக்கூட்டங்கள், இரவு, பகல் மாற்றம் – இவையனைத்துமே தங்களைப் படைத்தவர் ஒருவர் இருக்கின்றார் என்பதை, வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. நாளை சூரியன் தோன்றுமா? தோன்றும் என்கிற நம்பிக்கையை, இயற்கை நமக்கு தந்துகொண்டே இருக்கிறது. அவையனைத்துமே கடவுளின் வேலைப்பாடுகள் தான். கடவுளை நாம் வேறு எங்கேயும் தேட வேண்டாம்?...

இணைந்திருந்தால்.. .. நிலைத்திருந்தால் .. .. கேட்பதெல்லாம் நடக்கும்

வாழ்க்கை என்பது கனி நிறைந்த வாழ்வாக இருக்க வேண்டும். இந்த கனி தரும் வாழ்வு என்பது, நமக்குள் நிறைவையும் நிம்மதியையும் தருவது. பிறருக்கு பயன்படக்கூடியது. இறைவனுக்கு மகிமை சேர்ப்பது. ஒருவன் வாழ்ந்ததன் பயன் இதுதான். இத்தகைய கனி தரும் வாழ்க்கையை வாழ, ஒருவன் இறைவனோடு இணைந்திருக்க வேண்டும். இக் கருத்தை இயேசு இப்பகுதியில் பலமுறை உணர்த்துகிறார். ‘இணைந்திருத்தல்’ , ‘நிலைத்திருத்தல்’ என்னும் வார்த்தைகளை இதற்கென பலமுறை பயன்படுத்துகிறார். “இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது”. “இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்”. “என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது”. “நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.” இவ்வசனங்கள் இதற்குச் சான்றுகள். இயேசுவோடு இணைந்திருப்பதன் நெருக்கம் பல பலன்களைக் கொடுக்கவல்லது. இயேசுவை விட்டுக் கொஞ்சம் விலகினாலும் அந்த இழப்பு, கொஞ்சம் அல்ல. மிக மிகப் பெரிது. “என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது”...

பவுலடியாரின் நம்பிக்கை வாழ்வு

திருத்தூதர் பணி 14: 19 – 28 தொடங்கியிருக்கிற பணியில், உறுதி கொண்ட கொள்கையில் பிடிப்போடு இருக்க வேண்டும் என்கிற வார்த்தைகளுக்கு முன்னோடியாக திகழக்கூடியவராக, பவுலடியார் இருப்பதை, இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கிறிஸ்துவைப் பற்றி பல இடங்களுக்குச் சென்று அறிவித்து வந்த, பவுலடியாரின் போதனைகளுக்கு மக்கள் நடுவில் ஆதரவும் இருந்தது. எதிர்ப்பும் இருந்தது. எதிர்ப்பு என்பது சாதாரணமானதாக இல்லை. அவரை கொலை செய்ய செல்லும் அளவுக்கு இருந்தது. இன்றைய வாசகம் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத்தான் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. அந்தியோக்கியாவிலிருந்தும், இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல் மேல் கல் எறிந்தார்கள். அவர் இறந்துவிட்டார் என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது போல பவுல் இறக்கவில்லை. இந்த நிகழ்ச்சி நம்மில் ஒருவருக்கு நடந்திருந்தால், நம்முடைய அடுத்த சிந்தனை என்னவாக இருக்கும்? இனிமேல் இந்த பணி எதற்கு என்று, சோர்ந்துவிடுவோம் அல்லது சற்று உடல் தேறுகிறவரையில் ஓய்வு...