Tagged: இன்றைய வசனம் தமிழில்
விண்ணரசில் மிகப்பெரியவர் யார்? என்ற கேள்விக்கு, இயேசு ஒரு சிறு பிள்ளையை அழைத்து, நடுவில் உதாரணமாக நிறுத்தி, சிறுபிள்ளைகளைப் போல மாறுகிறவர்கள் தான் விண்ணரசில் பெரியவர் என்று பதில் சொல்கிறார். சில பாரம்பரியத்தின்படி, அந்த சிறுகுழந்தை அந்தியோக்கு இஞ்ஞாசியார் என்று சொல்வர். ஏனென்றால், அந்தியோக்கு இஞ்ஞாசியாருக்கு “தியோபோரஸ்” என்ற பெயர் உண்டு. அதன் பொருள் “கடவுள் தூக்கினார்” என்பதாகும். அதே போல, இயேசு அழைத்த குழந்தை பேதுருவுடையது என்றும் ஒரு சிலர் சொல்வர். காரணம், வழக்கமாக கேள்விகளைத் துணிவோடு இயேசுவிடம் கேட்பது பேதுரு தான். பேதுருவிற்கு திருமணம் ஆகியிருந்ததால், அவருடைய குழந்தையாகக்கூட இருக்கலாம் என்றும் சொல்வர். குழந்தைகளிடத்திலே இருக்கக்கூடிய பல குணங்கள், பெரியவர்களிடத்தில் இருந்தால், நிச்சயம் இந்த உலகம் ஒரு அமைதிப்பூங்காவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. புதிதானவற்றைப் பார்க்கிறபோது, அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல், எது நடந்தாலும், தங்களுக்கு எதிராக எவர் தீங்கிழைத்தாலும், அதை உடனடியாக...
Like this:
Like Loading...
மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துயரங்களையும், கவலைகளையும் தான், பெரிதாக நினைத்துக்கொண்டிருக்கிறோமே தவிர, அது நமக்கு தரும் பல இலாபங்களை, வாழ்க்கைப் படிப்பினைகளை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. இது எதிர்மறையாக சிந்திக்கக்கூடிய சிந்தனையின் விளைவு. நடப்பது கெட்டதாக இருந்தாலும், அதை நோ்மறையாக சிந்தித்தால், நாம் எல்லாச் சூழ்நிலைகளிலும் மகிழ்ச்சியாக வாழலாம். அது கடினமாக இருந்தாலும், அப்படி வாழ நாம் எடுக்கக்கூடிய முயற்சி, நமக்கு சிறந்த பயிற்சியாக அமையும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 22-27) சீடர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள். இது எதிர்மறையாக சிந்தித்தன் விளைவு. இயேசு தான் பாடுகள் படப்போவதை அறிவிக்கிறார். நிச்சயம் இது சீடர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அவர்கள் மகிழ்ச்சி கொள்வதற்கும் செய்தி இருக்கிறது. இயேசு தான் உயிர்த்தெழப்போவதையும் அறிவிக்கிறார். மொத்தத்தில் இயேசுவின் வார்த்தைகளை நேர்மறையாக எடுத்திருந்தால், அது நமக்கு வாழ்வு தரக்கூடிய, ஆனந்தத்தைக் கொடுக்கக்கூடிய செய்தி. அதை...
Like this:
Like Loading...
திருமண விருந்துக்குப் போயிருந்த தலைவர் வீட்டுக்குத் திரும்புகிறார். அப்போது வீட்டுப் பணியாளர்கள் அவருடைய வருகைக்காகக் காத்திருந்து அவர் வந்ததும் கதவைத் திறந்து அவரை வரவேற்று, அவருக்குப் பணிவிடை செய்வதே முறை. ஆனால் வீட்டுத் தலைவரே பணியாளரைப் பந்தியில் அமரச் செய்து அவர்களுக்குப் பணிவிடை செய்தால் அது ஆச்சரியமான செயல்தான். இவ்வாறு ஓர் உவமையை இயேசு கூறியதும் பேதுரு அந்த உவமையில் வருகின்ற பணியாளர் யார் என்றொரு கேள்வியை எழுப்புகிறார். அக்கேள்விக்கு இயேசு அளித்த பதில், ”மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்” என்பதே. கிறிஸ்தவ சமூகத்தை வழிநடத்திச் செல்கின்ற பணி வீட்டுப் பொறுப்பாளராகிய பேதுரு போன்ற திருத்தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்பொறுப்பைத் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமக்குக் கொடுக்கப்பட்ட சலுகை, பதவி, அந்தஸ்து ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்தி, தமக்கென்று ஆதாயம் தேடுகிறவர்களாக அன்றைய திருத்தூதர்களோ இன்றைய திருச்சபைத் தலைவர்களோ செயல்படலாகாது என இயேசு விளக்கிச் சொல்கின்றார். கடவுள் நமக்குத் தருகின்ற திறமைகளும்...
Like this:
Like Loading...
கடவுள் கொடுத்த இந்த அழகான வாழ்வை எப்படி வாழப்போகிறோம்? என்பதை நிர்ணயிக்கப் போவது நாம் தான். இந்த வாழ்வை எப்படியும் வாழ்வதற்கு, கடவுள் நமக்கு முழுச்சுதந்திரத்தைத் தந்திருக்கிறார். நம் முன்னால் இரண்டு வழிகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இரண்டுமே, நாம் செல்ல வேண்டிய இலக்கை அடையக்கூடிய வழி என்றால், நாம் எதைத் தேர்ந்தெடுப்போம்? எது ஆபத்தில்லாத வழியோ, எது நமக்கு கஷ்டம் தராத வழியோ, அதைத்தான் தேர்ந்தெடுப்போம். ஒருவேளை, மற்றொரு வழி துன்பம் தருகிற வழி என்று நினைத்துக்கொள்வோம். அந்த துன்பம் தருகிற வழியில் நாம் ஒரு புதிய பாதையை உருவாக்கினால், அதனால், பல மக்கள் பயன்பெறுவார்கள் என்றால், நமது துன்பத்தைப் பார்ப்போமா? அல்லது, நமது துன்பத்தால் பயன்பெறக்கூடிய மக்களை நினைத்துப்பார்ப்போமா? இதில் தான், நாம் நமது வாழ்வை எப்படி வாழப்போகிறோம் என்பதன் இரகசியம் அடங்கியிருக்கிறது. இந்த உலகத்திலே எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நமது நினைவில் இருக்க...
Like this:
Like Loading...
“யோவானின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன் ” என்று ஆண்டவர் இயேசு பேதுருவைப் பாராட்டுகின்றார். எதற்காக இந்தப் பாராட்டு? “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ” என்று இயேசுவைப் பற்றிய விசுவாச அறிக்கை இட்டதற்காக. ஆம், இயேசுவைக் கடவுளாக, வாழும் கடவுளின் மகனாக, மெசியாவாக ஏற்று, அதனை அறிக்கை இடுவது என்பது ஒரு பேறு. அந்தப் பேறு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. உலக மக்கள் தொகையில் இரண்டு பில்லியன் மக்களைத் தவிர, மற்ற அனைவருக்கும் அந்தப் பேறு கிடைக்கவில்லை. அந்தப் பேறு கடவுளின் கொடை. விசுவாசம் என்பது இறைவன் வழங்கும் இலவசப் பரிசுதானே ஒழிய, மனித உழைப்பின் பயன் அல்ல. இத்தவக் காலத்தில் நாம் சிந்திக்க வேண்டியது: இறைவன் எனக்குத் தந்த விசுவாசம் என்னும் கொடைக்கு எனது மறுமொழி என்ன? இயேசுவை “ஆண்டவர்” என்று அறிக்கையிடும் பேற்றினை இறைவன் எனக்குத் தந்துள்ளார். எனது பொறுப்பு என்ன? இத்தவ நாள்களில் இயேசுவை ஆண்டவராக,...
Like this:
Like Loading...