Tagged: இன்றைய வசனம் தமிழில்

மரியாளின் மாசற்ற இதயப்பெருவிழா

தொடக்கத்தில் மரியாளின் விண்ணேற்பு விழாவிலிருந்து, எட்டாம் நாள் இந்த விழா கொண்டாடப்பட்டது. ஆனால், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு பிறகு, விழாவின் நாள் மாற்றப்பட்டது. சங்கத்தில் நடந்த வழிபாட்டு மறுசீரமைப்பிற்குப் பின் , இயேசுவின் திரு இதயப்பெருவிழாவிற்கு அடுத்த சனிக்கிழமை இது கொண்டாடப்படுகிறது. இந்த பக்திமுயற்சியை பரப்பிட முயற்சி எடுத்தவர் ஜாண் யூட்ஸ் என்பவர். இவர்தான் இயேசுவின் திரு இதயப்பக்தியையும் பரப்பிட அனைத்து முயற்சிகளையும் எடுத்தவர். கி.பி 1860 ல் மரியாளின் மாசற்ற இதயத்திற்கான வணக்கத்தை ஏற்படுத்தினார். அன்னைமரியாள் மீது மக்கள் கொண்டிருந்த பக்தி, அவரது பரிந்துரையின் மூலமாக பெற்றுக்கொண்ட பல்வேறு நலன்கள், இவற்றின் மூலமாக இந்த பக்திமுயற்சி வெகு எளிதாக அனைத்து இடங்களுக்கும் பரவியது. திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் 1944 ம் ஆண்டு, இந்த திருவிழாவை உலகம் முழுவதும் கொண்டாடும்படியாக அறிமுகப்படுத்தினார். மீட்பின் வரலாற்றில் மிகப்பெரும் பங்காற்றுவதற்கு, தனது வாழ்வையே தியாகம் செய்தவர்தான் அன்னை மரியாள். நம் அனைவருக்கும் மீட்பு கிடைப்பதற்கு...

ஆசையே அழிவு

ஆண்டவர் உன்வாழ்வில் உனக்குக் குறை எதுவும் வைக்கவில்லையே. உனக்குப் போதுமானவை எவை என்பதை தெளிவாகத் தெரிந்து, போதுமானதைப் போதுமான அளவு தந்துள்ளார். செழிப்பான திராட்சைத் தோட்டம், சுற்று வேலி, காவல் மாடம், பிழிவு தொழிற்சாலை, போதுமான வருமானம் இப்படி உன் தெய்வம் உனக்குத் தந்துள்ள வாழ்க்கை வசதிகளை வரிசைப்படுத்திப் பார். மேலும் ஆசைப்பட்ட தோட்டத் தொழிலாளன் சொத்துக்கே ஆசைப்பட்டான். அனைத்தையும் உரிமை கொண்டாட ஆசைப்பட்டான். ஆசை அவனைக் குற்றவாளியாக்கியது. கொலைக்காரனாக்கியது. இருந்ததையும் இழந்துவிட்டு குற்றவாளியாக சிறையில் தண்டனை பெறும் நிலை. தோட்டத்தொழிலாளியை மட்டும் அல்ல. ஆசைப்படும் உன்னையும் என்னையும் எல்லோரையும் இப்பரிதாப நிலையில் பார்க்க வேண்டிய பரிதாப நிலை. கடவுள் கொடுத்ததில் நிறைவு அடைந்து, கடவுளுக்கு உரிமையுடையதை கடவுளுக்கும், கடவுள் பணிக்கும் கொடுத்து மேலும் நிறைவடைவோம். அதுவே அருளுடையோர் செயல். இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன். ~ அருட்திரு ஜோசப் லியோன்

உண்மையை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்வோம்

இன்றைய நற்செய்தி உண்மைக்கு சான்றுபகரக்கூடியவர்களுக்கு, உண்மைக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களுக்கு, உண்மையை தங்களது வாழ்வின் விழுமியமாக பிடித்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. தலைமைச்சங்கத்தின் நிர்வாகிகளாக இருக்கக்கூடிய தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள் மற்றும் மூப்பர்கள் ஆகியோர் இயேசுவிடத்தில் கடினமான, கடுமையான ஒரு கேள்வியைக்கேட்கின்றனர். வெளிப்படையாகப்பார்த்தால், ஆம் என்றாலும், இல்லை என்றாலும், நமக்கு பாதகமாக முடியக்கூடிய கேள்வி. ஆனால், இயேசு அதை அசாதாரணமாக எதிர்கொள்கிறார். இயேசு உண்மைக்குச் சான்றுபகரக்கூடியவர். எனவே, அவரது மனதில் அச்சமோ, கலக்கமோ எதுவுமே இல்லை. அந்த கேள்வி கேட்கப்பட்டவுடன், என்ன பதில் சொல்லப்போகிறோமோ? என்று பயப்படவும் இல்லை. உண்மைக்காக வாழ்ந்து கொண்டிருக்கக்கூடியவர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் நிச்சயமாக வரும். ஆனால், முடிவு மகிழ்ச்சியானதாக இருக்கும். உண்மை என்று தெரிந்தும், அதன்படி வாழாமல், அதற்கு எதிராக வாழக்கூடியவர்கள், வலுவான அடித்தளத்தில் நின்று பேசுவது போல தோன்றும். ஆனாலும், அது அவர்களைப் பாதாளத்திற்கு இட்டுச்செல்லும். உண்மையின் நிமித்தம் ஒருவர் சந்திக்கக்கூடிய சோதனைகள், வாழ்வை எதிர்கொள்ள பயப்பட வைக்கிறது....

அன்னைமரியாளும், அவளின் வாழ்வும்

மரியாளின் பாடல் கடவுள் மரியாளுக்குத் தந்திருக்கிற ஆசீர்வாதத்தைப்பற்றி நமக்கு பறைசாற்றுவதாக இருக்கிறது. மரியாள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவள். எந்த அளவுக்கு என்றால், தந்தையாகிய கடவுளே மரியாளை கபிரியேல் தூதர் வழியாக வாழ்த்தும் அளவுக்கு அன்னை மரியாள் நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்டவள். அன்னைமரியாளுக்கு கடவுளின் மகனைத்தாங்கும் பேறு கிடைத்த அதே வேளையில் அவளுக்கு ஒரு துயரம் நிறைந்த செய்தியும் தரப்படுகிறது. அதாவது, அவளது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்பதுதான் அந்த செய்தி. அதாவது, கடவுளின் ஆசீர் நமக்குக் கிடைக்கும்போது, துன்பங்களையும் துணிவோடு ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்கிற செய்தியை இது நமக்குத்தருகிறது. வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்காக துன்பம் வருகிறபோது, வாழ்வை ஒரு பாரமாக எண்ணிவிடக்கூடாது. துன்பமும், இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இந்த நியதியை அறிந்துகொண்டால் வாழ்வு இன்பம்தான். இந்த வாழ்வியல் கலையை அன்னைமரியாள் நமக்கு கற்றுத்தருகிறார். துன்பம் வருகிறது என்பதற்காக, துன்பத்தை விட்டுவிட்டு ஓடிவிடவில்லை. துன்பத்தைத்தாங்குவதன்...

இயேசுவின் வழியில் நமது வாழ்வு

இன்றைய நற்செய்திப் பகுதி இயேசுவின் வாழ்வைப்பற்றிய மூன்று முக்கிய செய்திகளைத் தருகிறது. முதல் செய்தி: இயேசு தன்னை கடவுளின் ஊழியனாக அல்ல, மாறாக, தன்னை கடவுளின் மகனாகவே வெளிப்படுத்தினார். ஊழியர்கள், இறைவாக்கினர்களைக் குறிக்கிறது. மகன் இயேசுவைக்குறிக்கிறது. இயேசு இறைவாக்கினராக அல்ல, இறைமகனாக நேரடியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை இங்கே நாம் பார்க்க முடிகிறது. இது யூதர்களுக்கு இயேசுவால் விடப்பட்ட நேரடியான சவால். இயேசுதான் கடவுளின் மகன் என்பதை, ஆணித்தரமாக வெளிப்படுத்திய பகுதி இது. இரண்டாவது செய்தி: இயேசுவுக்கு தான் இறக்கப்போகிறேன் என்பது தெரிந்திருந்தது. அது இயேசுவுக்கு அதிர்ச்சிகரமான செய்தியோ, ஆச்சரியமான செய்தியோ அல்ல. தான் தேர்ந்தெடுத்திருக்கிற பாதையின் முடிவு, இறப்பாகத்தான் இருக்க முடியும் என்பதை இயேசு அறிந்திருக்கிறார். அப்படி அறிந்திருந்தாலும், துணிந்து தனது வாழ்வை நகர்த்துவது அவரது மனவலிமையைக் குறிக்கிறது. மூன்றாவது செய்தி: தான் இறக்கப்போவது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு தான் மகிமைப்படுத்துவதும் உறுதி, என்று இயேசு முழுமையாக...