Tagged: இன்றைய சிந்தனை

வாழ்க்கையைப் பற்றிய தெளிவு

இந்த உலகத்தில் நடக்கும் மரணங்களை இயற்கை மரணம், எதிர்பாராத மரணம், தற்கொலை மரணம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். மரணம் எப்படி வந்தாலும், நமக்கு அது பயங்கரமான அனுபவத்தைத் தருகிறது. நன்றாக வாழ்ந்து, வயதாகி நேரக்கூடிய மரணமே நமக்கு கசப்பான அனுபவத்தைத் தருகிறபோது, மற்ற வகையான மரணங்களை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒவ்வொரு மரணமும், நாம் எந்த வேளையிலும் தயாராக இருக்க வேண்டும் என்ற செய்தியைத் தந்தாலும், மனித மனம் அந்த செய்தியை உள்வாங்குவது கிடையாது. வெகு விரைவாகவே, அதனை மறந்துவிடும். இந்த விழிப்புணர்வு மரணத்தைப் பற்றி நாம் பயப்படுவதற்காக அல்ல, மாறாக, நமது நிலையை நாம் எப்போதும் உணர வேண்டும் என்பதற்காகவே என்று, இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகிறது. வாழ்வைப் பற்றிய விழிப்புணர்வு, புரிதல், தெளிவு மக்களிடையே காண்பது அரிதிலும் அரிதாகவே காணப்படுகிறது. எதற்காக வாழ்கிறோம்? என்கிற சிந்தனையே அற்றவர்களாகத்தான், பலபேர் இருக்கிறோம். இந்த தெளிவு இருந்தால், நாம்...

அகத்தைத் தூய்மைபடுத்துவோம்

எண்ணிக்கை 19: 16 ல் நாம் பார்க்கிறோம்: இறந்தவர்களையோ, கல்லறையையோ தொடுகிறவன் தீட்டுப்பட்டவனாயிருப்பான், என்று சொல்லப்பட்டிருக்கிறது. பாலஸ்தீனப்பகுதியில் பாஸ்கா விழாவின்போது, சாலையோரம் முழுவதும் திருப்பயணிகள் வெள்ளம் திரண்டிருக்கும். நாட்டின் பல பகுதிகளிலிருந்து யெருசலேம் நோக்கி தங்கள் பயணத்தை மக்கள் தொடர்வார்கள். அப்படி அவர்கள் பயணிக்கிறபோது, கல்லறைகளைத் தெரியாமல் தொட்டுவிட்டால், தீட்டாகிவிடுவார்கள். அவர்களது பயணம் தடைபடும். எனவே, ஆதர் மாதத்தில் கல்லறைகள் அனைத்தும் வெள்ளையடிக்கப்படும். இதைப்பார்ப்போர் எச்சரிக்கையோடு விலகிச்செல்வதற்கு இந்த வெள்ளை நிற அடையாளம் உதவியது. கல்லறைகள் வெளியே பார்ப்பதற்கு அழகாக, வெள்ளையாக, பளபளப்பாக இருந்தாலும், கல்லறைக்கு உள்ளே அழுகிய உடல்கள் தான் இருக்கும். நம்மைத் தீட்டுப்படுத்துவதாகத்தான் இருக்கும். இதுபோலத்தான் பரிசேயர்களுடைய வாழ்வும் என்று, இந்த வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளோடு இயேசு ஒப்பீடு செய்கிறார். பரிசேயர்கள் வெளியே தங்களை நல்லவர்களாக, சட்டங்களைக் கடைப்பிடிப்பவர்களாக, மதிப்பீடுகள் உள்ளவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டாலும், அவர்களுடைய உள்ளமோ மதிப்பீடுகள் இல்லாத உள்ளமாக உள்ளது. அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு, சுயநலம், அகங்காரம்,...

நல்ல மனிதர்களாக வாழ்வோம்

ஆணவம், அகங்காரம், செருக்கு போன்றவை ஒரு மனிதனை மோசமான நிலைக்குத் தள்ளுகிறது. மனித உணர்வுகளை அகற்றி, அவனுள் மிருக எண்ணங்களை உருவாக்குகிறது. அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் ஏரோதியாள். மேலே சொன்ன தீய எண்ணங்கள், சிந்தனைகள் ஒரு மனிதனை எந்த அளவுக்கு, கீழ்த்தரமான நிலைக்கு கொண்டு செல்கிறது என்பதை, இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். வழக்கமாக, இறப்பு என்றாலோ, கொலை என்றாலோ, குழந்தைகளை, பிள்ளைகளை அருகில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் பயந்து விடக்கூடாது, அவர்களுக்கு ஒரு தீங்கும் வரக்கூடாது என்கிற எண்ணம் தான் இதற்கு காரணம். இங்கு, சொந்த தாயே தனது மகளை, ஒரு கொலை நடப்பதற்கு காரணமாகிறாள். தன்னுடைய சொந்த மகளை, தன்னுடைய பழிவாங்கும் குரூர புத்திக்கு உபயோகப்படுத்துகிறாள். இதனால், தனது மகளின் மனநிலை பாதிக்கப்படுமே, அவளது வாழ்க்கை வீணாகிப்போய் விடுமே என்று அவள் சிறிதும் கவலைகொள்ளவில்லை. காரணம், அவளது நினைவுகள் முழுவதும்,...

போதனையை வாழ்வாக்குவோம்

இயேசுவின் கடுமையான வார்த்தைகளை மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கிறார். பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக ஏழு முறை “ஐயோ, கேடு” என்ற கண்டன வார்த்தைகளை இயேசு உதிர்க்கிறார். “ஐயோ, கேடு“ என்ற வார்த்தைக்கு பொருள் கட்டுக்கடங்காத கோபம் மட்டுமல்ல, தீராத வருத்தமும் சேர்ந்ததுதான். அது ஒரு நேர்மையான கோபம். அநியாயத்தைக்கண்டு பொறுக்க முடியாமல் வெளிப்படுத்துகின்ற உணர்வுகள். இயேசுவின் கோபத்திற்கு இரண்டு காரணங்கள் நாம் சொல்லலாம். 1. பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் வெளிப்புற அடையாளங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, அடையாளங்கள் காட்டுகின்ற உண்மையான அர்த்தத்திற்கு கொடுக்கத்தவறி விடுவதுதான். 2. சொல்லப்படுகிற கருத்துக்களும், சிந்தனைகளும் மற்றவர்களுக்குத்தான், தங்களுக்கில்லை என்ற மமதையும் அவர்களோடு சேர்ந்துகொள்ள, இயேசுவினுடைய கடுமையான கோபத்திற்கு ஆளாகின்றனர். போதிக்கின்ற போதனைகளும் முதலில் நமதாக்கப்பட வேண்டும். வாழ்ந்து காட்டப்படாத போதனைகள் உயிர் இல்லாத சவம் போன்றதுதான். பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களின் போதனை இப்படித்தான் இருந்தது. நம்முடைய போதனை வாழ்ந்து காட்டி சொல்லப்படுவதாக இருக்கட்டும்....

இறைவனின் அழைத்தல்

கடவுளின் பணிக்காக தங்களையே அர்ப்பணித்திருக்கிற கடவுளின ஊழியர்களுக்கான அதிகாரம் எங்கிருந்து வருகிறது? என்பதை விளக்கக்கூடிய அருமையான பகுதிதான், இன்றைய நற்செய்தி வாசகம். பேதுருவை தலைவராக முடிவு செய்ய வேண்டும் என்று இயேசு நிச்சயமாக ஏற்கெனவே முடிவெடுத்திருக்க மாட்டார். கடவுள் அந்த பொறுப்பை யாருக்கு வைத்திருக்கிறாரோ, அவருக்கே உரியது என்பதில் இயேசு தெளிவாக இருக்கிறார். கடவுளின் திருவுளம் எது? என்பதை அறிவதற்காக இயேசு இந்த கேள்வியைக் கேட்கிறார். பேதுருவின் பதிலைக்கேட்டவுடன், இயேசுவுக்கு மகிழ்ச்சி வந்திருக்க வேண்டும். தன்னைப்பற்றி சொன்னதற்காக அல்ல, தனக்கு பிறகு திருச்சபைக்கு யார் தலைவர்? என்பதை, கடவுள் வெளிப்படுத்திவிட்டார் என்பதற்காக. அந்த பதிலை இயேசு நிச்சயமாக ரசித்திருக்க வேண்டும். உடனே இயேசு பேதுருவைப்பார்த்து, அதனை வெளிப்படுத்தியது இறைத்தந்தையே, என்று சான்றுபகர்கிறார். ஆக, கடவுளின் பணியாளர்கள் அனைவருமே, இறைவனால் ஏற்படுத்தப்பட்டவர்கள் என்பதை, இது தெளிவுபடுத்துகிறது. ஒருவருடைய திறமையினால் அல்ல, கடவுளின் அருளால் தான், அழைத்தலைப் பெறமுடியும், என்பது இங்கே நமக்கு தெளிவாகிறது....