Tagged: இன்றைய சிந்தனை

அனைத்து ஆன்மாக்கள் தினம்

இன்றைய நாளில் அனைத்து ஆன்மாக்களின் திருவிழாவை தாய்த்திருச்சபையோடு இணைந்து கொண்டாட இருக்கிறோம். இந்த கல்லறைத் தோட்டத்தில் பல பேர் அமைதியாக இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே மண்ணில் புதைக்கப்பட்டிருக்கிற பலபேர் நாம் அறிந்தவர்களாக இருக்கலாம். நமது ஊரில் உள்ள பெரியவர்கள், நமது நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள், நமது உடன்பிறந்தவர்கள், நாம் அதிகமாக அன்பு செய்தவர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்கள் இங்கே அமைதியாக இளைப்பாறுகிறார்கள். இவர்களது இறப்பு நமக்கு தரக்கூடிய செய்தி என்ன? ஏழை, பணக்காரர், நீதியோடு வாழ்கிறவர், அநீதி செய்கிறவர், நல்லவர், கெட்டவர் என ஒருவர் எப்படி வாழ்ந்தாலும், என்றாவது ஒருநாள், இந்த பயணத்திற்கு ஒரு முடிவு வந்தே தீரும். அந்த முடிவு எப்போது வரும் என்று யாருக்குமே தெரியாது. இங்கே இருக்கிறவர்களில் யாராவது, நாம் இன்றைக்கு இறந்து விடுவோம் என்று நினைத்திருப்பார்களா? நிச்சயமாக இல்லை. ஒருவேளை அவர்கள் மருத்துவமனையில் கடினமான நோயினால் தாக்கப்பட்டு, சிகிச்சைபெற்றுக்கொண்டிருந்தாலும், மருத்துவர்களால் கைவிடப்பட்டிருந்தாலும், ஏதோ ஒரு நம்பிக்கையோடு தான், நாட்களை...

அனைத்துப் புனிதர்களின் விழா

புனிதம் என்பது திருச்சபையால் கொடுக்கப்படும் மிகப்பெரிய மணிமகுடம். நிறைவாழ்வை தங்கள் பலவீனங்களோடு, குறைகளோடு நிறைவாக வாழ முற்பட்டவர்களை, தாய்த்திருச்சபை புனிதர்கள் என்று, போற்றி பெருமைப்படுத்துகின்றது. திருச்சபையினால் அங்கீகரிக்ப்பட்ட புனிதர்கள், இன்னும் வெளிஉலகிற்கு தெரியாமல் புனித வாழ்க்கை வாழ்ந்தவர்களும், நிச்சயம் இந்த உலகத்தில் ஏராளமான பேர் இருப்பார்கள். அவர்களையெல்லாம் இந்த நாளிலே நாம் சிறப்பாக நினைவு கூற வேண்டும். இந்த விழாவானது, அனைத்து ஆன்மாக்கள் தினத்திற்கு முன்னதாக, நவம்பர் முதல் தேதியில் கொண்டாடப்படுகிறது. நான்காம் நூற்றாண்டில், கீழைத்திருச்சபையில் நினைவுகூர்ந்து சிறப்பிக்கப்பட்ட மறைசாட்சிகளின் நினைவுநாளே பிற்காலத்தில் அனைத்து புனிதர்களின் பெருவிழாவாக உருவாவதற்கு காரணமாக அமைந்தது. திருத்தந்தை மூன்றாம் கிரகோரி அவர்கள், புனித பேதுரு பேராலயத்தில் அனைத்து புனிதர்களையும் மறைசாட்சிகளையும் நினைவுகூறும் அடையாளமாக, சிற்றாலயம் ஒன்றை எழுப்பி, அவர்களை மாட்சிமைப்படுத்தினார். இதுவே நவம்பர் முதல் தேதியில் அனைத்து புனிதர்களின் தினமாக அனுசரிக்க, தூண்டுதலாக அமைந்தது. இடைக்காலத்தில் அனைத்து புனிதர்களின் விழாவிற்காக இரவு திருவிழிப்பு மற்றும் எட்டுநாள்...

சிறியவற்றில் நம்பிக்கை கொள்வோம் !

இறையாட்சியை இயேசு கடுகு விதைக்கும், புளிப்பு மாவுக்கும் ஒப்பிடுகிறார். கடுகு விதை மிகவும் சிறியது. ஆனால், வளர்ந்து வானத்துப் பறவைகளுக்கும் தங்குமிடமாகிறது. அதுபோல, புளிப்பு மாவும் சிறிய அளவானது பெரிய அளவு மாவையும் புளிப்பேற்றுகிறது. இறையாட்சியின் செயல்கள் மாபெரும் செயல்களில் அல்ல, சின்னஞ்சிறு செயல்கள் வழியாகப் பரவுகிறது என்கிறார் ஆண்டவர் இயேசு. இயேசுவின் குழந்தை தெரசாள் சிறிய வழி என்னும் சிறு செயல்கள் வழியாகவே பெரிய ஆற்றல்மிகு சாதனைகளைப் படைக்க முடியும் என்று வாழ்ந்து காட்டினார். எனவே, சிறிய செயல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் கவனமாக இருப்போம். திருப்பாடல் 131 இந்த சிந்தனையை நன்கு வெளிப்படுத்துகிறது. ”ஆண்டவரே, என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை. என் பார்வையில் செருக்கு இல்லை. எனக்கு மிஞ்சின அரிய, பெரிய செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது. தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது” என்று அருமையாகப் பாடுகிறார்...

நீதி எங்கே? நியாயம் எங்கே?

இயேசு தொழுகைக்கூடத்தில் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கிறார். போதனை என்பது வார்த்தையோடு நின்றுவிடுவது கிடையாது. வாழ்வைத் தொட வேண்டும். வாழ்வைத் தொடாத போதனையும், வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தாத போதனையும், வெறும் சடங்குதான். இயேசு தனது போதனை அவ்வாறு இருக்க விரும்பவில்லை. எனவே, அவர் போதித்துக்கொண்டிருக்கிறபோதே, மக்களுக்கு இறைவனுடைய அருளையும் பெற்றுத்தந்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு சுகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவ்வாறு மக்களின் நோய்களைக் குணப்படுத்திக்கொண்டிருக்கிறபோது, தொழுகைக்கூடத்தலைவன் மக்களிடத்தில், தனது கோபத்தைக் காட்டுகிறான். ஓய்வுநாளில், இயேசு குணப்படுத்துவது அவனுக்குப்பிடிக்கவில்லை. ஏனென்றால், சட்டப்படி, அது ஓய்வுநாளை மீறிய செயலாகும். எனவே, தான் சொல்வது நியாயம் என்று நினைக்கிறான். ஆனால், இயேசுவிடம் சொல்லத்துணிவில்லாமல், சாதாரண பாமர மக்களிடத்தில் காட்டுகிறான். ஒருவேளை, அவன் இயேசுவிடம் சொல்லியிருந்தால், அவர் விளக்கம் சொல்லியிருப்பார். ஆனால், அவனோ, மக்களிடத்தில் தனது கோபத்தைக்காட்டுகிறான். அதனால், இயேசுவின் கோபத்திற்கு ஆளாகிறான். இன்றைக்கு, நாமும் இந்த தொழுகைக்கூடத்தலைவன் போலத்தான் இருக்கிறோம். நம்மைவிட கீழாக உள்ளவர்களிடம், நமது அதிகாரத்தையும், ஆணவத்தையும் காட்டுகிறோம். நம்மைவிட,...

தலைசிறந்த கட்டளை எது?

மத்தேயு நற்செய்தியில் ”போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்ற கேள்வி, இயேசு சதுசேயரை வாயடைக்கச்செய்தார் என்பதைக்கேள்விப்பட்டவுடன் கேட்கப்பட்ட கேள்வி. அது இயேசுவை தாக்குவதற்காக, அவரில் குற்றம் காண்பதற்காகக்கேட்கப்பட்ட கேள்வி. ஆனால், மாற்கு நற்செய்தியில் இதனுடைய பிண்ணனி வேறு. இயேசுவை பாராட்டும்படியாகச்சொல்லப்பட்ட கேள்வி. இயேசு மதம் என்பதற்கான வரைவிலக்கணத்தை இங்கு தருகிறார். மதம் என்பது அன்பை அடிப்படையாகக்கொண்டது. அன்பில்லையென்றால் அது மதமல்ல. இந்த மதம் இரண்டு அடித்தளங்களைக்கொண்டு கட்டியெழுப்பப்படுகிறது. 1. இறையன்பு 2. பிறரன்பு. இந்த இரண்டில் முதன்மையான இறையன்பு. இறையன்பு இல்லாத இடத்தில் பிறரன்பு இருக்க முடியாது என்பது இயேசுவின் போதனை. கடவுளுக்கான அன்பு நம்மிடத்தில் பல வழிகளில் வெளிப்பட வேண்டும். நம்முடைய உறவில், உணர்வில், வாழ்வில், எண்ணத்தில் கடவுளன்பு வெளிப்பட வேண்டும். இந்த அன்பு இருக்கிறபோதுதான் பிறரன்பு நம்மில் உருவாகும். ஏனென்றால் மனிதன் என்பவன் வேதியியல் பொருளின் கலவையில்ல, படைப்பின் வெறும் பகுதி அல்ல, மாறாக, கடவுளன்பின்...