கடவுள் கொடுத்திருக்கிற வாழ்வு
இந்த உவமையை இயேசு மக்களுக்குச் சொன்னபோது, ஏற்கெனவே யூதப்போதகர்கள் சொன்ன இரண்டு கதைகள், மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. முதல் கதை: ஓர் அரசர், முக்கியமான அலுவலர்களுக்கு, விரைவில் தான் விருந்து ஏற்பாடு செய்ய இருப்பதாகவும், அதற்கு எந்த நேரமும் தயாராக இருக்கும்படியும், சொன்னார். விருந்திற்கு எப்படி வர வேண்டும் என்பதையும் அவர்களுக்கு அறிவித்திருந்தார். முன்மதியுள்ள அலுவலர்கள், அரசரின் இந்த செய்திக்கு ஏற்ப, தங்களையேத் தயாரித்து, அரசரின் அழைப்பிற்காகக் காத்திருந்தனர். ஆனால், முன்மதியற்றவர்கள், விருந்திற்கு இன்னும் நாளாகலாம் என்று, தங்களின் அலுவல்களைக் கவனிக்கச் சென்றுவிட்டனர். திடீரென்று அழைப்பு வந்தபோது, ஞானமுள்ளவர்கள் தகுந்த தயாரிப்போடு, விருந்திற்கான ஆடை உடுத்திச் சென்றனர். முன்மதியற்றவர்களோ, தயாரிப்பில்லாமல் சென்றனர். அவர்கள் விருந்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தனர். ஆக, நாம் எப்போதும், கடவுளின் அழைப்பிற்குத் தயாரிப்போடு இருக்க வேண்டும் என்கிற கருத்தை, இது வலியுறுத்திக்கூறுகிறது. இரண்டாவது கதையும் இதை அடியொற்றித்தான் இருந்தது. ஓர் அரசர் தனது பணியாளர்களுக்கு விலையுயர்ந்த...