Category: இன்றைய சிந்தனை

காட்டிக்கொடுத்தால் என்ன தருவீர்கள்?

யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து “இயேசுவை உங்களுக்குக் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். இந்த நிகழ்வை இன்று நாம் தியானிப்போம். “எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்புகொள்வார், அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது” (லூக் 16: 13) என்ற இயேசுவின் சொற்கள் இந்த நிகழ்விலே நிறைவேறுவதைப் பார்க்கிறோம். யூதாசு ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவைப் புறக்கணித்து, முப்பது வெள்ளிக் காசுகளுக்கு ஆசைப்பட்டு, அடிமையாகிவிட்டான். பணத்துக்காக இயேசுவையும், இயேசுவின் மதிப்பீடுகளையும் காட்டிக்கொடுப்பவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம். எப்பொழுதெல்லாம் பணத்தின்மீது அதிக ஆசை கொள்கிறோமோ, பணத்துக்காக பாவத்தை, குற்றங்களை, லஞ்ச ஊழல்களைச் செய்கிறோமோ, அப்பொழுதெல்லாம் நாம் இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறோம். இதில் ஐயமில்லை. பணத்தைப்...

இறைவனின் அளவற்ற அன்பு

யூதாசின் சதித்திட்டம் மிகவும் கொடூரமான ஒன்று. நடிப்பதில் அவன் கைதோந்தவனாக இருந்திருக்க வேண்டும். வெளிவேடத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. மற்ற சீடர்கள் மட்டும், யூதாஸ் செய்யப்போகிற காரியத்தைத் தெரிந்திருந்தால், அவனை உண்டு, இல்லையென்று ஆக்கியிருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு யூதாஸ் செய்யப்போகிற காரியம் தெரியவில்லை. மற்றவர்கள் அறியாதவண்ணம், உணராத வண்ணம் யூதாஸ் திறமையாக மூன்று ஆண்டுகளாக நடித்திருக்கிறான். அத்தனைபேரை ஏமாற்ற முடிந்த யூதாசால், இயேசுவை ஏமாற்றமுடியவில்லை. யூதாஸ் செய்யவிருப்பது தவறு என்பதை உணரும் வண்ணம், அவனது தவறிலிருந்து திருந்துவதற்கு இயேசு உண்மையில் பல கட்ட முயற்சி செய்கிறார். எப்படியாவது தனது சீடன், இந்த தவறிலிருந்து தப்பித்துவிட வேண்டும் என்று நிச்சயம் ஆசைப்பட்டிருப்பார். ஆனால், யூதாஸ் தனது நோக்கத்தை நிறைவேற்றுவதில் தெளிவாக இருந்தான். அவனுடைய மனம், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பதற்கு தயாராக இல்லை. இறுதியாக, தனது அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், இயேசு யூதாசிடம் செய்ய வேண்டியதை விரைவாகச் செய்ய வேண்டிக்கொள்கிறார். அந்த வார்த்தைகள் நிச்சயம்...

நம்பிக்கைதான் வாழ்க்கை

இஸ்ரயேல் மக்களின் கடவுள் அனுபவம் தான் விவிலியத்தின் பழைய ஏற்பாடு. நாடோடிகளாக, நாடே இல்லாமல், தங்களை வழிநடத்த அரசர் இல்லாமல், போர்த்தந்திர முறைகள் தெரியாமல் வாழ்ந்தவர்கள் இஸ்ரயேல் மக்கள். சமுதாயத்தின் விளிம்பு நிலை மக்களாக, ஒடுக்கப்பட்ட மக்களாக அறியப்பட்டார்கள். ஆனால், அவர்களைச்சுற்றிலும் பெரிய நிலப்பரப்புகளோடு, வழிநடத்த அரசர்களோடு, போர்த்தந்திர முறைகளோடு பாபிலோனியர்கள், அமலேக்கியர்கள், கானானியர்கள் எனப் பலர் வாழ்ந்து வந்தனர். இஸ்ரயேல் மக்களின் ஒரே நம்பிக்கை அவர்கள் வழிபட்டு வந்த ‘யாவே’ இறைவன். சிறிது காலங்களுக்குப்பின் அவர்கள் நாடுகளைக்கைப்பற்றி, ஒரு பெரிய தேசமாக உருவானபோது, இது தங்களின் வலிமையினால் கிடைத்த வெற்றி அல்ல, மாறாக, ‘யாவே’ இறைவன் தந்த வெற்றி என்று ஆர்ப்பரித்தனர். இது நெடுநாள் நீடிக்கவி;ல்லை. யாவே இறைவனை விட்டு விலகிச்சென்று, இறைவனுக்கு எதிராகப் பாவம் செய்தவுடன் நாட்டை இழந்து அடிமைநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அப்போது, அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டபோது, கடவுள் அவர்களை மன்னித்து...

துன்பத்தில் தாழ்ச்சி

வரலாற்றிலே, எத்தனையோ மனிதர்களுக்கு, சிலுவைச்சாவை பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள். இயேசுவைவிட கொடுமையான தண்டனையைக் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள்பட்ட பாடுகளைவிட இயேசுவின் பாடுகள் எவ்வாறு உயர்ந்தது என்கிற கேள்வி நம்முள் எழலாம். ஒருவேளை, இயேசு எந்தவித பாவமும் செய்யாதவர், இருந்தாலும் தண்டிக்கப்பட்டார், எனவே அவருடைய பாடுகளை நாம் நினைவுகூர்வது சாலச்சிறந்தது என்று நாம் பார்த்தோமென்றாலும்கூட, இயேசுவைப்போல் எத்தனையோ மனிதர்கள், தாங்கள் செய்யாத பாவங்களுக்காக, பொதுவாழ்விலே ஈடுபட்டதற்காக, அநியாயமாக தீர்ப்பிடப்பட்டு, தங்களுடைய உயிரை ஈகம் செய்திருக்கிறார்கள். இயேசுவினுடைய பாடுகள் ஒரே ஒருநாள். முந்தைய இரவு கைது செய்யப்படுகிறார். அடுத்தநாள் சிலுவையிலே அறையப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால், தொழுநோயினால், புற்றுநோயினால், காசநோயினால் வாழ்வு முழுவதும், உடல்வலியிலும், மனஉளைச்சலிலும், வாழ்ந்தும் இறந்துகொண்டிருக்கின்ற மனிதர்கள் மத்தியில், இயேசுவின் பாடுகள் எப்படி தனித்துவம் மிக்கதாக இருக்க முடியும் என்பதை நாம் சிந்தித்துப்பார்ப்போம். பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலே 2: 7 ல் பார்க்கிறோம்: ‘கிறிஸ்து தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்....

சுயநலம் அகற்றுவோம்

சதுசேயர்கள் சுயநலவாதிகளாக வாழ்ந்தனர். யாரையும் மதிக்காதவர்களாகவும், தங்களுக்கே உரித்தான் கர்வத்தோடு வாழ்ந்து வந்தனர். இது வெளியாட்களுக்கு மட்டுமல்ல, மற்ற சதுசேயரோடு கூட அவர்கள் இப்படித்தான் முரட்டுத்தனமாக இருந்தனர். அவர்கள் எப்போதும் தங்களது நலன் தேடுகிறவர்களாகவும், தங்களது நிலைக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் தான் தங்களின் அன்றாட வாழ்வை அமைத்துக்கொண்டனர். அவர்களின் முரட்டுத்தனத்திற்கு தலைமைக்குரு கயபாவின் வார்த்தைகள் சிறந்த எடுத்துக்காட்டு. இயேசு மீது மக்கள் நம்பிக்கை கொள்வதால், இவர்களுக்கு என்ன இழப்பு? என்ற கேள்வி நிச்சயம் நமக்குள்ளாக எழும். மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருக்குப் பின்னால் அணிவகுத்து நின்றால், தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். இந்த நிலையை அவர்களை ஆளுகின்ற உரோமையர்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். இந்தச்சூழ்நிலை உரோமையர்களின் கைப்பாவைகளாக இருக்கிற இந்த தலைமைச்சங்கத்தின் அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் முடிவு கட்டுவதாக அமைந்து விடும். எங்கே தங்களின் சொகுசு வாழ்க்கை இயேசுவின் பெயரால், அழிந்துவிடுமோ? என்கிற எண்ணம் தான், எப்படியாவது இயேசுவைத்தடுக்க வேண்டும் என்கிற...