Category: இன்றைய சிந்தனை

பாவத்திற்கு பரிகாரம்: ஆசையும், பேராசையும்

லூக்கா 7:36-50 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதா்கள் நாம் மிகவும் பலவீனமானவர்கள். குறைகள், கறைகள் கொண்டவர்கள். பாவிகளாகிய நாம் நம்முடைய பாவத்திற்கு பரிகாரம் செய்யும் போது நிறைவை நோக்கி புனிதத்தை நோக்கி வளர்கிறோம் என்பதை இன்றைய நற்செய்தி கற்றுத்தருகிறது. பாவத்திற்கு இரண்டு விதங்களில் நாம் பரிகாரம் செய்ய முடியும். 1. ஆசை ஆசை நான் பாவி தான் இருந்தாலும் நான் மாறுவேன் என்ற அதிகப்படியான ஆசை ஆளையே மாற்றுகிறது. அந்த ஆசை வளர வளர அது நம்மை புனிதத்திற்குள் கடத்திச் செல்லுகிறது. புனிதர்கள் அனைவரும் இந்த ஆசையைத் தான் கொண்டிருந்தார்கள். நற்செய்தியில் வரும் பாவியான பெண் இயேசுவின் காலடிகளைக் கழுவி பாவத்திலிருந்து வெளியே வருவதற்கான தன்...

ஏன் இப்படி இருக்கீங்க? இது வேண்டாம்!!!

லூக்கா 7:31-35 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். வாழ்க்கையில் ஒருசிலரை நாம் புரிந்துக்கொள்வதே மிகக் கடினம். அவர்களோடு பயணிப்பதே மிகவும் சிரமம். அப்படிப்பட்டவர்கள் நம் அருகில் இருந்துவிட்டால் நாம் அவ்வளவுதான். யார் அவர்கள்? என்பதை நற்செய்தி வாசகம் வெளிப்படையாக எடுத்துயம்புகிறது. எல்லாவற்றிலும் தவறு கண்டுபிடிப்பவர்கள் தான் அவர்கள். இப்படிப்பட்டவர்கள் இருக்குமிடம் இருக்கின்ற இன்பத்தையும் இழந்துவிடும், ஆண்டவர் இயேசுவை கூட இன்பமாய் இருக்க விடாமல் இவர்களின் வார்ததைகள் தடுத்திருக்கின்றன. இவர்கள் கண்டிப்பாக மாறனும். இந்த நிலை வேண்டாம் என அவர்களை இன்றைய வழிபாடு வளமையான மாற்றத்திற்கு வரவேற்கிறது. இரண்டு விதமான அழைப்புக்கள். 1. உயர் எண்ணத்திற்கு வருக! எதற்கெடுத்தாலும் தவறு கண்டுபிடிக்கும் மனநிலை கொண்டவர்கள் உயர் எண்ணத்திற்கு வர...

திருச்சிலுவையின் மகிமை விழா

உற்றுப்பாரு… உருமாறு… யோவான் 3:13-17 இறையேசுவில் இனியவா்களே! திருச்சிலுவை மகிமை பெருவிழா திருப்பிலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். எருசலேமில் கிபி 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் ஆண்டவரின் உயிர்ப்புக்கென்று ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. 13ஆம் நாள் உயிர்ப்பை நினைவுகூர்ந்த மக்கள் 14ஆம் தேதி ஆண்டவரின் சிலுவைச்சாவை நினைவுகூர்ந்து சிலுவையை அடையாளமாக வைத்து வழிபட்டனர். 5ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சிலுவை விழா செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. சிலுவை எப்படி திருச்சிலுவையாக மாறியது? சிலுவைச் சாவு என்றால் அது உரோமையர்கள் கொண்டு வந்தது என்பது பலரின் கருத்து. ஆனால் உலகின் பல்வேறு அரசியல் அமைப்பு முறைகளை ஆராய்ந்தால் இந்தியர்கள், கிரேக்கர்கள், எபிரேயர்கள், உரோமையர்கள்...

மன்னிக்கும் மனதைப்பெற….

பாவங்களை நாம் மூன்று வகையாகப் பார்க்கலாம். நாம் கடவுளுக்கு எதிராக செய்யக்கூடிய பாவங்கள் முதல் வகை. கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார். ஆனால், நாம் நன்றியுணர்வு இல்லாமல், அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் பலவேளைகளில், அவருக்கு எதிரான காரியங்களில் இறங்கியிருக்கிறோம். அவை கடவுளுக்கு எதிரான பாவங்கள். இரண்டாவது, நம்மோடு வாழக்கூடிய நம்முடைய சகோதர, சகோதரிகளுக்கு எதிராக நாம் செய்யக்கூடிய பாவங்கள். நாம் மட்டும் தான் வாழ வேண்டும் என்கிற சுயநலத்தோடு நாம் செய்யக்கூடிய பாவங்களை இந்த வகையில் உள்ளடக்கலாம். மற்றவரைப்பற்றி கவலைப்படாமல், நமது வாழ்வு, நமது குடும்பம் என்ற குறுகியமனப்பான்மை நம்மை பாவத்திற்கு அழைத்துச் செல்கிறது. மூன்றாவது வகையான பாவம், மற்றவர்கள் நமக்கு எதிராகச் செய்வது. நாம் சுயநலத்தோடு இருப்பது போல, மற்றவர்களும் சுயநலத்தோடு வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன்பொருட்டு, நமக்கு எதிராக பாவம் செய்கிறார்கள். இதிலே, நற்செய்தியில் நாம் கடவுளுக்கு எதிராக செய்யக்கூடிய பாவங்களையும், மற்றவர்கள் நமக்கு எதிராக செய்யக்கூடிய...

இறைவார்த்தை

பாலஸ்தீனப்பகுதியில், கோடைகாலத்தில் ஆறுகள் வறண்டு மணல்மேடுகளாக காட்சியளிக்கும். செப்டம்பர் மாதத்திற்கு பிறகு மழைக்காலம் வருகின்றபோது, தண்ணீர் வெள்ளம் போல, ஆறு பெருக்கெடுத்து ஓடும். புதிதாக வீடு கட்ட இடம் தேடுகிற ஒருவன், ஆறுகள் வறண்டு மணல்திட்டுகளாக இருப்பதைக்கண்டு, கட்டுவதற்கு அது எளிதான இடம் என்பதால், அதைத்தேர்ந்தெடுக்கிறான். மழை வருகிறபோது, வெள்ளம் வந்து அவனுடைய உழைப்பையெல்லாம் வீணாக்கப்போகிறது என்பது தெரியாமல், அந்த வீட்டைக்கட்டுகிறான். இறுதியில் வீடு ஆற்றோடு போய்விடுகிறது. கட்டுவதற்கு கடினமாக இருந்தாலும், அனைத்தையும் பொறுத்துக்கொண்டு, பாறை மீது பொறுமையாக வீடுகட்டுகிறவன், வெள்ள நேரத்தில் ஆபத்து இல்லாமல் மகிழச்சியோடு வாழ்கிறான். எதற்காக, ஒரு மனிதர் மண்மீது வீடுகட்டுகிறார்? 1. அது அவரின் சோம்பேறித்தனத்தைக் காட்டுகிறது. பாறைமீது வீடு கட்டுவதைக்காட்டிலும், மணல்மீது எளிதாக வீடுகட்டி விடலாம் என்கிற சோம்பேறித்தனமான எண்ணம் தான் அவரது அழிவுக்குக்காரணமாகி விடுகிறது. 2. எதிர்காலத்தில் அவர் சந்திக்கிற ஆபத்தைப்பற்றி சீராயாத நிலையைக்காட்டுகிறது. எந்தஒரு பணியைச்செய்தாலும் அது சரியான திட்டமிடலோடு இருக்க...