Category: இன்றைய சிந்தனை

இயேசுவின் போதனை

இயேசுவின் போதனை மக்களுக்கு ஏற்ற எளிய போதனையாக இருந்தது என்பது நமக்குத் தெரியும். இதுவரை தொழுகைக்கூடத்தில் போதித்துக்கொண்டிருந்தவர், இப்போது ஏரிக்கரைக்கு மாற்றியிருக்கிறார். அதற்கேற்ப, தனது போதனையின் வழிமுறைகளையும் மாற்றுகிறார். தொழுகைக்கூடத்தில் போதிப்பது எளிதானது. ஏனெ்றால், எப்படியும் மக்கள் கண்டிப்பாக வருவார்கள். நாம் சொல்வதைக் கேட்பார்கள். வழிபாடு முடியும் வரை, பிடிக்கிறதோ, இல்லையோ, புரிகிறதோ, இல்லையோ, அங்கே கடைசிவரை அமர்ந்திருப்பார்கள். ஆனால், தொழுகைக்கூடத்திற்கு வெளியே போதிப்பது என்பது சவாலானது. தொழுகைக்கூடத்திற்கு வரும் மக்கள்கூட்டம் கட்டாயத்தின் பேரில் வரக்கூடியது. இங்கே கட்டாயம் கிடையாது. அப்படியே ஆசையில் வந்தாலும், கடைசிவரை அமர்ந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. பிடித்திருந்தால் அமர்ந்திருக்கலாம். அல்லது சென்றுவிடலாம். இப்படிப்பட்ட சவாலான பணிதான், தொழுகைக்கூடத்திற்கு வெளியே போதிப்பது. எனவே, இயேசு தனது வழிமுறைகளிலும் மாற்றம் கொண்டுவருகிறார். மக்களின் வாழ்வில் தொடர்புடையவற்றை வைத்து, கடினமான இறையாட்சி தத்துவங்களை விளக்க முயல்கிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். இன்றைய மறையுரைகள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு...

உமது திருவுளம் நிறைவேற்ற கடவுளே இதோ வருகின்றேன்

திருப்பாடல் 40: 1 – 3, 6 – 7, 9 – 10 விருப்பம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. நமது விருப்பத்தை நிறைவேற்ற நாம் முயற்சி எடுக்கிறோம். எல்லா விருப்பங்களையும் நிறைவேற்ற முடியுமா? எல்லா விருப்பங்களும் நிறைவேற்றுவதற்கு தகுதியானதா? நிச்சயம் இல்லை. மனம் ஒரு குரங்கு என்று சொல்வார்கள். மனம் நினைப்பதையெல்லாம் நாம் நிச்சயம் நிறைவேற்ற முடியாது. அப்படி நிறைவேற்றினால் அதில் 90 விழுக்காடு தவறான காரியமாகத்தான் இருக்கும். ஏனென்றால், நாம் நமது மனதைக் கட்டுப்படுத்தவில்லையென்றால், அது தன்போக்கில் சென்று, பல தவறுகளுக்கு வழிவகுத்துவிடும். இந்த நிலையை தாவீது அரசர் அறியாதவரல்ல. அவர் ஏற்கெனவே பத்சேபா விஷயத்தில் அனுபவப்பட்டிருக்கிறார். இந்த திருப்பாடல், உள்ளத்தில் எழுந்திருக்கிற ஒருவிதமான சோதனையை வென்று, மகிழ்ச்சியின் நிறைவில் வெளிப்படக்கூடிய திருப்பாடல். தாவீது அரசருக்கு ஒருவிதமான சோதனை. தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற நெருடல் மனதிற்குள்ளே அரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அது தவறானது என்பதை, அவரது அறிவு...

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்திப் பறைசாற்றுங்கள்

திருப்பாடல் 117: 1, 2 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கியபோது, அவரது தொடக்க முழக்கமாக அமைந்தது: ”மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்பதுதான். இன்றைய தியான வாக்கியமும், உலகமெல்லாம் சென்று, படைப்பிற்கு நற்செய்தியைப் பறைசாற்ற அழைப்புவிடுக்கிறது. நற்செய்தி என்றால் என்ன? இயேசு அறிவிக்க வந்த நற்செய்தி என்ன? லூக்கா 4: 18 ம் இறைவார்த்தையில் அந்த நற்செய்தியை இயேசு அறிவிக்கிறார். அதாவது, ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், தாழ்நிலையில் இருப்போர் அனைவரையும் கடவுள் அன்புசெய்கிறார். அவர்களும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். அவர்களும் முழுமையாக அன்பு செய்யப்பட வேண்டும் என்பதுதான், இயேசுவின் நற்செய்தி. ஏன் இந்த நற்செய்தி உலகம் முழுவதிலும் அறிவிக்கப்பட வேண்டும்? இந்த உலக கண்ணோட்டத்தின்படி பார்க்கிறபோது, பல மக்கள் தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பதனால், அவர்கள் வாழ்க்கை முழுவதுமாக ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இனி வேறு வாழ்வே இல்லை என்பது போன்ற தவறான பார்வைகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும், மீ்ண்டும் செய்த...

மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்

இன்றைய நற்செய்தியில் மூன்று முக்கியமான வார்த்தைகள் இயேசுவின் பணிவாழ்வின் மையமாகக் கருதப்படுகிறது. மனம்மாற்றம், நற்செய்தி மற்றும் நம்பிக்கை என்பதுதான் அந்த மூன்று வார்த்தைகள். மனம்மாற்றம் என்பது பாவத்தை வெறுப்பது. இதுவரை பாவத்திலே வாழ்ந்தவன், பாவத்தோடு வாழ்ந்தவன், பாவியாக இருந்தவன், இப்போது பாவத்தை வெறுக்கிற நிலைதான் மனமாற்றம். இயேசுவின் இரண்டாம் செய்தி நற்செய்தி. இயேசு நற்செய்தி அறிவிப்பதற்காக வந்திருக்கிறார். அது என்ன நற்செய்தி? நம்பிக்கை தரும் நற்செய்தி. முற்காலத்தில், வாழ்வே நம்பிக்கையின்மையினால் நிறைந்திருந்தது. அனைத்தையும் எதிர்மறையாக சிந்திக்கும் எண்ணம் இருந்தது. ஆனால், இயேசுவின் மண்ணக வாழ்வு நம்பிக்கை தரும் நற்செய்தியாக இருக்கிறது. அவரது போதனைகளும், அவர் செய்த புதுமைகளும் நம்பிக்கையிழந்திருந்த மக்களுக்கு, புதிய ஒளியைத்தருவதாக இருக்கிறது. இயேசு தரும் மூன்றாவது செய்தி நம்பிக்கை. நம்பிக்கை எதை வெளிப்படுத்துகிறது? நம்பிக்கை கடவுளின் அன்பை, இரக்கத்தை, மன்னிப்பை, பராமரிப்பை உணர்த்துகிறது. கடவுள் எல்லாம் வல்லவராக இருக்கிறார் என்பதையும், அவரிடத்திலே நாம் நம்பிக்கை வைக்கிறபோது, நாம் மகிழ்வோடு...

ஆண்டவரே! உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்

திருப்பாடல் 85: 7, 9, 10 – 11, 12 – 13 இந்த திருப்பாடல் இஸ்ரயேல் மக்கள். பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டு, அங்கிருந்த திரும்பி வந்த நிலையில் எழுதப்படுவதாக, விவிலிய அறிஞர்கள் நம்புகிறார்கள். கடவுளுக்கு எதிராக இஸ்ரயேல் மக்கள் செய்த பாவங்களுக்கு, பாபிலோன் சிறைவாசம் கடவுளின் தண்டனையாக அமைந்தது. கடவுளுக்கு எதிராக பாவம் செய்ததும், கடவுளின் குரலுக்கு செவிகொடுக்காமல் புறக்கணித்ததும் இந்த தண்டனைக்கான காரணங்கள். பாபிலோனில் இஸ்ரயேல் மக்கள் சந்தித்த கொடூரங்கள், கொடுமைகள் நிச்சயம் கடவுளின் அன்பை அவர்கள் உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாக இருந்திருக்கிறது, என்பதை இந்த திருப்பாடலின் வரிகள் நமக்கு உணர்த்துகிறது. புதிய விடியலை, புதிய வாழ்வை எதிர்நோக்கியிருக்கக்கூடிய இஸ்ரயேல் மக்கள், தங்களின் கடந்த கால கசப்பு வாழ்வை மறந்து, இனியாவது கடவுளின் மீது நம்பிக்கை வைத்து, தங்களது வாழ்வை வாழ. இது அழைப்புவிடுக்கிறது. கடவுளின் கோபம் தங்கள் மீது முழுமையாக தணிந்துவிட்டதா? இல்லையா? என்ற சந்தேகம் அவர்களுக்கு...