Category: தேவ செய்தி

நிலையான, நிறைவான மகிழ்ச்சி

இயேசு கிறிஸ்து ”உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்” என்று சொல்கிறார். கிறிஸ்தவர்களாக இருக்கக்கூடிய நமக்கு எப்படிப்பட்ட மகிழ்ச்சி பரிசாகக் கிடைக்கும் என்பதை இன்றைய வாசகங்கள் வாயிலாக நாம் பார்ப்போம். 1. கிறிஸ்து தருகிற மகிழ்ச்சி நம்மிடமிருந்து எடுக்கப்படாது. உதாரணமாக, ஒரு பொருள் வாங்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். அந்த பொருளை வாங்கியும் விடுகிறோம். நமக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சி எத்தனை காலம் இருக்கும்? ஒருநாள் இருக்கும். ஒரு வாரம் இருக்கும். அவ்வளவுதான். அந்த மகிழ்ச்சி காலப்போக்கில் மறைந்துவிடும். ஆனால், இயேசு தரக்கூடிய மகிழ்ச்சி காலத்திற்கும் நிலைத்து நிற்கும். இயேசு தரக்கூடிய மகிழ்ச்சியின் இரண்டாவது பண்பு 2. நிறைவான மகிழ்ச்சி. முழுமையான மகிழ்ச்சி. ஒரு பொருளை நாம் வாங்குகிறபோது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி நிறைவான மகிழ்ச்சி அல்ல. அதைவிட சிறந்த பொருளைப் பார்க்கிறபோது, அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதை வாங்கினாலும், நமது மகிழ்ச்சி நிறைவு கொள்வதில்லை. இன்னும்...

இயேசுவில் நமது நம்பிக்கை

வாழ்வைப்பற்றி பலவிதமான சிந்தனைகளை, பல காலகட்டங்களில் மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அதிலே குறிப்பிடத்தகுந்த சிந்தனை, இந்த உலகத்தில் வாழுகிறபோது, எதிர்காலத்தை நினைத்தோ, அடுத்த உலகத்தை நினைத்தோ கவலை கொள்ளத்தேவையில்லை. இந்த உலகம் உண்மையானது. இந்த நிமிடம் உண்மையானது. அதில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். எதிர்காலத்தைப்பற்றி நினைத்து, வீணாகக் கவலைக் கொள்ளக்கூடாது என்று சொல்வார்கள். இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வார்த்தைகளை சற்று தியானிக்கிறபோது, யூதர்களின் மனநிலை தான் நினைவுக்கு வருகிறது. யூதர்களைப் பொறுத்தவரையில் இந்த உலகத்தைப்பற்றிய பார்வை இரண்டு கட்டங்களை உடையது. இந்த உலகம் தீய ஆவிகளின் பிடியில் இருக்கிறது என்றும், நாம் மகிழ்ச்சியாக வாழக்கூடிய எதிர்காலம் ஒன்று இருக்கிறது என்றும் நம்பினர். அந்த எதிர்கால வாழ்விற்கான தயாரிப்பு தான், நாம் வாழக்கூடிய வாழ்வு. எனவே, நிகழ்காலத்தில் துன்பங்கள், பாடுகள் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல், எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள இருக்கிற பேரின்பத்தை மனதில் நிறுத்தி வாழ, இது நமக்கு அழைப்புவிடுக்கிறது. இது நிகழ்காலத்தை தவிர்ப்பதாக...

தூய ஆவியின் ஆற்றல்

இயேசுவின் சீடர்கள் வருத்தமடைவதற்கு பல காரணங்கள் இருந்தது. அவற்றுள் முதன்மையான காரணம், இயேசு விரைவில் அவர்களை விட்டு பிரிய இருக்கிறார் என்பதுதான். தான் சீடர்களை விட்டுப்பிரிந்தாலும், அது சீடர்களுக்கு ஆதாயம் தான் என்பது இயேசுவின் எண்ணம். ஏனென்றால், இயேசுவின் பிரிவு அவர்களுக்குத் தூய ஆவியானவரின் துணையைத்தரும். உடல் என்பது வரையறைக்கு உட்பட்டது. உடலுக்கு என்று எல்லை இருக்கிறது. ஆனால், ஆவிக்கு எல்லை கிடையாது. எங்கும் செல்லலாம். உடலுக்கு இருப்பது போல, குறிப்பிட்ட காலம் தான் வாழ்வு என்பதெல்லாம் கிடையாது. எனவேதான் இயேசு இறந்து உயிர்த்த பிறகு தனது சீடர்களிடம் ”இதோ! உல முடிவுவரை எந்நாளுமு் நான் உங்களோடு இருக்கிறேன்” என்று மத்தேயு 20: 20 ல் சொல்கிறார். இந்த ஆவியின் ஆற்றல் தான் இயேசுவை நம்புகிற, இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்குகிற ஒவ்வொரு மனிதர்களையும் இயக்கிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு எத்தனையோ புத்தகங்கள் இருக்கிறது. அவற்றிலெல்லாம் தனித்தன்மை வாய்ந்தது விவிலியம் என்று நாம் சொல்கிறோம். ஏன்?...

திக்கற்றவர்களாக விடமாட்டேன்

நாம் ஒருவர் ஒருவரை எவ்வாறு அறிமுகம் செய்கிறோம் என்பதை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம். அது இயேசு விரும்பும் சமூகத்தை உருவாக்கும். நாம் பொதுவாக ஒருவரை அறிமுகம் செய்யும்போது, இவர் படித்திருக்கிறார்; இவர் ……. சம்பளம் வாங்குகிறார்; இவர் இந்தப் பதவியில் இருக்கிறார் என்றுச் சொல்லி அறிமுகம் செய்கிறோம்.இவர் அன்புள்ளம் கொண்டவர்; ஏழைகளுக்கு இரங்குபவர்; நியாயம் நீதியோடு வாழ்பவர் என்று யாருடைய நற்பண்புகளையும் சொல்லி அறிமுகம் செய்வது மிக அரிதாகிவருகிறது. இறைவன் தன்னை வெளிப்படுத்தும்போதெல்லாம் தன்னை அன்புசெய்யும் இறைவனாக அறிமுகம் செய்கிறார். அன்புசெய்து அவர்களோடு குடிகொள்ளும் தெய்வமாக அறிமுகம் செய்கிறார். “நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்”(யோவான் 14:23). “திக்கற்றவர்களாக விடமாட்டேன்”(யோவான்14:18) “கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்”(1 யோவான் 1:9) நம்மை திக்கற்றவர்களாக கைவிடாத இறைவன், நம்மோடு குடிகொள்ள விரும்பியதால், இம்மானுவேல் இறைவனாக இவ்வுலகில் பிறந்தார். தொடர்ந்து நம்மை வாழ்விக்க விரும்பிய...

இயேசுவோடு இருத்தல்

”ஊரோடு ஒத்து வாழ்” என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம். இது இந்த உலகக் கண்ணோட்டத்தை நமக்கு அறிவிக்கக்கூடிய சொற்றொடராக இருக்கிறது. இந்த உலகப்போக்கு எப்படி இருக்கிறதோ, அதற்கேற்ப நாம் வாழ வேண்டும். விழுமியம், மனச்சான்று போன்றவைகளுக்கு அங்கு வேலை இல்லை. நீதி, நியாயத்திற்கா நிற்க வேண்டும் என்பதல்ல. பத்து பேர் அநியாயத்தை, நியாயம் என்று சொன்னால், அதற்கு நாம் துணை நிற்பதுதான், இந்த பழமொழியில் பொருள். இயேசுவின் வார்த்தைகளைப் பின்பற்றினால், நாம் ஊரிலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகத்தான் இருப்போம். ஏனென்றால், இன்றைக்கு 99 விழுக்காடு மக்கள் ஊரோடு ஒத்துவாழ பழகிவிட்டார்கள். புதிதாக நாம், விழுமியங்களுக்கு ஆதரவாகப் போராடுகிறபோது, நாம் தனித்து விடப்படுவோம். மற்றவர்களிடமிருந்து விலக்கி வைக்கப்படுவோம். அப்படி இருக்கிறபோது, நாம் கவலைப்படுவதற்கு பதிலாக மகிழ்ச்சி அடைய வேண்டும். காரணம், நாம் இயேசுவின் அருகில் இருக்கிறோம். இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். உண்மையை எடுத்துரைத்தார். அவரை இந்த அதிகாரவர்க்கம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆனால், அவர் கவலைப்படவில்லை....