Category: தேவ செய்தி

வாழ்வு ஏற்படுத்தும் தாக்கம்

ஒரு மரத்தை நாம் நடுகிறோம்? எதற்காக? அதிலிருந்து பயன் பெறுவதற்காக, பலன் பெறுவதற்காக. எதை நாம் செய்தாலும், அதிலிருந்து பலன் எதிர்பார்க்கிறோம். இந்த உதாரணத்தைத்தான் நமது வாழ்விற்கு ஒப்பிட்டு இயேசு இன்றைய நற்செய்தியில் (+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 12-17) பேசுகிறார். ”நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்”. இந்த இறைவார்த்தையில் இரண்டு அர்த்தங்களை நாம் பார்க்கலாம். 1. கனி தர வேண்டும். 2. அந்த கனி நிலைத்திருக்க வேண்டும். சீடர்களை இயேசு அழைத்தது இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான். சீடர்கள் அனைவரும் பலன் தர வேண்டும். சீடர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு பயன் உள்ளதாகவும், பலன் உள்ளதாகவும் இருக்க வேண்டும். அதாவது சீடர்கள் நற்செய்தி அறிவிப்பதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நற்செய்தி மக்களுக்கு போய்ச் சேர வேண்டும். அந்த நற்செய்தி மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதேபோல, போதிக்கக்கூடிய சீடர்களின் வாழ்வும் மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்த...

அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்

எருசலேம் நகரத்தின் முக்கியத்துவத்தை தாவீது அரசர் காலத்தில் தான், மக்கள் அதிகமாக உணர்ந்தனர். அதற்கு தாவீதின் முயற்சியும் ஒரு காரணம், யெருசலேம் நகரை, கடவுளின் நகரமாக மாற்றியதில், தாவீதின் பங்கு மிக அதிகம் உண்டு என்பதில், மாற்றுக்கருத்து இல்லை. மக்களை ஒன்றிணைக்க, எருசலேம் நகரத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர வேண்டும் என்பதில், அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இந்த திருப்பாடல் (திருப்பாடல் 122: 1 – 2, 4 – 5) இந்த பிண்ணனியில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இஸ்ரயேல் மக்கள் பல திருவிழாக்களை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த திருவிழாக்களை எருசலேமில் கொண்டாடினர். திருவிழாக்களைக் கொண்டாடுவதற்காக அவர்கள் எருசலேம் வருகிறபோது பாடுகிற பாடலாக இந்த பாடல் அமைந்திருக்கிறது. எருசலேம் என்பதை, நம்முடைய புரிதலில் விண்ணக வீடாக எடுத்துக்கொள்ளலாம். விண்ணகம் தான் நமது நிலையான இல்லம். அந்த விண்ணக இல்லத்தில் நுழைவதைத்தான் நாம் நமது வாழ்வின் இலக்காகக் கொள்ள வேண்டும். அந்த இல்லத்தில்...

உலகம் தரமுடியாத அமைதி

தனி மனிதர்களும், சமூகங்களும், நாடுகளும் நாடித் தேடும் ஒன்று அமைதி. பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், பல நாடுகளும் போர்களாலும், உள்நாட்டுக் குழப்பங்களாலும் அமைதியின்றி தவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தியத் திருநாடுகூட, பொருளாதார வளர்ச்சி பெற்றாலும், அண்டை நாடுகளாலும்,  தீவிரவாதத்தாலும் அமைதியின்றித் தவிக்கின்றது. ஆயுதங்களால் உண்மையான அமைதியைக் கொண்டுவர முடியாது. உறவால்தான் முடியும். குடும்பங்களிலும் இன்று அமைதியற்ற சூழல். கணவன்-மனைவிக்கிடையே, பெற்றோர்-பிள்ளைகளுக்கிடையே அமைதியின்றி வாழும் நிலை காண்கிறோம். பணமோ, பொருள்களோ அமைதியைத் தர இயலாது. உறவுதான் அமைதியைத் தரும். முதலில், இறைவனோடு நல்லுறவு கொள்வோம். அப்போது, உலகம் தர இயலாத அமைதியை அவர் நமக்குத் தருவார். மன்றாடுவோம்: அமைதியின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் விரும்பித் தேடுகிற அமைதியை, நீர் மட்டுமே தரமுடிகின்ற அமைதியை எங்கள் நாட்டுக்கும், குடும்பங்களுக்கும், எங்களுக்கும் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். ~அருட்தந்தை குமார்ராஜா

கண்ணின்மணிபோல் காக்கும் தெய்வம்

இயேசுவின் வார்த்தைகள் சீடர்கள் உள்ளத்தில் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஏதோ ஒரு சோகம் தங்களை ஆட்கொள்ளப்போகிறது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அது என்னவென்று அவர்களுக்குச் சொல்லத்தெரியவில்லை. ஆனாலும், அவர்களின் உள்ளங்களில் சோக ரேகை படர்ந்திருந்தது. இயேசு அவர்களின் உள்ளங்களை அறிந்தவராக, தனது போதனையைத்தொடங்குகிறார். அவருடைய போதனை அவர்களுக்கு ஆறுதல் தருவதாக இருக்கிறது. தான் அவர்களிடமிருந்து பிரியப்போவதை பல நேரங்களில், அவர்கள் அறியும்வண்ணம் மறைபொருளாகச்சொன்ன இயேசு, இப்போது தனது பிரிவு தவிர்க்க முடியாது என்பதையும், ஆனால், அதைப்பற்றி அவர்கள் அஞ்சத்தேவையில்லை என்பதை, அவர்களுக்கு தூய ஆவியானவரைக்கொடுப்பதன் மூலம் சொல்கிறார். சீடர்கள் இயேசுவின் பிரிவைப்பற்றிக் கவலைகொள்ளக்கூடாது. இயேசு நம்மை தனியே விட்டுவிட்டுச் செல்கிறவர் அல்ல. இயேசுவுக்கு நம்மைப்பற்றி நன்றாகத் தெரியும். எப்படியும் அவர் நம்மை ஏதாவது ஒருவகையில், பாதுகாத்துக்கொண்டே இருப்பார். இயேசுவின் பிரசன்னம் நம்மோடு ஏதாவது ஒருவகையில் இருந்துகொண்டே இருக்கும். அவர் நம்மைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார். நம்மை எந்த ஆபத்தும் நெருங்காமல் பாதுகாத்துக்கொண்டு இருக்கிறார்....

THE TEMPTATION TO DO GOOD

“This will permit us to concentrate on prayer and the ministry of the word.” –Acts 6:4 There is no chaining the Word of God (2 Tm 2:9), but the messengers of God’s Word can be chained. We are often chained through sin, selfishness, or fear. However, we can be chained in more subtle ways. For example, the devil tried to chain the apostles by making them think they needed to cut back temporarily on prayer and the ministry of the Word to deal with a disagreement in the early Church (Acts 6:2ff). He tempted them by encouraging them to do...