Category: தேவ செய்தி

பொல்லார் கையினின்று என்னை விடுவித்தருளும்

திருப்பாடல் 71: 1 – 2, 3 – 4, 5 – 6, 17 பொல்லார் யார்? தீங்கு செய்யக்கூடியவர்களே பொல்லார். தீங்கு செய்யக்கூடிய மனிதர்களிடமிருந்து விடுவித்தருள வேண்டும் என, திருப்பாடல் ஆசிரியர் வேண்டுகிறார். யாரெல்லாம் சுயநலத்தோடு சிந்திக்கிறார்களோ அவர்களே தீங்கு செய்யக்கூடியவர்கள். அவர்கள் வெறுமனே உடலுக்கு மட்டும் தீங்கு செய்யக்கூடியவர்கள் அல்ல. மாறாக, அவர்கள் ஆன்மாவிற்கும் ஊறு விளைவிக்கக்கூடியவர்கள். அவர்களின் சுயநலத்திலிருந்தும், தீங்கு செய்யக்கூடிய எண்ணத்திலுமிருந்து தன்னைக் காத்தருள கோரிக்கை வைக்கிறார். ஏன் கடவுளிடம் கோரிக்கை வைக்கிறார்? கடவுள் மட்டும் தான், அரணாகவும், கோட்டையாகவும் இருந்து தன்னை காக்க முடியும் என்று, ஆசிரியர் நம்புகிறார். மனிதன் பலவீனன். அவன் நல்லவனாக வாழ வேண்டும் என்று விரும்பினாலும், நினைத்தாலும் இந்த உலகம் அவனை சும்மா விட்டுவிடாது. ஒருவன் நல்லவனாக வாழ விரும்பினால், அவன் சந்திக்கக்கூடிய சவால்கள் இந்த உலகத்தில் நம்ப முடியாதவையாக இருக்கும். அந்த அளவுக்கு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்....

உலகமா? உன்னதவரா?

யோவான் 12:1-11 மார்த்தா மரியா குடும்பத்தின் உற்ற நண்பர் இயேசு. எருசலேமில் இட நெருக்கடியான பாஸ்கா காலத்தில், பயணிகள் பெத்தானியாவில் தங்குவது வழக்கம். நாடோடி வாழ்வு வாழ்ந்து, தலைசாய்க்க இடமில்லாத இயேசுவுக்கு இவர்களின் வீடே இளைப்பாறும் இடம். அங்கு நடந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு நிகழ்வும், கதை மாந்தர்களும் நம்மை பிறதிப்பலிக்கிறவர்களாகவே தெரிகின்றனர். புனித வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள நாம் மரியா போல இயேசுவிடம் உறவு கொண்டுள்ளோமா? அல்லது யூதசைப்போல இயேசுவிடம் நடந்து கொள்கின்றோமா? மரியா: ஆண்டவரின் காலடியில் அமர்ந்து அவரது வார்த்தைக்குச் செவி சாய்த்தவர். (லூக்10:34) ஆண்டவரிடத்தில் அளவுக்கதிகமாக அன்பினைக் கொண்டவள், அவ்வன்பினை தன் செயலில் காட்டியவள். ‘விலையுயர்ந்த’, ‘நல்ல’ என்ற ஒவ்வொரு சொல்லும் அவரின் அன்பிற்கு சான்றே, அவர் தன் சீடர்களின் கால்களை நீரினால் கழுவும்முன்பே இவள் இவரின் கால்களை நறுமணத்தைலம் கொண்டு கழுவுகிறார். சீடத்துவத்தின் சிகரம் ஆகுகிறாள். யூதாஸ்: இயேசுவை காசுக்காகவே காட்டிக்கொடுக்கப் போகிறான் என்பதின் முன்னோட்டமாகவே இந்நிகழ்வு...

குருத்து ஞாயிறு

லூக் 22 :14- 23:56 சந்தித்து சாதிக்க, சிந்திக்க குருத்து ஞாயிறு, ‘ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு’ என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இன்று இயேசு எருசலேம் நகரில் நுழைந்ததே தமதுப் சாவினை சந்திப்பதற்காகவே. இன்றைய முதல் இரண்டு வாசகங்களும் நற்செய்தியும் கிறிஸ்துவின் திருப்பாடுகளை நமக்கு நினைவூட்டுகின்றன. கிறிஸ்துவின் பாடுகளின் மறைபொருளை அறிந்து, நமது துன்பங்களை கிறிஸ்துவின் பாடுகளுடன் இணைத்து அவற்றை மீட்பின் சக்தியாக மாற்றக் கற்றுக் கொள்ள வேண்டும். ஏன் எருசலேம்? இறைவாக்கினர் யாரும் எருசலேமில் மடிவதில்லை என்பதை அவர் நன்கு தெரிந்திருந்தார். இதுவரை என் காலம் இன்னும் வரவில்லை என்றவர் காலம் வந்துவிட்டதை மிகவும் நன்றாக அறிந்தே எருசலேம் நகருக்குள் நுழைகிறார். ஏன் இன்று? யூதர்களின் ஆண்டுகளில் ‘நிசான்’ என்னும் மாதம் மிகவும் முக்கியமானது. காரணம் அவர்களுக்கு இதுவே முதல்மாதம், இந்த மாதத்தின் பத்தாம் நாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படம் நாள், ஆம் அந்த நாளில் தான் யூதர்கள் தங்கள்...

பலருக்காக ஒருவர்

யோவான் 11: 45-57 நேற்றைய நற்செய்தியின் இறுதியிலும், இன்றைய நற்செய்தியின் தொடக்கத்திலும் முக்கியமான ஒரு ஒற்றுமை இருப்பதை நம்மால் காண முடிகிறது. அதாவது அதிகார வர்க்கத்தினரான தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அவரை எதிர்த்தாலும் சாதாரண பாட்டாளி மக்கள் அவரை நம்ப துவங்கினர். எளிய மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தான் கயப்பா, “இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது” என்றார். இங்கே அவர் யூத இனமக்களையும், அவரின் அதிகாரத்தையும் பாதுகாப்பதற்கே இவ்வாறு கூறினார். ஆனால் உண்மையிலேயே இது தான் கிறிஸ்துவின் வருகையின் நோக்கம். இதை நாம் பல இடங்களில் காணலாம். குறிப்பாக 3: 16 ல் அவர் இவ்வுலகிற்கு வந்ததே இறப்பதற்காக, அந்த இறப்பு நம்மை மீட்பதற்காகவே. எப்படி ஓர் ஆதாமினால் பாவம் இம்மண்ணுலகில் நுழைந்ததோ. இரண்டாம் ஆதாமினால் பாவம் முழுவதும் அகற்றப்பட்டது. எப்படி ஒரு மரத்தினால் முதல்...

கடவுள் எங்கோ இல்லை

யோவான் 10.31-42 பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே இயேசு தன் பணியைச் செய்து வந்தார். “இதோ இக்குழந்தை இஸ்ராயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்” என்ற இறைவாக்கினர் சிமியோனின் வாக்கு (லூக் 2:24) செயல்பட தொடங்கியது. தன் சொந்த ஊரிலேயே அவருக்கு எதிர்ப்பு, அவரைக்கல்லால் எரிந்து கொல்லவும், கேள்விகள் கேட்டு அவமானப்படுத்தவும், வாதம் புரிந்து தோற்கடிக்கவும், சூழ்ச்சிகள் செய்து உரோமையர்களிடம் மாட்டி விடவும் பல முயற்சிகள். இவை அனைத்திற்குமான காரணம் அவர் கடவுளை தந்தை என்று அழைத்தும், என்னைக் காண்கின்றவன் தந்தையைக் காணலாம் என்றும், தந்தையின் செயலினையே நான் செய்கிறேன் என்றும், கடவுளை நம்மோடு ஐக்கியப்படுத்தியதற்காகவே, கடவுளை நம் மத்தியில் கொண்டு வந்ததற்காகவே, அவரை மத்தியில் விட்டு அனைவரும் ஏளனம் செய்தனர். யூதர்களைப் பொறுத்தவரை கடவுளை எங்கோ இருப்பவராகவேப் பார்த்தனர். அவரை தம்மில் ஒருவராக அவர்களால் பார்க்க முடியவில்லை. அவர் இப்படி, அப்படியென்று கடவுளுக்கு வரையறைக் கொடுத்தார்கள்....