Category: Daily Manna

நீதிமான்களே! ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்

தானியேல் 1: 59 – 60, 61 – 62, 63 – 64 மண்ணகத்தில் இருக்கிறவர்களைப் போற்றிப் புகழ இந்த பாடல் அழைப்புவிடுக்கிறது. அதிலும் சிறப்பாக இறைவனுக்கு நெருக்கமாக இருக்கிறவர்கள், இறைவன் அதிகமாக அன்பு செய்யக்கூடியவர்களுக்கு இந்த அழைப்பானது விடுக்கப்படுகிறது. ஆண்டவரின் குருக்கள், இறைவனுக்காக ஊழியம் செய்கிறவர்கள், நீதிமான்கள், தூய்மையான உள்ளம் கொண்டவர்கள் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. துன்பங்கள் மற்றும் துயரங்களுக்கு மத்தியிலும் இறைவனை முழுமையாகப் பற்றிக்கொண்டவர்கள் தான், இந்த பாடலில் சொல்லப்படுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இறைவன் தான், அவர்களுக்கு உரிமைச்சொத்து. எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், இறைவனோடு ஒன்றித்திருக்கிறவர்கள் இவர்களே. அவர்கள் இறைவனைப் புகழ்ந்து பாடுகிறபோது, இந்த உலகத்தில் இருக்கிற பலரும் இறைவனின் வல்ல செயல்களை உணர்ந்து கொள்வார்கள். எனவே, இறைவனுக்கு நெருக்கமானவர்கள், தங்களது வாழ்வில் எது நடந்தாலும் தொடர்ந்து இறைவனைப் போற்றிக் கொண்டிருப்பது மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணம். அவர்களும் இறைவனைப் போற்றுவதற்கான ஒரு அடித்தளத்தை...

இயற்கையைப் பாதுகாப்போம்

இயற்கை நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிற வரப்பிரசாதம். மரங்களும், விலங்குகளும் இயற்கையோடு இணைந்தவை. அவை நமக்கு சில அடையாளங்கள் வழியாக பல செய்திகளைத் தருகிறது என்பது நாம் அறிந்த ஒன்று. குறிப்பாக, மரங்கள் செழித்து வளர்வது, இலைகளை உதிர்ப்பது, காய் காய்ப்பது, கனி தருவது என்பதான ஒவ்வொரு செயலும், பருவநிலைகளைப்பற்றிய செய்திகளின் வெளிப்பாடாகத்தான் இருக்கிறது. ஒரு மரத்தை வைத்தே, காலத்தையும், நடக்க இருக்கிற நிகழ்வுகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும். அப்படித்தான் இன்றைய நற்செய்தியிலும், அத்திமரத்தை வைத்து, இயேசு நமக்கு ஒரு செய்தியைத் தருகிறார். இயற்கையோடு இணைந்த வாழ்வு தான் இயேசுவின் வாழ்வு என்றால் அது மிகையல்ல. இயேசு இயற்கையை அதிகமாக நேசித்தார். இயற்கையை வைத்தே பல செய்திகளை, இறையாட்சியைப் பற்றிய கருத்துக்களை மக்களுக்கு வழங்கினார். இன்றைய நவீன உலகில் மனிதன் இயற்கையை விட்டு எங்கோ சென்றுவிட்டான். அதன் பலனையும் அதற்காக அனுபவிக்கத் தொடங்கிவிட்டான். புதுப்புது நோய்கள், மனக்குழப்பங்கள், மன நலன் சம்பந்தப்பட்ட...

கடவுள் மீது நமது நம்பிக்கை

கடவுள் இரக்கமுள்ளவர். இரக்கமும், அன்பும் உருவான கடவுளால் நல்லவர்களையும், தீயவர்களையும் எப்படிப் பிரித்துப்பார்க்க முடியும்? கடவுளின் மன்னிப்பு தீயவர்களைக் கரைசேர்த்து விடாதா? கடவுளால் தண்டனை கொடுக்க முடியுமா? அன்பே உருவான கடவுளிடமிருந்து, தீர்ப்பிடக்கூடிய நாள் எப்படி வர முடியும்? இதுபோன்ற கேள்விகளையும், வாதங்களையும் முன்வைக்கிறவர்கள் பலர். நல்ல எண்ணத்தோடு வாழ்கிறவர்களுக்கு இது சற்று நெருடலாகவும், தீமை செய்கிறவர்களுக்கு தொடர்ந்து அதனைச் செய்வதற்கு பக்கபலமாகவும் இருப்பது இதுபோன்ற வாதங்கள். அப்படியென்றால் கடவுளின் நீதி என்ன? என்று கேட்போர் பலர். இந்த கேள்விகளுக்கு நம்மால் தீர்வு காண முடியாது. ஏனென்றால், மனிதர்களாகிய நமது சிற்றறிவிற்கு இந்த கேள்விகளே அதிகமானதாக இருக்கிறது. தீயவர்கள் தீயவர்களாகவே இருந்துவிட்டு செல்லட்டும். நல்லவர்கள் உறுதியான மனநிலையோடு இருக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் ஆவலாக இருக்கிறது. இந்த உலகத்தில் நடக்கக்கூடிய முரண்பாடுகளைக்க கண்டோ, நல்லவராக இருப்பதால் வரக்கூடிய தடைகளைக் கண்டோ, நாம் கலங்கிவிடக்கூடாது. மாறாக, விசுவாசத்தில் நிலைத்து நிற்க வேண்டும். தளர்ச்சியடையாத...

ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்

தானியேல் 1: 39 – 40, 41 – 42, 43 – 44 படைப்புகள் அனைத்தையும் அழைத்து, இறைவனைப் புகழ்வதற்கு மூன்று இளைஞர்கள் அழைப்புவிடுக்கிறார்கள். இந்த பாடலை அவர்களின் உள்ளப்பெருக்கிலிருந்து வருகிற பாடலாக நாம் பார்க்கலாம். மகிழ்ச்சியின் நிறைவிலிருந்து வருகிற பாடலாக பார்க்கலாம். நாம் பல நாட்களாக காத்திருந்த ஒன்று, நம் கண்முன்னால் நடக்கிறபோது, நாம் அடைகிற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த மகிழ்ச்சியில், நாம் கடவுளைப் போற்றிக்கொண்டே இருப்போம். அதுதான் இந்த பாடலிலும் வெளிப்படுகிறது. சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ என்கிற மூன்று இளைஞர்கள் கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருந்தவர்கள். கடவுளுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருந்தார்கள். தங்களைக் காப்பாற்றினால் தான் கடவுள் இருக்கிறார் என்பது அல்ல. தங்களைக் காப்பாற்றவில்லை என்றாலும், கடவுள் இருக்கிறார், அவர் மீது தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கை உண்மையானது என்பதை வெளிப்படுத்தியிருந்தார்கள். அந்த நம்பிக்கைக்காக தீச்சுவாலையில் தூக்கி எறியப்பட்டபோதும், கவலைப்படாமல் எதிர்கொண்டவர்கள். தாங்கள் யார்...

ஆண்டவரின் அனைத்துச் செயல்களே! நீங்கள் கடவுளை வாழ்த்துங்கள்

தானியேல் 1: 34, 35 – 6, 37 – 38 நெருப்பு மூன்று இளைஞர்களை தீண்டாது இருந்தபோது, கடவுளின் வல்லமையை அனுபவித்த அவர்களின் நன்றிப்பெருக்கு தான், இன்றைய நாளின் பதிலுரைப்பாடலாக நமக்குத் தரப்பட்டுள்ளது. ஆண்டவர் செய்த செயல்கள் ஆண்டவரைப் போற்ற வேண்டும் என்கிற தங்களது விருப்பத்தை, அந்த மூன்று இளைஞர்களும் வெளிப்படுத்துகிறார்கள். இது சற்று வித்தியாசமானதாக இருப்பதை நாம் உணரலாம். படைப்புக்களை கடவுளைப் போற்றச் சொல்லி அழைப்புவிடுப்பதைப் பார்த்திருக்கிறோம், இறைவனின் அருளை உணர்ந்த மனிதர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இறைவனது செயல்களை கடவுளைப் போற்றுவதற்கு விடுக்கப்படும் அழைப்பு புதுமையானது. அடுக்கடுக்கான வார்த்தைகளைப் பேசி மக்களை கவர்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கிற அரசியல்வாதிகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. பேச்சு மட்டும் தான், அவர்களின் மூலதனம். தங்களுடைய பேச்சுக்கு தாங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. வாயில் என்ன வருகிறதோ, அதை அப்படியே பேசிவிடுகிறார்கள். இவர்களை மக்கள் மதிப்பதும் கிடையாது. ஒரு...