Category: Daily Manna

புனித தோமா – திருத்தூதர் விழா

எசாயா 52: 7 – 10 இறைவன் அருளும் மீட்பு இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கோபக்கனலை அனுபவித்திருக்கிறார்கள். ஒரு தலைமுறையாக அனுபவித்து வருகிறார்கள். பாபிலோனில் கைதிகளாக, தங்கள் நாட்டை இழந்து, ஆலயத்தை இழந்து, புனித எருசலேம் நகரை இழந்து, விழா கொண்டாட முடியாமல், துன்பங்களுக்கு மேல் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். செய்த பாவங்களுக்கு கடவுளின் பார்வையில் நிச்சயம் தண்டனை உண்டு என்பதை இப்போது அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பாவங்களுக்கான தண்டனை பெற்றபின் வாழ்வு நிச்சயம் உண்டு என்பதையும் அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால், கடவுளிடம் பேசுவதற்கான தகுதியைக் கூட அவர்கள் இழந்துவிட்டதாகவே எண்ணினார்கள். கடவுளை வான் நோக்கி பார்க்கவும் துணிவு அற்றவர்களாக விளங்கினார்கள். அவர்கள் செய்த பாவங்கள் அப்படிப்பட்டவை. இப்படிப்பட்ட துன்பமயமான நேரத்தில், அவர்கள் எதிர்பார்க்காத வண்ணம், அவர்களுக்கு மீட்புச் செய்தியை இறைவாக்கினர் எசாயா அவர்களுக்கு வழங்குகிறார். சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள், கைதிகளாக அடிமைத்தனத்தை அனுபவித்த மக்கள், புதிய நாளுக்கு தயாராகும்படி, இறைவாக்கினர் அவர்களுக்கு அழைப்புவிடுக்கின்றார். தங்கள்...

கடவுள் எதிர்பார்க்கும் நேர்மை

ஆமோஸ் 9: 11 – 15 “அந்நாட்களில் விழுந்துகிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் உயர்த்துவேன்” என்று, ஆண்டவர் இறைவாக்கினர் ஆமோஸ் வழியாக கூறுகிறார். இங்கு “தாவீதின் கூடாரம்” என்கிற வார்த்தை நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது. வழக்கமாக, “தாவீதின் இல்லம்” என்று சொல்லப்படுவது, கூடாரமாக மாறியது எப்படி? இதனுடைய பொருள் என்ன? ஏனென்றால், கூடாரம் என்பது சாதாரணமானது, எளியது, பார்ப்பதற்கு சிறியது. ஆமோசின் காலத்தில், தாவீதின் அரசு மிகச்சிறியதாக, “இல்லம்” என்று அழைக்கப்படுவதற்கு முடியாத அளவிற்கு மாறியது. அதனால் தான், இங்கு கூடாரம் என்கிற வார்த்தையை இறைவாக்கினர் பயன்படுத்துகிறார். “இதோ நாட்கள் வருகின்றன” என்கிற வார்த்தைகள், அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாக இருக்கின்றன. அவர்களுக்கு விரைவில் அழிவு வரப்போகிறது. ஆனாலும், கடவுள் அவர்களை நிர்கதியாக விட்டு விட மாட்டார். அவர்களுடைய குற்றங்களுக்கு ஏற்ற தண்டனையை அனுபவித்தவுடன், அவர்கள் ஆறுதலைப் பெறுவார்கள். ஆமோஸ் இறைவாக்குரைத்த நேரத்தில், அங்கு வளமை இருந்தது. ஆனால், ஆண்டவர் இல்லை. கடவுளின்...

நீதியுள்ளவர்களாக வாழ்வோம்

ஆமோஸ் 8: 4 – 6, 9 – 12 ஓய்வுநாள் எப்போது நிறைவுறும்? என்று எதிர்பார்க்கிறவர்களை ஆமோஸ் இறைவாக்கினர் கடுமையாகச் சாடுகிறார், “கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடியும்?”. ஓய்வுநாள் என்பது வெறுமனே வழிபாட்டிற்காக மட்டும் வைத்திருக்கவில்லை. மாறாக, அது சமுதாய நீதி சார்ந்து சிந்தித்தன் வாயிலாக ஏற்படுத்தப்பட்டது என்பதுதான் உண்மை. அன்று, வீட்டு உரிமையாளருக்கு மட்டுமல்ல, அந்த வீட்டில் பணி செய்யக்கூடிய பணியாளர்கள், விலங்குகள், அடிமைகள் என அனைவருக்கும் ஓய்வு தரக்கூடிய நாளாக இருந்தது, இணைச்சட்டம் 5: 14 ” ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வுநாள். எனவே, அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும், மாடு, கழுதை, மற்றெல்லாக்கால்நடைகளும், உன் வாயில்களுக்கும் இருக்கும் அன்னியனும், யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். நீ ஓய்வெடுப்பது போல், உன் அடிமையும், அடிமைப்பெண்ணும் ஓய்வெடுக்கட்டும்”. ஆனால், வியாபாரிகள் எப்போது ஓய்வுநாள் முடியும்? என்று...

புனிதர்கள் பேதுரு, பவுல் – திருத்தூதர்கள் பெருவிழா

திருத்தூதர் பணி 12: 1 – 11 அதிகாரவர்க்கத்தின் போலித்தனம் திருத்தூதர்கள் காலத்தில், அரசருக்கு வணக்கம் செலுத்துவது, அரசருடைய உருவங்களுக்கு ஆராதனை செலுத்துவது வெறும் கடமை மட்டுமல்ல, அது அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியது. அவர்கள் அதனைச் செய்ய தவறினால், கடுமையான கொடுமைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் உள்ளாகினர். ஆனால், இயேசுகிறிஸ்துவை நம்பிய கிறிஸ்தவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரையில், இயேசு ஒருவரே ஆண்டவர். அவரைத் தவிர வேறு யாருக்கும், அடிபணிய மறுத்தனர். இது நிச்சயமாக, ஏரோது அரசனுக்கு கோபத்தை வருவித்திருக்கும். இன்றைய வாசகத்தில், ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. “திருச்சபையைச் சார்ந்த மக்கள்” என்கிற வார்த்தைகள், திருத்தூதர்களைக் குறிக்கிற வார்த்தைகளோ, அல்லது, மேல் மட்ட கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர்களையோ குறிக்கலாம். ஏரோதுவின் இந்த செயல், கிறிஸ்தவர்கள் தனக்கு எதிராக கலகம் செய்யலாம் என்று அஞ்சியோ, அல்லது பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் தூண்டுதலினாலோ எழுந்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக,...

GOING HOME IS FOR THE HOMELESS

“The Son of Man has nowhere to lay His head.” –Matthew 8:20 Everyone needs a place to call home. “Life’s prime needs are water, bread, and clothing, a house, too, for decent privacy” (Sir 29:21). We all need a place to rest our heads. Having a home is a basic human need. This fact helps us recognize the radicalness of Jesus’ proclamation to His disciples: “The foxes have lairs, the birds in the sky have nests, but the Son of Man has nowhere to lay His head” (Mt 8:20). Jesus calls His disciples to live not only on the edge...