Category: Daily Manna

எதை கேட்டாலும் செய்வேன்

நம் வாழ்க்கையில் மிகப் பெரிய ஆசீர்வாதம் நாம் கேட்டவை அனைத்ததையும் பெற்றுக்கொண்டோம் என்பதுதான். “நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்” (யோவான் 14:13, 14:14) இரண்டு முறை இயேசு இதைச் சொல்லுகிறார்.அவ்வாரே நம்பிக்கையோடு கேட்ட யாவரும், கேட்ட அனைத்தையும் பெற்றுள்ளனர் என்பதையும் விவிலியத்தின் பல சான்றுகளில் அறிய வருகிறோம். இவ்வாறு கேட்ட அனைத்தையும் நாம் பெற வேண்டுமானால், அந்த ஆளைப்பற்றிய அனுபவம், அறிவு இருக்கவேண்டும். இந்த ஆளிடம் இதைக்கேட்டால் கிடைக்கும் என்ற அனுபவமும் அறிவும் அவசியம் தேவை.இயேசுவைப்பற்றிய அனுபவமும் அறிவும் நாம் கேட்ட அனைத்தையும் நமக்குத் தர வல்லது. இதைத்தான் கடவுள் நம்பிக்கை அல்லது விசுவாசம் என்று சொல்லலாம். இன்று வரையிலும் அந்த அன்பு தெய்வம் நமக்குச் செய்துவருகிற நன்மைகளை நாம் ஆழ்ந்து சிந்தித்தாலே இந்த இறை அனுபவத்தைப் பெற்றுவிடுவோம்.பெரும்பாலும் கடவுள் நமக்குச் செய்து வரும் நன்மைகளை நாம் சிந்திப்பதே இல்லை. ஏதோ நமது திறமையால் பணத்தால் நாம் சாதித்ததாக...

உள்ளம் கலங்க வேண்டாம்

இயேசு தன்னுடைய சீடர்களைப் பக்குவப்படுத்துகிற ஒரு அருமையான செய்தி இன்றைய நற்செய்தியில் நமக்குத் தரப்பட்டுள்ளது. மூன்றாண்டுகள் இயேசுவோடு தங்கியிருந்து, இயேசுவின் புதுமைகளையும், அருங்குறிகளையும் கண்டுமகிழ்ந்து, அப்பங்களை வயிறாற உண்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்றவர்களுக்கு இயேசுவின் செய்தி கலக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட கலக்கமான துன்பமான நேரத்தில், கடவுள் மீது முழுமையான நம்பிக்கையை வைப்பதற்கு இயேசு அழைப்புவிடுக்கிறார். எனவேதான், வேதனையான, வருத்தமான நேரத்தில் உள்ளம் கலங்க வேண்டாம் என்ற ஆறுதல் செய்தியைத்தருகிறார். திருப்பாடல்27: 13ல் பார்க்கிறோம்: “வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்”. எவ்வளவு துயரங்கள், வருத்தங்கள் இருந்தாலும், இன்னும் கடவுள் மீது முழுமையான நம்பிக்கையை வைத்திருக்கிறேன் என்கிற செய்தி இங்கே நமக்குத்தரப்படுகிறது. திருப்பாடல் 141: 8 சொல்கிறது: “ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன: உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்: என் உயிரை அழியவிடாதேயும்”. கடவுள் மீது திருப்பாடல் ஆசிரியர் வைத்திருக்கிற...

தூதுரைக்கின்ற பணி

சீடர்கள் அனைவருமே இயேசுவின் தூதுவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். தூதர் என்பவர் ஓர் அரசவையில் முக்கியமான மனிதராக சித்தரிக்கப்படுகிறார். இன்றைக்கு உள்ள அரசியல் உலகில், ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் தூதுவர்கள் இருக்கிறார்கள். அண்டை நாட்டில் எந்தவொரு பிரச்சனை என்றாலும், அந்த நாட்டில் வாழக்கூடிய தனது குடிமக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும், உடனடியாக தன்னுடைய தூதரகத்தில் தான், தொடர்புடைய நாடு விசாரிக்கும். ஆக, தூதுவர் என்பது முக்கியமான பணி. எல்லோரையும் அந்த பணியில் அமர்த்திவிட முடியாது. அது மரியாதைக்குரிய பணி மட்டுமல்ல, பொறுப்புமிக்க பணியும் கூட. அந்த பணியைச் செய்யக்கூடிவர்களாக சீடர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த தூதர் அரசரின் நம்பிக்கைக்குரியவராக கருதப்படுகிறார். ஏனென்றால், தூதுரைப்பதற்கு அறிவு மட்டும் இருந்தால் போதாது. மாறாக, அடிப்படை வாழ்வியல் நெறிகளான உண்மை, நேர்மை மற்றும் நம்பிக்கை இருக்கிறவர்கள் தான் சிறந்த தூதுவர்களாக செயல்பட முடியும். அந்த வகையில் ஒரு தூதர் அரசரின் விசுவாசி. அரசர் அவரை முழுமையாக நம்புகிறார். நம்பிக்கைக்குரியவர்களைத்தான்...

என்னைக் காண்பவர் …

“என்னைக் காண்பவர் என்னை அனுப்பியவரையே காண்கிறார். என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டுமல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார்” என்னும் ஆண்டவர் இயேசுவின் அமுத மொழிகளை இன்று தியானிப்போம். தந்தை இறைவனை யாருமே கண்டதில்லை. ஆனால், இயேசு அந்த இறைவனின் முகமாக இருக்கின்றார். அவரைக் கண்டவர்கள் இறைவனைக் கண்டதற்கு இணையாகின்றார்கள் என நம்பிக்கையுடன் சொல்கின்றார். அந்த அளவுக்கு இயேசுவின் செயல்களும், எண்ணங்களும் அமைந்திருந்தன. நாம் இப்படிச் சொல்ல முடியுமா? என்னைக் காண்பவர்கள் ஆண்டவர் இயேசுவையே காண்கின்றனர் என்னும் வகையில் என்னால் வாழ முடியுமா, பணியாற்ற முடியுமா? இதுவே இன்றைய நற்செய்தி வாசகம் விடுக்கும் அறைகூவல். அன்னை தெரசாவைக் கண்டவர்கள் ஆண்டவர் இயேசுவை அவரில் கண்டனர். புனிதர்கள், மறைசாட்சிகளைக் காண்பவர்கள் ஆண்டவரின் திருமுகத்தைக் காண்கின்றனர். இதுவே நற்செய்தி அறிவிப்பு, இதுவே சாட்சிய வாழ்வு. நமது வாழ்வும் அவ்வாறு அமைய முயற்சி எடுப்போம். மன்றாடுவோம்: தந்தையின் திருவுளப்படி வாழ்ந்த இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம்....

தந்தை – மகன் ஒற்றுமை

யோவான் 17: 11 ”தூய தந்தையே, நான் ஒன்றாய் இருப்பது போல், அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்” என்று, தன்னுடைய சீடர்களுக்காக மன்றாடுகிறார். கிறிஸ்தவர்களுக்கு இடையேயான ஒற்றுமையை, தந்தை-உறவு ஒற்றுமையோடு ஒப்பிடுகிறார். எவ்வாறு கிறிஸ்துவும் இறைத்தந்தையும் ஒரே மனநிலையோடு இருக்கிறார்களோ, அவர்களைப் பிரிக்க முடியாதோ, அதேபோல கிறிஸ்தவர்களுக்கு இடையேயான மனநிலை இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். கிறிஸ்தவ வாழ்வின் முக்கியமான நோக்கமாக இந்த ஒற்றுமையை இயேசு குறிப்பிடுகிறார். நாம் வாழக்கூடிய வாழ்வில் அனைவருக்குமே ஒரு நோக்கம் இருக்கிறது. நாம் செய்யக்கூடிய செயல்பாடுகளிலும் இந்த நோக்கம் காணப்படுகிறது. அதேபோல, கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு நடுவில் இந்த ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தை உடையவர்களாக வாழ வேண்டும். எவ்வாறு தந்தையும், மகனும் ஒற்றுமையாக இருக்கிறார்களோ, அதே ஒற்றுமை கிறிஸ்தவ வாழ்விலும் வெளிப்பட வேண்டும். அந்த ஒற்றுமைக்கு ஆணிவேராக இருப்பது நாம் வெளிப்படுத்தக்கூடிய அன்பு....