Category: Daily Manna

சாட்சிய வாழ்வு

இயேசு மூன்றுமுறை பேதுருவைப்பார்த்து ‘என்னை அன்பு செய்கிறாயா?’ என்ற கேள்வியைக்கேட்கிறார். அதற்கு காரணம், மூன்றுமுறை மறுதலித்த பேதுருவுக்கு அவரது அன்பை உறுதிப்படுத்த இயேசு வாய்ப்பு தருகிறார் என்பதுதான். கடவுள் எப்போதுமே நமக்கு வாய்ப்பு தருகிறவராக இருக்கிறார். கடவுளுக்கு மனித பலவீனம் தெரியும். அவர் நம்முடைய நிலையை உணராதவர் அல்ல. நம்மில் ஒருவராக வாழ்ந்திருக்கிறார். நம்மோடு உறவாடியிருக்கிறார். நம்முடைய துன்பத்தில் பங்கு கொண்டிருக்கிறார். எனவே, அவர் நிச்சயம் மனிதர்களை அறிந்திருக்கிறார். அந்த வகையில் பேதுருவுக்கு வாய்ப்பு கொடுத்த இறைவன் நமக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பார். வாய்ப்பு என்பது செய்த தவறை திருத்திக்கொண்டு வாழ வழங்கப்படுவது. செய்த தவறுக்காக மனம்வருந்தி, இனி அந்த தவறை செய்யாமல் இருப்பதற்காகக் கொடுக்கப்படும் வெகுமதி. அப்படிப்பட்ட கொடையைப் பெற்றுக்கொண்டது தகுதி என்பதை, பெற்றுக்கொண்ட நபர் வாழ்ந்து காட்ட வேண்டும். பேதுரு உண்மையிலேயே அதை வாழ்ந்து காட்டினார். அவர் தன்னுடைய பலவீனத்தில் இயேசுவை மறுதலித்திருந்தாலும், இயேசுவை கைவிட்டிருந்தாலும் இயேசுவுக்காக இரத்தம்...

பிரிவினைகளை அகற்றுவோம்

இயேசுவின் செபம் என்ன? நாமெல்லாம் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பதுதான். எப்படி ஒன்றாய் இருக்க வேண்டும்? நாமெல்லாம் ஒன்றாய் இருப்பது சாத்தியமா? நமக்குள்ளே பல அடிப்படை வேறுபாடுகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். புரிதலில், வாழ்க்கைமுறையில், பண்பாட்டில், வழிபாட்டு முறையில் என பல வேறுபாடுகள் நம் மத்தியில் இருக்கிறது. இத்தகைய வேறுபாடுகள் நமக்குள்ளாக பல பிரிவினைகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பிரிவினைகளாக இருப்பவை எப்படி நம்மை ஒன்றுபடுத்த முடியும்? இயேசு நம்மை அன்பால் ஒன்றுபட செபிக்கிறார். நமக்குள் இருக்கக்கூடிய வேறுபாடுகளை அவர் அறியாதவர் அல்ல. அந்த வேறுபாடுகள் ஒருவர் மற்றவர் மீதுள்ள அன்பை, மதிப்பைக் கூட்ட வேண்டுமே தவிர, குறைக்கக்கூடாது. கடவுளை நாம் அன்பு செய்தால், கடவுள் மீது நாம் நம்பிக்கை வைத்தால், கடவுளை நமது தந்தையாக ஏற்றுக்கொண்டால், ஒருபோதும் நமக்குள்ளாக இருக்கக்கூடிய பிரிவினைகள் பெரிதாகத் தோன்றாது. கடவுள் மீது நமக்கு நம்பிக்கை இல்லை என்பதுதான், நமக்குள்ளாக இருக்கக்கூடிய பிரிவினைகளைப் பெரிதாகக்காட்டுகிறது. இந்த பிரிவினைகளுக்குள்ளாக...

வாழ்க்கைப் போராட்டம்

வாழ்க்கை என்பது ஒரு போராட்டம். இந்த போராட்டத்தில் நம்மை நிலைநிறுத்தி வெற்றிகாண்பதில் வாழ்வின் வெற்றி அடங்கியிருக்கிறது. எதற்காக வாழ்க்கை என்பது ஒரு போராட்டம்? நாம் நினைப்பது ஒன்றாக இருக்கிறது. ஆனால், நாம் செய்வது மற்றொன்றாக இருக்கிறது. ஏன்? இந்த உலகத்தில் நடக்கிற நிகழ்வுகள். நாம் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்காக எதிர்ப்புக்களைச் சந்திக்கிறோம். ஆனால், இறுதியில் நாம் தனித்து விடப்படுகிறோம். இந்த உலகத்தின் பார்வையில் பிழைக்கத் தெரியாதவனாக தோன்றுகிறோம். அப்போது நமக்குள்ளாக பல கேள்விகள் தோன்றுகிறது. நாம் செல்லக்கூடிய பாதை சரி தானா? மற்றவர்கள் சொல்வது போல நாம் பிழைக்கத் தெரியாதவர்களா? இது ஒரு போராட்டம். இந்த போராட்டத்தில் நாம் எடுக்கும் முடிவு முக்கியமானது. இந்த உலகம் தனக்கென்று ஒரு சில மதிப்பீடுகளை வழிவகுத்து இருக்கிறது. ஆனால், இந்த உலகத்தில் வாழ்கிறவர்கள், அந்த மதிப்பீடுகளை புறந்தள்ளும்விதமாக, தங்களுக்கென்று, தங்களுக்காக ஒருசிலவற்றை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். மற்றவர்களையும் அப்படி வாழ்வதற்கு தூண்டுகிறார்கள்....

சிலுவையும் மகிமையும்

சிலுவை எப்படி ஒருவருக்கு மகிமையை தர முடியும்? துன்பம் எப்படி ஒருவருக்கு மாட்சிமையாக இருக்க முடியும்? தோல்வி எப்படி ஒருவருக்கு மணிமகுடமாக மாற முடியும்? இந்த கேள்விகள் அனைத்துமே இயேசுவின் வாழ்வை நாம் பார்க்கிறபோது, படிக்கிறபோது ஏற்படக்கூடியவை. ஆனால் அப்படித்தான் நடந்திருக்கிறது. சிலுவை மகிமையாக இருந்திருக்கிறது. துன்பம் மாட்சியைத் தந்திருக்கிறது. தோல்வி மணிமகுடமாக மாறியிருக்கிறது. இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில் தான். அதுதான் கீழ்ப்படிதல். கீழ்ப்படிதல் வாயிலாக நாம் சிலுவையை மகிமையாக மாற்ற முடியும். துன்பத்தை மாட்சிமையாக கொடுக்க முடியும். தோல்வியை மணிமகுடமாக மாற்ற முடியும். அதுதான் இயேசுவின் வாழ்வு நமக்கு கற்றுத்தரும் பாடமாக அமைகிறது. கடவுளை மாட்சிமைப்படுத்துவதை நமது கீழ்ப்படிதல் வாயிலாக செய்ய முடியும்.கடவுள் மனிதர்களைப் படைத்தது தன்னை மாட்சிமைப்படுத்துவதற்காக. ஆனால், கீழ்ப்படியாமையால் மனிதன் தவறு செய்கிறான். கடவுளை புறந்தள்ளுகிறான். பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு புகழ் சேர்க்கிறார்கள். எப்போது? தங்கள் பெற்றோருடைய வார்த்தைகளுக்கு பணிந்து நடக்கிறபோது. இயேசு சிலுவையை தோல்வி...

நீங்கள் என் சாட்சிகள்

”இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்” என்று சீடர்கள் இயேசுவிடத்தில் சொல்கிறார்கள். இதுவரை இயேசுவை நம்பாதவர்கள் எப்படி திடீரென ”நம்புகிறோம்” என்று பதில் சொல்கிறார்கள் என்பது நமக்கு சற்று வியப்பாக இருக்கிறது. எதனால் சீடர்கள் இயேசுவை நம்பினர்? என்ற கேள்வியும் நமக்குள்ளாக எழுகிறது. யோவான் நற்செய்தி 16: 16 மற்றும் 17வது இறைவார்த்தைகளில் சீடர்கள் குழம்பிப்போயிருப்பதை நாம் வாசிக்கிறோம். ”அவர் பேசுவது நமக்குப்புரியவில்லையே” என்றும் தங்களிடையே பேசிக்கொள்கின்றனர். ஆனால், 19 வது இறைவார்த்தையில், இயேசு ”இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். மீண்டும் சிறிதுகாலத்தில் என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைப்பற்றி உங்களிடையே சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்று, அவர்கள் உள்ளத்தில் எண்ணியதை வெளிப்படையாக இயேசு சொன்னபோது, அவருடைய உள்ளத்தையும் ஊடுருவி அறியும் சிந்தனையைப்பார்த்தவுடன், இயேசுவிடத்தில் அவர்களின் நம்பிக்கை உறுதியாகிவிட்டது. இயேசுவிடத்தில் நாம் நம்பிக்கை கொள்வதற்கு பல விசுவாசத்தின் சாட்சியங்கள் நம்மிடையே இருக்கிறது. ஆண்டவரின் வார்த்தை, சாட்சிய வாழ்வு வாழும் கிறிஸ்தவர்கள்,...