Category: Daily Manna

பலிப்பொருளாக மாற…….

யூதச்சட்டப்படி எந்தவொரு பொருளும் கடவுளுக்கு காணிக்கையிடப்படுவதற்கு முன்னால் உப்பிடப்பட வேண்டும். லேவியர் 2: 13 சொல்கிறது: “நேர்ச்சையான எந்த உணவுப்படையலும் உப்பிடப்பட வேண்டும். உன் உணவுப்படையலில் கடவுளின் உடன்படிக்கையாகிய உப்பைக்குறையவிடாமல் உன் நேர்ச்சைகள் அனைத்தோடும் உப்பையும் படைப்பாயாக.” இந்த பலி செலுத்தப்படுகிற உப்பு, உடன்படிக்கையின் அடையாளமாகும். ஏனெனில் எண்ணிக்கை 18: 19 ல், ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு செய்துகொண்ட உப்பு உடன்படிக்கையைப்பார்க்கிறோம்: “இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் புனிதப்படையல்கள் அனைத்தையும் நான் உனக்கும் உன்னோடிருக்கும் உன் புதல்வர் புதல்வியருக்கும் என்றுமுள நியமமாகத் தருகிறேன்: இது உனக்கும் உன்னோடிருக்கும் உன்வழி மரபுக்கும் ஆண்டவர் திருமுன் என்றுமுள ‘உப்பு உடன்படிக்கை’ ஆகும். ஆக, படையல்களில் உப்பு சேர்ப்பது ஆண்டவர்க்கு உகந்த பலியாய் இருக்கிறது. இன்றைய நற்செய்தியிலே இயேசு கூறுகிறார்: “பலிப்பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவதுபோல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர்” (மாற்கு 9: 49). இங்கே நெருப்பு என்ற வார்த்தைக்கு தூய ஆவியை நாம் ஒப்பிட்டுப்பேசலாம்....

இயேசு – அனைவருக்கும் சொந்தம்

இயேசு வாழ்ந்த காலத்தில் மக்கள் தீய ஆவிகள் இருக்கிறது என்று நம்பினர். தீய ஆவிகளை ஓட்டுவதற்கு ஏராளமான மந்திரவாதிகளும் இருந்தனர். அவர்களின் நம்பிக்கைப்படி, ஒருவனிடம் தீய ஆவி இருந்து, அந்தத்தீய ஆவியை ஓட்ட, அந்தத்தீய ஆவியைவிட வலிமையான ஆவியின் பெயரால் கட்டளையிட்டால், அந்த தீய ஆவி பணிந்து ஓடிவிடும். அந்தப்பெயரைக் கண்டுபிடித்துவிட்டால் பேயை எளிதாக ஓட்டிவிடலாம். இப்படித்தான் பொதுவாக தீய ஆவிகளை மக்கள் மத்தியில் வாழ்ந்த மந்திரவாதிகளும், போதகர்களும் செய்துவந்தனர். இங்கே நற்செய்தியில் காணப்படுவதும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிதான். யோவான் இயேசுவிடம் தங்களைச்சாராத ஒருவர் இயேசுவின் பெயரைப்பயன்படுத்தி தீய ஆவிகளை ஓட்டுவதாக குற்றம் சாட்டுகிறார். ஆனால், இயேசுவோ ‘நமக்கு எதிராக இராதவர், நம்மோடு இருக்கிறார்’ என்று அவருக்கு பதில்சொல்கிறார். அதாவது, நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தங்களின் செயல்பாடுகளை அமைத்துக்கொள்கிறவர்களுக்கு கடவுள் நிச்சயம் உதவுவார் என்பதுதான் இயேசு இங்கே கற்றுத்தருகிற பாடம். குறிப்பிட்ட நபர்தான் நன்மை செய்ய வேண்டும் என்றில்லை....

தேவையில் இருக்கிறவர்கள்

”சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர், என்னையே ஏற்றுக்கொள்கிறார்” என்று இயேசு சொல்கிறார். இதனுடைய பொருள் என்ன? இயேசு சிறுபிள்ளைகளை உவமையாக எதற்கு ஒப்பிடுகிறார்? எந்த பெற்றோரும், தனது பிள்ளைகளை சுமையாக நிச்சயம் கருதமாட்டார். அவர்களை ஏற்றுக்கொள்வது யாருக்கும் கடினமானது அல்ல. எனவே, குழந்தைகளை ஏற்றுக்கொள்வதைப்பற்றி இயேசு இங்கே பேசவில்லை. குழந்தைகளை உவமையாகப் பயன்படுத்துகிறார். அப்படியென்றால், குழந்தைகளை, இயேசு யாருக்கு ஒப்பிடுகிறார்? இங்கே குழந்தைகள் என்று வருகிற வார்த்தையை, நாம் புரிந்து கொள்ளும் சிந்தனை, சிறுகுழந்தைகள் யாருக்கும் எதுவும் கொடுக்க முடியாது. அவர்கள் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து இருப்பார்கள். குழந்தைகளின் பெற்றோர், அவர்களுக்கு தேவையானவற்றை பார்த்து, பார்த்து செய்கிறார்கள். குழந்தைகள் மற்றவர்களின் உதவியில் தான், வாழ்கிறார்கள். அந்த குழந்தைகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அவர்களை அன்பு செய்கிறோம். அது போலவே, தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத, ஏழை, எளியவர்களை, வறியவர்களை இயேசு குழந்தைகளுக்கு ஒப்பிடுகிறார்கள். அவர்களை நாம் ஏற்றுக்கொள்ள பணிக்கிறார். தேவையில் இருப்பவர்களை...

விசுவாசத்தளர்ச்சியை அகற்றுவோம்

தீய ஆவி பிடித்திருந்த பையனுடைய தந்தை இயேசுவைத்தேடி நம்பிக்கையோடு வந்திருந்தார். ஆனால், இயேசு தன்னுடைய மூன்று சீடர்களோடு உயர்ந்த மலைக்குச்சென்றுவிட்டார். எனவே, அந்த தந்தை சீடர்களின் உதவியை நாடுகிறார். ஆனால், சீடர்களால் அந்த பையனுக்கு குணம் தரமுடியவில்லை. நம்பிக்கையோடு வந்திருந்த அந்த தந்தை நம்பிக்கை இழந்த நிலையில் இருக்கிறார். அந்த நம்பிக்கையின்மைதான் இயேசு அங்கே வந்தபொழுது, அவரின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. எனவேதான், “உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவுகொண்டு எங்களுக்கு உதவி செய்யும்” என்று சொல்கிறார். இயேசுவால் நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கையோடு வந்தவர், நம்பிக்கையிழந்து வாடுகிறார். இயேசுவின் வார்த்தைகள் அவருக்கு மீண்டும் நம்பிக்கையை தருகின்றன. ‘என்னுடைய ஆற்றலால் அல்ல, மாறாக உம்முடைய நம்பிக்கையினால்தான் எல்லாம் நிகழும்’ என்று நம்பிக்கையின் ஆழத்தை, அதன் மகத்துவத்தை அந்த தந்தைக்கு உணர்த்துகிறார் இயேசு. அவரின் நம்பிக்கை மீண்டும் வலுப்பெறுகிறது. தன்னுடைய தவறை உணர்ந்து, நம்பிக்கையின்மையை நீக்க மீண்டும் இயேசுவின் உதவியை நாடுகிறார். இயேசு...

”நான் தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்”

“நீங்கள் என்னைத்தேர்ந்து கொள்ளவில்லை. நான் தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்”. இயேசு தான் நம்மைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்கிறார். தனது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். எதற்காக தனது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்? அவர்களுடைய பணி என்ன? அவரது சிந்தனைகளை, அவரது கோட்பாடுகளை, அவரது போதனைகளை எடுத்துரைப்பதற்காக நம்மைத் தேர்ந்தெடுத்தார். எனவே, நாம் பேசக்கூடிய வார்த்தைகள் மட்டில் கவனத்தோடு இருக்க வேண்டும். நமக்கென்று தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், நாம் இயேசுவின் பிரதிநிதிகளாக இருப்பதால், நமது கருத்துக்களை நாம் சொல்ல முடியாது. ஏனென்றால், நம்மை யாரும் தனிப்பட்ட நபர்களாக பார்ப்பது கிடையாது. நாம் பேசுவதை நமது சிந்தனையாக யாரும் பார்ப்பது கிடையாது. மாறாக, இயேசுவின் மாதிரியாகப்பார்க்கிறார்கள். உதாரணமாக, ஒரு அருட்பணியாளர் ஆலயத்தின் பீடத்தில் நின்று பேசுகிறபோது, அவரை யாரும் வெறும் அருட்பணியாளராகப்பார்ப்பதில்லை. இயேசுவின் பிரதிநிதியாக, இயேசுவே பேசுவதாகப்பார்க்கிறார்கள். அதனால்தான், இயேசுவை நமது வாழ்வில் நாம் பிரதிபலிக்க வேண்டும். இந்த சமுதாயத்தில் கிறிஸ்தவர்களைப்பற்றிய ஒரு பார்வை மற்ற மதத்தினர் மத்தியில்...