Category: Daily Manna

இறைவனின் வழிகாட்டுதல்

மனித வாழ்க்கையில் பயம் என்பது வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்றாக இருக்கிறது. தவறான ஒரு செயலில் ஈடுபடுகிறோம் என்றால், நம்மை அறியாமல் நமக்குள்ளாக ஒருவிதமான பயம் வரும். சரியான ஒன்றை, எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாம் துணிந்து செய்கிறபோதும், நமக்குள்ளாக பயம் வரும். ஆனால், இந்த இரண்டு பயத்திற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. தவறான செயலுக்காக நாம் பயப்படுகிறபோது, நம்முடைய ஆன்மாவிற்கு அது மிகப்பெரிய இடறலாக மாறுகிறது. சரியான செயலை எதிர்ப்புகளுக்கு மத்தியில் செய்கிறபோது, நமக்குள்ளாக நமது ஆன்மா நம்மை அந்த பயத்திலும் ஈடுபட வைக்கக்கூடிய மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது. இன்றைய நற்செய்தியில்(மாற்கு 10: 32-45) சீடர்களுக்குள்ளாக ஒருவிதமான பயம், கலக்கம். இதுவரை வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் இயேசுவுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. அதிகாரவர்க்கத்தினர் இயேசுவை எதிரியாக நினைத்திருந்தாலும், மக்கள் அவரை மெசியாவாக பார்க்கத் தொடங்கியிருந்தார்கள். எனவே, அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம், சிறப்பான வரவேற்பு அவர்களுக்கு இருந்தது....

உறவில் மகிழ்வோம்

தொடக்க கால கிறிஸ்தவ வரலாற்றில் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு பலவிதமான துன்பங்களும் நெருக்கடிகளும் நேர்ந்தது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் உறவுகளை கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதன் பொருட்டு இழக்க நேர்ந்தது. இதை முன்னிலைப்படுத்தி தான் பேதுரு ஆண்டவரிடம் இப்படியொரு வினாவை எழுப்புகிறார். இயேசுவுக்காக அனைத்தையும் விட்டுவிட்டு பின்பற்றிய எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்பதுதான் பேதுரு இயேசுவிடம் மறைமுகமாக எழுப்புகிற கேள்வி. இயேசு அவருக்குத் தருகிற பதில்: இம்மையி;ல் நூறு மடங்கும், மறுஉலகில் நிலைவாழ்வும் என்பது. அதாவது, தொடக்க கால கிறிஸ்தவர்கள் இயேசுவுக்காக தங்கள் குடும்ப உறவுகளை இழந்தாலும் கூட, திருச்சபை என்கிற மிகப்பெரிய குடும்பத்தின் அங்கத்தினராக, கடவுளை தந்தையென்று ஏற்றுக்கொண்டு ஒருவர் மற்றவருக்கு சகோதர, சகோதரிகளாக மாறும் மிகப்பெரிய, மிகவும் உன்னதமான உறவைப்பெற்றனர். இதுதான் இந்த உலகில் நூறுமடங்கு வீடுகளையும், சகோதரர்களையும், நிலபுலன்களையும் பெற்றுக்கொள்வீர்கள் என்று இயேசு சொல்வதன் பொருள். திருத்தூதர் பணி 2: 44 – 46 ல் பார்க்கிறோம்: “நம்பிக்கை கொண்டோர் அனைவரும்...

இயேசுவின் பிறர்நலம்

தற்பெருமை நிறைந்த உலகம் இது. இங்கே வாழக்கூடிய தலைவர்கள் தங்களை பெருமைப்படுத்திக்கொள்வதில் அதிக நாட்டம் கொள்கின்றனர். தங்களோடு சில முகஸ்துதிகளை வைத்துக்கொண்டு, அவர்களின் புகழ்ச்சி மழையில் இன்பம் காண்கின்றனர். தாங்கள் செய்வதையும் புகழ்ச்சிக்காகவே செய்கின்றனர். இந்த உலகத்தில் உதவி செய்கிற மனிதர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். 1. தற்பெருமைக்காகச் செய்பவர்கள் 2. தன்னை வளா்த்துக் கொள்வதற்காகச் செய்கிறவர்கள் 3. தன்னலமில்லாமல் செய்கிறவர்கள். தற்பெருமைக்காகச் செய்கிறவர்கள், தங்களது பெயர், புகழ் மற்றவர்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு செய்கிறவர்களாக இருக்கிறார்கள். எதைச்செய்தாலும் தாங்கள் பெருமைப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணமாக இருக்கிறது. தன்னை வளர்த்துக்கொள்வதற்காகச் செய்கிறவர்கள் எதிர்பார்த்து செய்கிறவர்கள். இன்றைக்கு நான் இதைச்செய்கிறேன் என்றால், நாளை இது எனக்கு கிடைக்கும், என்கிற எதிர்பார்ப்போடு செய்கிறவர்கள் தான் இவர்கள். மூன்றாவது வகையான மக்கள் எதையும் எதிர்பார்க்காமல், புகழுக்காக அல்லாமல், நன்மையைச் செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்கிறவர்கள். இயேசு இந்த மூன்றாம் வகையைச்...

மூவொரு இறைவன் பெருவிழா

கடவுள் தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று ஆட்களாய் இருக்கின்றார். ஆயினும் ஒரே கடவுள் என்பதே மூவொரு கடவுள் பற்றிய அடிப்படையான இறையியல். இயேசுகிறிஸ்து மனிதனாகப் பிறந்தார். இவரில் மனிதத்தன்மையும் இறைத்தன்மையும் ஒருங்கிணைந்து உள்ளன. இவ்விசுவாசம் வழிபாட்டில் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு திருவழிபாடும் மூவொரு கடவுளின் புகழ்ச்சியோடுதான் தொடங்குகின்றது. திருப்பலியில் நற்கருணை மன்றாட்டின் முடிவில் ”இவர் வழியாக…” என்கிற மூவொரு கடவுளின் புகழ்ச்சி பாடப்படுகின்றது. திருமுழுக்கும் இவ்வாறு கொடுக்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு தொடக்கவுரையிலும் இந்த இறையியல் வெளிப்படுத்தப்படுகிறது. ஒன்பதாம் நூற்றாண்டு வரை, இது வழிபாட்டில் திருவிழாவாக ஏற்படுத்தப்படவில்லை. கி.பி. பதினோராம் நூற்றாண்டில் புனித பெனடிக்ட் சபையைச் சேர்ந்த துறவற மடங்களில் பெந்தகோஸ்தே நாளுக்குப் பிறகு இந்த திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை திருத்தந்தை 22 ம் ஜான், கி.பி 1334 ல் அறிமுகப்படுத்தினார். திருச்சபை வரலாற்றில் நெருக்கடியான வேளையில் பல்வேறு சவால்களை திருச்சபை சந்தித்த அக்காலக்கட்டத்தில் இறைவன் பராமரித்து பாதுகாத்து...

சிறுகுழந்தைகளை வரவிடுங்கள்

பொதுவாக யூதத்தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளைப் போதகர்களிடம் கொண்டுவந்து ஆசீர் பெற்றுச்செல்வது வழக்கம். குறிப்பாக தங்கள் குழந்தைகளின் முதல் பிறந்தநாளில் இதை அவர்கள் தவறாமல் செய்தார்கள். இந்த ஒரு நோக்கத்தோடு தான், அவர்கள் தங்கள் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். சீடர்களுக்கும் இது நன்றாகத்தெரியும். சீடர்களுக்கு நிச்சயமாக குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வந்து ஆசீர்பெற்றச்செல்வது மகிழ்ச்சிதான். ஆனால், இங்கே அவர்கள் கோபப்படுவதற்குக்காரணம் ‘சூழ்நிலை’. இயேசு ஏற்கெனவே இரண்டு முறை தான் பாடுகள் பட்டு இறக்கப்போவதை சீடர்களுக்கு அறிவித்துவிட்டார். சீடர்களுக்கு அது என்னவென்று முழுமையாகப்புரியவில்லை என்றாலும், இயேசுவின் முகத்தில் படிந்திருந்த கலக்க ரேகைகளை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். எனவே, இயேசுவோடு இருந்து அவரைப்பாதுகாப்பதும், தேவையில்லாத தொந்தரவுகளிலிருந்து அவரைக்காப்பாற்றி அவருக்கு ஓய்வுகொடுக்க நினைப்பதும் சீடர்களுடைய எண்ணமாக இருந்தது. எனவேதான், அவர்கள் பெற்றோரை அதட்டினர். இயேசுவோ, சிறு குழந்தைகளை தன்னிடம் வரவிட அவர்களைப்பணிக்கிறார். தனக்கு எவ்வளவுதான் துன்பங்கள் இருந்தாலும், கலக்கம் இருந்தாலும், அதிலே மூழ்கிப்போய் தவிக்காமல், தன்னுடைய கடமையை...