Category: Daily Manna

இயேசுவின் வழியில் நமது வாழ்வு

இன்றைய நற்செய்திப் பகுதி இயேசுவின் வாழ்வைப்பற்றிய மூன்று முக்கிய செய்திகளைத் தருகிறது. முதல் செய்தி: இயேசு தன்னை கடவுளின் ஊழியனாக அல்ல, மாறாக, தன்னை கடவுளின் மகனாகவே வெளிப்படுத்தினார். ஊழியர்கள், இறைவாக்கினர்களைக் குறிக்கிறது. மகன் இயேசுவைக்குறிக்கிறது. இயேசு இறைவாக்கினராக அல்ல, இறைமகனாக நேரடியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை இங்கே நாம் பார்க்க முடிகிறது. இது யூதர்களுக்கு இயேசுவால் விடப்பட்ட நேரடியான சவால். இயேசுதான் கடவுளின் மகன் என்பதை, ஆணித்தரமாக வெளிப்படுத்திய பகுதி இது. இரண்டாவது செய்தி: இயேசுவுக்கு தான் இறக்கப்போகிறேன் என்பது தெரிந்திருந்தது. அது இயேசுவுக்கு அதிர்ச்சிகரமான செய்தியோ, ஆச்சரியமான செய்தியோ அல்ல. தான் தேர்ந்தெடுத்திருக்கிற பாதையின் முடிவு, இறப்பாகத்தான் இருக்க முடியும் என்பதை இயேசு அறிந்திருக்கிறார். அப்படி அறிந்திருந்தாலும், துணிந்து தனது வாழ்வை நகர்த்துவது அவரது மனவலிமையைக் குறிக்கிறது. மூன்றாவது செய்தி: தான் இறக்கப்போவது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு தான் மகிமைப்படுத்துவதும் உறுதி, என்று இயேசு முழுமையாக...

இயேசுவின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழா

உடலும், இரத்தமும்… இன்று ஆண்டவர் இயேசு தம் திருவுடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தரும் அவரது பேரன்பைப் பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம். உடல் என்பது ஒருவரது ஆளுமையின் மிக வெளிப்படையான கூறு. மனம், ஆன்மா, உணர்வுகள் என்பவை வெளியில் தெளிவாகக் காணக்கிடைக்காத ஆளுமையின் தளங்கள். ஆனால், உடல் மட்டுமே அனைவருக்கும் அறிமுகமான, வெளிப்படையான தளம். அது மட்டுமல்ல, உடல்தான் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யத் தகுந்த மிகச் சிறந்த தளமும்கூட. அதனால்தான், ஆண்டவர் இயேசு தம் உடலை இறைவனுக்காகவும், நமக்காகவும் கையளித்தார். “கிறிஸ்’து உலகிற்கு வந்தபோது, ‘பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை. ஆனால், ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எனவே, நான் கூறியது: உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ நான் வருகின்றேன்””“ (எபி 10: 5-7) என எபிரேயர் திருமடலில் வாசிக்கிறோம். “இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறி’ஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்”“ (எபி 10:...

விண்ணக அதிகாரம்!

இயேசுவின் அதிகாரத்தைப் பற்றித் தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும், மூப்பர்களும் கேள்வி எழுப்பியபோது, இயேசு யோவானின் அதிகாரத்தைப் பற்றி எதிர்க் கேள்வி ஒன்றைக் கேட்கின்றார். “திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு எங்கிருந்து வந்தது? விண்ணிலிருந்தா, அல்லது மனிதரிடமிருந்தா?”. அவர்கள் இக்கேள்விக்கு விடை அளிக்கவில்லை, விடையளிக்க விரும்பவில்லை. எனவே, இயேசுவும் அவர்களின் கேள்விக்கு விடை கொடுக்கவில்லை. ஆனால், விண்ணக அதிகாரத்தைப் பற்றிய இரு கருத்துகளை இந்த நிகழ்விலிருந்து அறிகிறோம். 1. விண்ணிலிருந்து வரும் அதிகாரத்தை நாம் நம்பவேண்டும். யோவானின் அதிகாரத்தை, இயேசுவின் அதிகாரத்தை மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், அவர்களின் நம்பிக்கைக் குறைவு. இறை நம்பிக்கை உள்ளோரே இறையடியார்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்கின்றனர். இன்னொரு வகையில் சொல்லப் போனால், குருக்கள், துறவிகள், நற்செய்திப் பணியாளர்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வது இறைநம்பிக்கையின் ஓர் அடையாளம். 2. விண்ணக அதிகாரம் கொண்டவர்களை மக்கள் “இறைவாக்கினர்களாக”க் கருதுகின்றனர். யோவானை மக்கள் இறைவாக்கினராகக் கருதியதால், அவரது அதிகாரம் மனிதரிடமிருந்து வந்தது...

ஆன்மாவின் பலம்

சோர்வு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று. அந்த சோர்வு உடல் அளவிலான சோர்வாக இருக்கலாம். உள்ளத்து அளவிலான சோர்வாக இருக்கலாம். அல்லது ஆன்மா சார்ந்த சோர்வாக இருக்கலாம். உடல் சார்ந்த சோர்வுக்கு, நல்ல உணவு உண்டால் அது சரியான தீர்வாக இருக்கும். நடக்கக்கூடிய நிகழ்வுகள் எதிர்பாராததாக இருக்கிறபோது, உள்ளம் சோர்வடைகிறது. இதையும் நாம் உடனே சரிசெய்து கொள்ளலாம். ஆனால், ஆன்மா சோர்ந்து விட்டால் நமது வாழ்க்கை அவ்வளவுதான். வாழ்வில் எத்தனை கவலை வந்தாலும், ஆன்மா தான் நமக்குள்ளிருந்து ஊக்கம் கொடுத்து இயக்கிக்கொண்டிருக்கும். அந்த ஆன்மாவை நாம் சோர்வடையச்செய்ய விடக்கூடாது. அதற்கு கடவுளோடு நாம் கொண்டிருக்கிற உறவு, நமது செப வாழ்வு உறுதுணையாக இருக்கும். இயேசு தனது பயணத்தில் தெளிவாக இருக்கிறார். யெருசலேம் நோக்கிய தனது பயணம் எப்படி அமையும் என்பதில் அவருக்கு சிறிதும் சந்தேகமில்லை. அதைத்தாங்குவதற்கு ஆன்மா வலிமையாக இருக்க வேண்டும் என்பதில் இயேசு உறுதியாக இருக்கிறார். எனவே தான், இயேசு...

வாழ்வின் அணுகுமுறை

நமக்குப்பிடித்தமான திரைப்படத்தை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். திடீரென்று யாராவது, கத்தினாலோ, பேசிக்கொண்டிருந்தாலோ, நமக்கு எரிச்சல் வருவது நிச்சயம். யாரென்றாலும், உடனடியாக நமது கோபத்தை வெளிப்படுத்திவிடுவோம். இயேசு மிகப்பெரிய போதகர். அவரைப்பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவரது போதனையைக் கேட்ட கிடைத்த, பொன்னான வாய்ப்பை, யாரும் நிச்சயம் நழுவ விடமாட்டார்கள். கேட்போரை, மீண்டும், மீண்டும் கேட்கத்தூண்டுகிற போதனை அது. அந்த சமயத்தில், யாராவது இடைஞ்சலாகப் பேசினால், நிச்சயம் யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும். அந்த கோபம் தான், பார்வையற்ற பா்த்திமேயுவைத் தாக்குகிறது. பர்த்திமேயு பார்வையற்ற குருடன். பிச்சைக்காரன். பார்வையற்றவர்கள் மற்றவர் உதவியோடு தான் வாழ வேண்டியுள்ளது. அதிலும், பார்வையை இழப்பது, மிகப்பெரிய கொடுமை. நன்றாக வாழ்ந்த பர்த்திமேயு, பார்வையோடு வாழ்ந்த பர்த்திமேயு, இப்போது பார்வையிழந்தவனாக, பிச்சை எடுத்து வாழக்கூடிய கோரநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டான். வாழ்வு நமக்கு எந்த நேரமும் ஒரேபோல இருப்பதில்லை. ஒரே இரவில் பணக்காரனாக மாறியவர்களும் உண்டு. ஒரே இரவில் அனைத்தையும் இழந்து...