Category: Daily Manna

ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றோர்

கடவுள் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். ”ஆற்றலாலும் அல்ல, சக்தியாலும் அல்ல, ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே” என்கிற இறைவார்த்தையின் பொருள் இங்கே வெளிப்படுகிறது. இந்த உலகத்தில் வாழும் எல்லாருமே தொடக்கத்தில் கடவுளைப் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில், அவர்கள் அடையாளம் பெற்ற பிறகு, அந்த அடையாளத்தைக் கொடுத்தவரை மறந்துவிடுகிறார்கள். தங்களது சக்தியினால் தான் எல்லாம் முடிந்தது, என்று கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கையை தங்களின் ஆற்றலின் மீது வைத்துவிடுகிறார். அது தான் அழிவிற்கான ஆரம்பம் என்பதை மறந்துவிடுகிறார்கள். இந்த திருப்பாடலைப் (திருப்பாடல் 1: 1 – 2, 3, 4 & 6) பொறுத்தவரையில் தன்னுடைய தனிப்பட்ட அனுபவத்தையும், இஸ்ரயேல் மக்களின் அனுபவத்தையும் ஒன்றிணைத்து ஆசிரியர் இதனை எழுதுகிறார். தாவீது அரசருக்கு அடையாளம் கொடுத்தவர் கடவுள். சாதாரண ஆடு மேய்க்கக்கூடிய சிறுவனாக இருந்த தாவீது, இஸ்ரயேல் மக்கள் போற்றக்கூடிய அரசராக மாற முடிந்தது என்றால், அது...

ஆண்டவரே இரக்கமாயிரும்

கடவுளுடைய இரக்கத்திற்காக திருப்பாடல் ஆசிரியர் இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறார். இந்த திருப்பாடலின் பிண்ணனி அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பத்சேபாவுடனான தன்னுடைய தவறான செயல், இறைவாக்கினர் வழியாக உணர்த்தப்பட்டபோது, தாவீது உள்ளம் நொந்து வேதனையில், தன்னுடைய பாவக்கறைகளை மன்னிப்பதற்காக உருகிய பாடல் தான் இந்த திருப்பாடல். தன்னுடைய பலவீனத்திற்காக, தான் செய்த தவறுக்காக மன்னிப்பு வேண்டுகிறார். உண்மையான, உள்ளார்ந்த மனமாற்றத்தோடு இறைவனை நாடுகிறபோது, நிச்சயம் இறைவன் மனமிரங்குவார் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடிய திருப்பாடல் இந்த திருப்பாடல் (திருப்பாடல் 51: 3 – 4, 5 – 6, 12 – 13, 14 & 17). இன்றைய நாளில் இந்த திருப்பாடலை நாம் சிந்திப்பது மிகவும் பொருத்தமான ஒன்று. ஏனென்றால், இன்று தவக்காலத்தை தொடங்குகிறோம். நமது வாழ்வை மாற்றுவதற்கான முயற்சியாக இந்த தவக்காலத்தைப் பயன்படுத்திக்கொள்ள அன்னையாம் திருச்சபை நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகமும் ஒட்டுமொத்த நமது வாழ்க்கை எப்படி அமைய...

தற்பெருமை இல்லா அழைத்தல் வாழ்வு

இந்த உலக வாழ்வை வாழ்ந்து முடிக்கின்ற தருவாயில் பெரும்பாலான மனிதர்கள் கேட்கக்கூடிய கேள்வி “எனது வாழ்வின் பொருள் என்ன?” என்பதுதான். இந்த கேள்வி நிச்சயம் அழைக்கப்பட்டவர்களின் வாழ்விலும் எதிரொலிக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. கடவுளுக்காக, இந்த உலக இன்பங்களை மறந்து, இந்த உலகம் சார்ந்து வாழாமல், தங்கள் வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்த, இறைவனின் ஊழியர்களுக்கு என்ன தான் கைம்மாறு? என்பது பேதுருவின் கேள்வி. நிச்சயம், இயேசுவைப் பின்தொடர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய ஆசீர்வாதம். அப்படியிருக்கிறபோது, யாரும் நிச்சயம் கைம்மாறு என்று எதிர்பார்ப்பது இல்லை. இயேசுவின் ஊழியர்களாக இருப்பதே, நிறைவான செயல்தான். இருந்தாலும், மனித கண்ணோட்டத்தில் பேதுருவின் கேள்விக்கு இயேசு அருமையான செய்தியைத்தருகிறார். இயேசுவின் ஊழியர்களாக இருக்கிறோம் என்கிற தற்பெருமை, நம்மை தவறான இடத்திற்கு அழைத்துச் சென்றுவிடும், என்பது இயேசு நமக்கு விடுக்கும் எச்சரிக்கையாக இருக்கிறது. பேதுரு இந்த மனநிலையோடு தான் கேட்கிறார். நான் இயேசுவின் சீடன். எனவே, எனக்கென்று இந்த சமூகத்தில் ஒரு...

என் நெறிகேட்டையும், பாவத்தையும் போக்கினீர்

தவறான வாழ்க்கை, செய்யக்கூடாத தவறுகளை கடவுள் போக்கினார் என்று ஆசிரியர் கூறுகிறார். கடவுள் நீதியுள்ளவர் என்று சொல்கிறோமே? நீதியுள்ளவர் என்றால் ஒரு மனிதர் செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டாமா? எப்படி செய்த தவறுகளை போக்க முடியும்? கடவுள் எந்த ஒரு ஆன்மாவும் தவறான வழிக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறவர் கிடையாது. ஒவ்வொரு ஆன்மாவும் மீட்கப்பட வேண்டும் என்று சிரத்தை எடுக்கிறவர். அதனுடைய ஒரு அடையாளம் தான், மற்றவர்களின் குற்றங்களைப் போக்குவது. கடவுளிடம் நமது தீய செயல்களை ஒளிவு மறைவின்றி, உண்மையான மனவருத்தத்தோடு வெளிப்படுத்துகிறபோது, மனமிரங்கி மன்னிக்கக்கூடியவராக இருக்கிறார். தாவீது அரசர் செய்த தவறு அனைவருக்குமே தெரியும். ஒரு அரசராக இருக்கிறவர், தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்யக்கூடாது தவறைச்செய்கிறார். யாரும் அறியவில்லை என்கிற மமதையோடு இருக்கிறார். ஆனால், அவர் செய்த தவறை கடவுள் அறிவார் என்று இறைவாக்கினரால் உணர்த்தப்பட்டபோது, தன்னுடைய தவறு வெளிப்பட்டுவிட்டதே என்று அவர் கோபப்படவில்லை. மாறாக, தன்னுடைய...

இயேசுவின் வாழ்வு

நமது குழந்தைகளுக்கு பிறந்தநாள் வருகிறபோது, அவர்களை ஆலயத்திற்கு கொண்டு சென்று, திருப்பலியில் கலந்துகொண்டு, அருட்பணியாளர்களிடம் சிறப்பாக செபிக்கச் சொல்வோம். அதுபோல, பெரியவர்களிடமும் நாம் அவர்களைக் கொண்டு செல்வோம். இது எல்லா மக்கள் மத்தியிலும் காணப்படக்கூய ஒரு நிகழ்வு. இதைத்தான் யூதப்பாரம்பரியத்தில் வாழ்கின்ற பெண்களும் செய்கிறார்கள். தங்கள் குழந்தைகளை, மக்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு போதகர், ஆசீர்வதிக்க வேண்டுமென கொண்டுவருகிறார்கள். இயேசு தன்னிடம் கொண்டு வரப்பட்ட குழந்தைகளை ஆசீர்வதிப்பதற்கு தயாராக இருக்கிறார். தனக்கு களைப்பு இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், குழந்தைகளைச் சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறார். குழந்தைகள் யூத சமுதாயத்தில் பொருளாக பார்க்கப்பட்டவர்கள். வயதுவருகிறவரை, அவர்கள் பெற்றோரின் அரவணைப்பில் தான் வளர முடியும். பெண் குழந்தை என்றால் மதிப்பே கிடையாது. அப்படிப்பட்ட சமுதாயத்தில் குழந்தைகளையும் இயேசு அரவணைப்பது, மிகப்பெரிய ஒரு நிகழ்வாக இருக்கிறது. கடவுள் தனக்கு கொடுத்த ஆசீரை, மற்றவர்களுக்கு எப்போதெல்லாம் கொடுக்க முடியுமோ, எந்த வழியில் எல்லாம் கொடுக்க முடியுமோ,...