Category: Daily Manna

மீண்டும் பிறப்போம்

யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் போதனைகளைப் போதிக்கும் விதத்தில் தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறார். முதலில் இயேசு முன் ஒரு கேள்வி வைக்கப்படுகிறது. இயேசு அதனைக்கேட்டவர் புரியாத வண்ணம் அதற்கு விளக்கம் கொடுக்கிறார். சில சமயங்களில் கேட்டவர், அதனைத்தவறாகவும் புரிந்து கொள்கிறார். மீண்டும் இயேசு அதற்கு விளக்கம் கொடுத்துப் புரிய வைக்கிறார். இந்தப்பாணி யோவான் நற்செய்தியில் பல பகுதிகளில் காணப்படுகிறது. நிக்கதேமுடனான உரையாடலிலும் இதே பாணியை இயேசு பின்பற்றுகிறார். மறுபிறப்பு என்கிற வார்த்தை நிக்கதேமுக்கு குழப்பத்தையும், தவறாப்புரிந்து கொள்ளவும் தூண்டுகிறது. இதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. ஏனென்றால், கிரேக்கத்தில் “born anew” என்கிற வார்த்தைக்கு மூன்று அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. 1. தொடக்கத்திலிருந்து…2. மீண்டும்….3. மேலிருந்து… மறுபிறப்பு என்று இயேசு பொருள்படுத்துவது, அடிப்படையில் ஏற்படும் மாற்றம். கடவுளின் அருளால் ஏற்படும் மாற்றம். It is a radical change in a person. It is a change in a Person’s Being....

உயிர்த்த இயேசு தரும் சமாதானம்

யூதர்களுக்கு அஞ்சி சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தனர். சீடர்கள் தங்கியிருந்த அறை, இயேசுவோடு கடைசி இரவு உணவு உண்ட அறையாக இருக்கலாம். அவர்கள் இருந்தது மேல் அறை. யூதர்களின் கோபம், வெறுப்பு முதலானவை சீடர்களுக்கு நன்றாகத்தெரியும். இயேசுவை ஒழித்தாயிற்று. இனி எப்படியும், அடுத்த இலக்கு தாங்கள்தான் என்பது அவர்களுக்கு நன்றாகத்தெரியும். எந்தநேரமும் தலைமைச்சங்க காவலர்கள் வந்து தங்களை கைது செய்யலாம் என்று நினைத்தனர். எனவே, மேலறையிலிருந்து அவர்களுக்கு கேட்கும் ஒவ்வொரு சத்தமும், அவர்களின் இருதயத்தை கலங்கடித்துக்கொண்டிருந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் உயிர்த்த இயேசு அவர்களுக்குத் தோன்றுகிறார். உயிர்த்த இயேசு அவர்களுக்கு சொல்லும் செய்தி: உங்களுக்கு அமைதி உண்டாகுக!. கலங்கிப்போயிருந்த சீடர்களின் கலக்கத்தை இயேசு அறியாதவரல்ல. அவர்களின் வேதனையை இயேசு உணராதவர் அல்ல. அவருக்கு சாவின் பயம் நன்றாகத்தெரியும். ஏனென்றால், சாவை எதிர்நோக்கியிருந்த அவரே, கெத்சமெனி தோட்டத்தில், திகிலும் மனக்கலக்கமும் அடைந்திருந்தார். ‘எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது’...

இயேசுவின் பார்வையில் பெண்கள்

இயேசு முதன் முதலாக ஒரு பெண்ணிற்கு உயிர்த்த பிறகு தோன்றுகிறார். யூத சமுதாயம் ஓர் ஆணாதிக்கம் கொண்ட சமுதாயம் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். பெண்களை ஒரு பொருட்டாக மதிக்காத சமுதாயம். இயேசுவும் இந்த சமுதாயத்தில் பிறந்தவர் தான். ஆனாலும், பெண்களைப்பற்றிய இயேசுவின் பார்வை வேறுபாடுள்ளதாக இருக்கிறது. தான் வாழ்ந்தபோதே, பெண்களை மிகுந்த மதிப்போடு நடத்தியவர் இயேசுகிறிஸ்து. அவருடைய பார்வையில் ஆண், பெண் வேறுபாடு இல்லை. அனைவரும் கடவுளின் பிள்ளைகள். அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள். எனவேதான், தனது தாயை அதிகமாக அவர் நேசித்தார். இயேசுவின் இந்த பார்வை பெண்களைப்பற்றிய உயர்ந்த பார்வை பார்ப்பதற்கு வழிகாட்டுகிறது. இயேசு வாழ்ந்தபோதும் சரி, இன்றைக்கு நற்செய்தியில் நாம் பார்ப்பது போல இறந்து உயிர்த்த பிறகும் பெண்ணுக்கு முன்னுரிமை கொடுக்கிறார். அன்புக்கு நாம் உதாரணமாக தாயைத்தான் சொல்கிறோம். எந்தச்சூழ்நிலையிலும், தனது பிள்ளையை விட்டுக்கொடுக்காதவர் நிச்சயம் நமது அன்னைதான். பெண்களை நாம் மதிக்கவும், அவர்களை மாண்போடு நடத்தவும் இயேசுவின்...

விசுவாசத்தில் வளர, வளர்த்தெடுக்க…

அறிவியல் வளர்நதிருக்கிற இந்த நவீன யுகத்தில், புதுமைகளை நம்புவது நவீன தலைமுறையால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. அப்படியே ஏதாவது நடந்தாலும், அதையும் எப்படியாவது, அறிவியல் கொண்டு விளக்குவதற்கு இந்த தலைமுறை முயற்சி செய்கிறது. உயிர்ப்பையும் தொடக்க காலத்தில் இப்படி பலகட்டங்களாக விமர்சித்தவர்கள் உண்டு. இயேசு உண்மையிலே உயிர்த்தாரா? உயிர்ப்பை நம்ப முடியுமா? அது சாத்தியமா? என்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்த கேள்விகளுக்கெல்லாம், விளக்கத்தைத் தருவதுதான் இன்றைய நற்செய்திப்பகுதி. இன்றைய நற்செய்திப்பகுதி, இயேசு உண்மையிலே உயிர்த்தார் என்பதை வலியுறுத்திக்கூறுவதாக அமைந்திருக்கிறது. தொடக்க காலத்தில் ஆங்காங்கே உயிர்த்த இயேசுவை சீடர்கள் பார்த்ததாகக் கூறியதைப் பலவற்றுக்கு ஒப்பிட்டனர். சீடர்கள் ஏதாவது கனவு கண்டிருக்கலாம் அல்லது ஒருவிதமான பிரம்மையில் அவர்கள் இரு்ந்திருக்கலாம் அல்லது இயேசுவோடு நெருங்கி இருந்ததால், அவர்கள் பார்ப்பது எல்லாம் இயேசுவைப்போல இருக்கிறது என்று பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. இவையெல்லாம் தவறான விளக்கங்கள், உண்மையில் இயேசு உடலோடு உயிர்த்தார் என்பதற்குத்தான் இன்றைய நிகழ்ச்சி, யோவான்...

உயிர்த்த இயேசுவின் சாட்சியமாய் மாறுவோம்

இயேசுவின் உயிர்ப்பு நிகழ்விற்கு பல சான்றுகள் இருந்தாலும், இயேசுவோடு மூன்றாண்டுகள் வாழ்ந்த சீடர்கள் தான் மிகப்பெரிய சாட்சிகள். இயேசு அவர்களோடு இருந்தபோது வாழ்ந்த வாழ்க்கைக்கும், உயிர்த்த இயேசுவைக்கண்டபிறகு அவர்கள் வாழ்ந்த வாழ்விற்கும் இடையேயான வேறுபாடு மிகப்பெரியது. இயேசுவோடு வாழ்ந்தபோது, தங்களுக்குள் யார் பெரியவர்? என்று சண்டையிட்டுக்கொண்டனர். கடலில் பயணம் செய்தபோது, சீறிஎழுகிற அலைகளைப்பார்த்து, கூச்சல்போட்டு மரணபயத்தில் கத்தினர். தீய ஆவிகளை ஓட்டுவதற்கு இயேசுவால் வல்லமை கொடுக்கப்பட்டிருந்தும், விசுவாசமின்மையினால் அந்த ஆற்றலைப்பயன்படுத்த திறனற்றிருந்தனர். இயேசுவுக்கு ஆபத்து என்று வந்தபோது, அவரைவிட்டுவிட்டு ஓடினர். இயேசு இறந்தபிறகு அறைகளில் தங்கள் உயிரைப்பாதுகாத்துக்கொள்ள பதுங்கியிருந்தனர். இந்த அளவுக்கு பயந்த, கோழைத்தனமான வாழ்வு வாழ்ந்த சீடர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் வந்தது என்றால், அதற்கு காரணம் இயேசுவின் உயிர்ப்புதான் என்பதை ஆணித்தரமாக நம்மால் கூறமுடியும். இன்றைய நற்செய்தியில் சீடர்களின் வாழ்வு மாற்றம் பெறக்காரணமான உயிர்த்த இயேசுவின் காட்சியை நாம் பார்க்கிறோம். இந்த உயிர்ப்பு அனுபவம் தான் சீடர்களின் வாழ்வில்...