Category: Daily Manna

தந்தையைப் போல மகன் !

இன்றைய நற்செய்தி வாசகத்தில்(+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 16-21) தந்தைக்கும், மகனுக்கும் இடையே நிலவும் உறவை ஆண்டவர் இயேசு தெளிவாக எடுத்துரைக்கின்றார். அந்த உறவின் கூறுகளாகப் பின்வருவனவற்றைக் காண்கிறோம்: 1. “என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார், நானும் செயலாற்றுகிறேன்” என்னும் வாக்கிலிருந்து ஓய்வுநாளிலும் இறைவன் செயல்படுவதைச் சுட்டிக்காட்டி, அவ்வாறே ஓய்வுநாளிலும் தாம் மீட்பின் பணியைச் செய்வதாக இயேசு வாக்குமூலம் தருகிறார். நாமும் நற்பணியாற்றுவதிலும், நேர்மையானவற்றைச் செய்வதிலும், ஓய்வின்றி உழைக்க வேண்டும். 2. “தந்தை செய்பவற்றையே மகனும் செய்கிறார்”. தந்தை இறைவன் தமது பேரன்பை, பேரிரக்கத்தை மீட்புச் செயல்களாக வெளிப்படுத்துகிறார். அவ்வாறே, இயேசுவும் பாவங்களை மன்னிப்பது, நோயிலிருந்து நலமளிப்பது போன்ற செயல்களை அல்லும் பகலும் ஆற்றிவந்தார். நாமும் இத்தகைய பணிகளை, மாந்தரை இறைவனுடனும், மனிதருடனும் ஒப்புரவாக்கும் பணியை எப்போதும் ஆற்றவேண்டும். 3. “தந்தை தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பதுபோல, மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்”. இயேசுவிடம் வந்தவர்கள் சாவிலிருந்து விடுதலைபெற்று,...

பரந்துபட்ட உள்ளம்

இயேசு அப்பங்களைப் பலுகச்செய்கிற புதுமையில் ஒரு சிறுவனின் செயல் பாராட்டுதற்குரியதாக இருக்கிறது. ஒட்டுமொத்த மக்கள்கூட்டத்திற்கும் அவனிடத்தில் இருந்த குறைந்த அப்பங்கள் போதாதுதான். ஆனால், அவன் கொண்டு வந்த உணவுதான், அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது. ஒருவேளை அந்த சிறுவன் அங்கே இல்லாமல் இருந்திருந்தால், வரலாற்றில் ஒரு புதுமை நடைபெறாமல் போயிருக்கலாம். இந்த புதுமை நமக்கு அருமையான செய்தியையும் தருகிறது. நம்மிடம் இருப்பதை கடவுளிடம் நாம் கொண்டு வர வேண்டும். ஒருவேளை அது குறைவானதாக இருக்கலாம். ஆனால், நல்ல மனதோடு நாம் கடவுளிடத்தில் கொண்டு வருகிறபோது, கடவுள் அவற்றை பலுகச்செய்து, ஆசீர்வதிப்பார். இன்றைக்கு புதுமைகள் நடக்காமல் இருப்பதற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம். நம்மிடம் இருப்பதை நாம் மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணங்கள், மக்கள் நடுவில் பெருகிவிட்டது. அந்த சிறுவனும் இதேபோல் நினைத்திருந்தால், அங்கிருக்கிற மக்கள் கூட்டம் தங்களது பசியைப் போக்கியிருக்க முடியாது. அந்த சிறுவனின் பரந்துபட்ட உள்ளம், இருப்பதை கடவுளிடம்...

இயேசுவின் நற்செய்தி தரும் படிப்பினை

யோவான் நற்செய்தியாளரின் முக்கியமான கவலைகளில் ஒன்று, இயேசுவை ஒருசிலரே நம்புகிறார்கள் என்பது. ஒரு சிலரே இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதும், அவரது கவலையாக இருந்தது. ஆனால், இயேசுவை நம்புகிறவர்கள், உடனே அவரது வார்த்தையையும் நம்புகிறவர்களாக இருந்தது அவருக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. முற்காலத்தில் ஒரு ஆவணத்தை ஒருவர் ஏற்றுக்கொள்வதாக இருந்தால், அந்த ஆவணத்தின் கீழே, தான் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக, தனது அச்சைப் பதிப்பார். அந்த அச்சு, ஒருவர் அந்த ஆவணத்தை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக இருந்தது. அந்த அச்சு தான், அந்த ஒப்பந்ததத்திற்கு, குறிப்பிட்ட நபர் கட்டுப்பட்டவர் என்பதை அறிவிப்பதாக இருந்தது. அதேபோல, இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்கள், அவரையும், அவரது வாழ்வையும், தாங்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்வையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் அர்த்தம். இன்றைக்கு நாம் இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்களாக இருந்தால், அவரையும், அவர் நமக்கு காட்டுகிற, அறிவுறுத்துகிற வாழ்வையும் ஏற்றுக்கொள்வதாகத்தான் அர்த்தமாக இருக்கும். அத்தகைய ஒரு வாழ்வை நாம் நேர்மறையான எண்ணத்தோடு வாழ,...

இருளும், உயிர்ப்பின் ஒளியும் !

இயேசு நிக்கதேமுவுடன் நிகழ்த்திய உரையாடல் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் தொடர்கிறது. அதில் இறைமகன் இயேசு உலகின் ஒளியாகச் சுட்டப்படுகிறார், உலகின் பாவ இயல்புகள் ஒளியை எதிர்க்கும் இருளாகக் காட்டப்படுகின்றன. ஒளி-இருள் பற்றி இன்று சிந்திப்போம். 1. இயேசு உலகின் ஒளி: “உலகை மீட்கவே கடவுள் தம் மகனை இந்த உலகிற்கு அனுப்பினார். உலகிற்குத் தண்டனை அளிக்க அல்ல” என்கிறார் இயேசு. இயேசுவே அந்த மீட்பு. மீட்பின் உருவமாகத் தம்மை உலகின் ஒளி என்கிறார் இயேசு. “உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள்” என்கிறார் ஆண்டவர். உயிர்ப்பின் மக்கள் இயேசுவின் பாஸ்கா ஒளியில் வாழ விரும்புகின்றனர். தங்கள் பணிகள் அனைத்தையும் இயேசுவோடு இணைந்தே செய்கின்றனர். 2. உலகின் இருள்: இயேசுவை நம்பாமல், உலகின் தீமைகளைச் செய்துவாழ்பவர்கள் இருளின் மக்கள். இவர்கள் இயேசுவை நாடுவதில்லை. “ஒளி உலகிற்கு வந்திருந்தும், தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர்...

நற்செய்தி அறிவிப்பு

ஒரு நூல் எழுதுவது என்பது இப்போது எளிதான செயலாக இருக்கலாம். ஆனால், சுமார் இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னால், அது கடினமானது மட்டுமல்ல, அது மிகப்பெரிய சவாலான செயல். ஆனாலும், இயேசுபைப்பற்றிய நற்செய்தி அனைவருக்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காக, எல்லா சவால்களையும் துணிவோடு மேற்கொண்டு, இன்றைக்கு நாம் கிறிஸ்துவைப்பற்றி அறிவதற்கான மிகப்பெரிய ஆதாரமாக இருக்கக்கூடிய இந்த மாற்கு நற்செய்தியை எழுதிய, யோவான் மாற்கு உண்மையில் மாமனிதர். நற்செய்தி நூல் எழுதுவது மட்டும் கடினமானது அல்ல, அது எழுதப்படுகிற காலச்சூழலும், நற்செய்தியாளரின் வீரதத்தையும், துணிவையும் நமக்கு எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்ட காலம். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் பலவிதமான சித்திரவதைகளுக்கு உள்ளான காலம். இயேசுவைப்பற்றி அறிவதற்கு, அறிவிப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட காலம். இந்த காலக்கட்டத்தில் நிச்சயமாக நற்செய்தி எழுதுவது என்பது மிகப்பெரிய சவால். சவால்களை துணிவோடு எதிர்கொண்டு எழுதுவதுதான் உண்மையான எழுத்துப்பணி. இது அறிவை வெறுமனே பகிர்ந்து கொள்ளக்கூடிய முயற்சி அல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்தில் மிகப்பெரிய புரட்சியை...