Category: Daily Manna

பிரமாணிக்கமாய் இருப்போம்

இயேசுவிடத்திலே அடையாளம் கேட்கக்கூடியவர்களைப் பார்த்து, இயேசு ”இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது” என்று சொல்கிறார். ”விபசாரத்தலைமுறையினர்” என்கிற வார்த்தை இங்கே சற்று நெருடலை ஏற்படுத்துகிறது. இந்த வார்த்தையை வெறும் உடல் சார்ந்த விபசார பொருளாக நாம் புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக, நம்பிக்கைத்துரோகம் என்கிற அர்த்தமாக நாம் பார்க்கலாம். இதனை பழைய ஏற்பாட்டிலே இஸ்ரயேல் மக்களுக்கும், கடவுளுக்கும் இருந்த உருவகத்தில் நாம் புரிந்து கொள்ளலாம். பழைய ஏற்பாட்டில், இஸ்ரயேல் மக்களுக்கும், கடவுளுக்குமான உறவு திருமண உறவாக உருவகப்படுத்தப்பட்டிருந்தது. கடவுளை கணவராகவும், இஸ்ரயேல் கடவுளுக்கு மனைவியாக உருவகம் செய்திருந்தார்கள். ஆனால், நாளடைவில், இஸ்ரயேல் மக்கள் வேற்று தெய்வங்களை நாடியபோது, திருமண உறவில் தனது கணவரான, கடவுளுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்து விட்டதாகவே உணரப்பட்டது. கடவுளின் அன்பையும், அரவணைப்பையும் மறந்து, கடவுளைப் புறக்கணித்துவிட்டு வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்றது, இப்படிப்பட்ட நம்பிக்கைத்துரோகமாகவே கருதப்பட்டது. அதேபோல,...

ஐயா, நீர் உம் வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?

நிலத்தில் பயிரேற்ற விரும்புகின்ற உழவர் நல்ல விதைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பது வழக்கம். நல்ல தரமான விதையாக இருந்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது அவர் எதிர்பார்ப்பு. நல்ல விதைகளை நிலத்தில் தூவிய பின்னர், அவ்விதைகள் நிலத்தில் வேரூன்றி, பயிர் முளைத்து, வளர்ந்து பலன் தரும் என்று காத்திருக்கின்ற வேளையில் நல்ல பயிரின் ஊடே களைகளும் தோன்றிவிட்டன, நல்ல விதை நம் இதயத்தில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்கள், சிந்தனைகள், அவற்றிலிருந்து பிறக்கின்ற நல்ல சொற்கள், நல்ல செயல்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றன என வைத்துக்கொள்வோம். அதே நேரத்தில் நம் உள்ளத்தில் களை போலத் தோன்றுகின்ற தீய சிந்தனைகள், அவற்றிலிருந்து பிறக்கின்ற தீய சொற்கள், தீய செயல்கள் ஆகியவையும் நம் வாழ்வில் இருக்கத்தான் செய்கின்றன. இதை எப்படி விளக்குவது? கடவுளின் கைகளிலிருந்து நல்லதாகப் பிறந்த இவ்வுலகில் தீமை புகுந்தது எப்படி? இக்கேள்விக்குப் பதில் தேடுகின்ற முயற்சி பல நூற்றாண்டுகளாகவே நிகழ்ந்து வருகிறது. — கிறிஸ்தவ சமயம்...

மதலேன் மரியா- அன்புக்கு ஓர் அடையாளம்

இன்று புனித மதலேன் மரியாவின் விழாவைக் கொண்டாடுகிறோம். புதிய ஏற்பாட்டில் நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்காத ஒரு புனிதை இவர். ஆனால், இவர்தான் இயேசுவோடு மிக நெருக்கமான அன்புறவு கொண்டிருந்தவர் என்பதற்கு நற்செய்தி நூல்கள் பல சான்றுகளை வழங்குகின்றன. குறிப்பாக, இயேசுவின் இறப்பின் வேளையில் அவரது ஆண் சீடர்கள் அனைவரும் ஓடிவிட, சிலுவையடியில் நின்றுகொண்டிருந்த துணிவு மிக்க பெண்களில் இவரும் ஒருவர். இயேசுவைக் கல்லறையில் வைத்தபிறகும்கூட, ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் இருள்நீங்கும் முன்பே மரியா இயேசுவின் கல்லறைக்குச் சென்றார் என்று நாம் வாசிக்கும்போது நாம் வியப்படைகிறோம். ஆம், “அன்பில் அச்சமில்லைâ€? என்று புனித யோவான் தம் திருமடலில் எழுதினாரே (1 யோவா 4:18), அந்த அன்புக்கு இலக்கணம் மதலேன் மரியா. “அன்புக்கு என்றும் முடிவிராதுâ€? (1 கொரி 13:10) என்று பவுலடியார் மொழிந்தாரே, அந்த அன்புக்கு அடையாளம் மகதலேன் மரியா. இறந்தபின்னும் அன்பு வாழும் என்பதை எண்பித்தவர் மகதலா மரியா. இப்புனிதையிடமிருந்து இயேசுவை...

நீதிக்காக குரல் கொடுக்கும் இயேசு

இயேசு தன்னுடைய சீடர்களின் சார்பாக வாதாடுகிறார். இயேசுவின் சீடர்கள் ஓய்வுநாளில் கதிர்களை பறிக்கிறார்கள். குற்றம் கண்டுபிடிப்பதற்காகவே காத்திருக்கிற ஒரு கூட்டத்தினர், இயேசுவின் சீடர்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஏன் இயேசுவின் சீடர்கள் மீது அவர்கள் குற்றம் சுமத்த வேண்டும்? எவ்வளவோ குற்றங்களை இயேசுவின் மீது சுமத்தியாயிற்று. ஆனால், இயேசு தனது அறிவாற்றலால் வெகுஎளிதாக அதிலிருந்து மீண்டு வந்து விடுகிறார். எனவே, இயேசுவுக்குப் பதிலாக, அவருடைய சீடர்களை இப்போது தாக்க ஆரம்பிக்கிறார்கள். சீடர்களை குற்றவாளிகளாக மாற்ற, அவர்கள் இந்த குற்றச்சாட்டுக்களைச் சொன்னாலும், அவர்களின் இலக்கு என்னவோ இயேசுதான். ஆனால், அதையும் இயேசு தவிடுபொடியாக உடைத்து எறிகிறார். இயேசு தன்னுடைய சீடர்கள் தவறு செய்ததாக நினைக்கவில்லை. அவர்கள் தவறு செய்யவில்லை என்பதுதான் யதார்த்தம். அவர்கள் வேண்டுமென்றோ, சட்டத்தை மீற வேண்டுமென்றோ, கதிர்களைப் பறித்து தின்னவில்லை. அந்த கதிர்களை திருடி விற்று, இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணமும் அவர்களுக்கு இல்லை. பசிக்காக, தங்களின் பசியை...

தாயன்பு

ஒரு தாய் தன் குழந்தையின் மீது ஒவ்வொரு மணித்துளியும் நினைவு வைத்திருப்பாள். அந்த குழந்தையின் தேவையை, அவளாகவே அறிந்து, அதனை நிறைவேற்றுகிறவள் தான் தாய். எந்த ஒரு தாயும் தன் குழந்தை வேதனைப்படுவதையோ, துன்பப்படுவதையோ விரும்பமாட்டாள். இந்த தாயன்பு தான், கடவுளின் அன்பாகச் சொல்லப்படுகிறது. இந்த தாயன்பை விட பல மடங்கு மேலானது கடவுளின் அன்பு. தாயன்பையே நாம் வியந்து பார்க்கிறோம். அப்படியென்றால், கடவுளின் அன்பு எந்த அளவிற்கு மகத்துவமானது என்பதை, இங்கே நாம் அறிந்து கொள்ளலாம். சுமைகளால் சோர்ந்திருப்பவர்களை இயேசு அழைக்கிறார். வழக்கமாக, நண்பர்களின் மகிழ்ச்சியில் நாம் அதிகமாகப் பங்கெடுப்போம். அவர்களோடு மகிழ்ந்திருப்போம். ஆனால், அவர்களின் துயரத்தில் பங்கெடுக்க வேண்டுமென்றால், ”என்னுடைய நிலையே எந்த அளவுக்கு மோசமானதாக இருக்கிறது” என்று, அதிலிருந்து ஒதுங்கிவிடுவோம். துன்பத்திலும், துயரத்திலும் பங்கெடுக்கிறவர்கள் வெகு குறைவுதான். ஆனால், இங்கே இயேசுவே முன்வருகிறார். அவராகவே முன்வந்து, நமது துன்பத்தில் பங்கெடுக்கிறார். நம்மை மீட்பதற்கு துணையாக இருக்கிறார். கடவுளின்...