Category: Daily Manna

எங்கும்! எல்லோரிடமும்!

மாற்கு 9 :38 – 40 எவனொருவன் நல்ல மனிதனாக வாழ்கிறானோ அவன் இயேசுவின் பெயராலேயே அனைத்தையும் செய்கிறான். அவன் அவரின் பெயரை வேணுமென்றால் பயன்படுத்தலாம். பயன்படுத்தாமலும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக இயேசுவின் மதிப்பீடுகளை, விழுமியங்களை விட்டுக் கொண்டு ஒருவரால் நல்ல மனிதனாக வாழமுடியாது. இவ்வுலகில் யாரெல்லாம் நல்லதை எண்ணுகிறார்களோ, செய்கிறார்களோ அவர்களோடு நாமும் இணைய வேண்டும். இந்த இணைதலுக்கு சாதி, மதம், இனம் மற்றும் வேறு எந்த வேறுபாடுகளுமே தடையாக இருக்க முடியாது. இதனைத்தான் புகழ்பெற்ற இறையியலாளர் கார்ல் ரானர் ‘அறியப்படாத கிறித்தவர்கள்’ (Anonymous Christians) என்கிறார். கிறித்துவை ஏட்டளவில் அறிந்து அவரை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தனது மனசாட்சியின் படி நல்லது செய்பவர் அவரது அருகில் நெருக்கமாகவே இருக்கிறார். திருமுழுக்குப் பெற்று தினமும் திருப்பலி வந்தவர்களோடு மட்டுமல்லாது எவரெல்லாம் கிறித்தவ மதிப்பீடுகளான அன்பு, நீதி, மன்னிப்பு….. என்று வாழ்கிறார்களோ அவர்கள் அனைவரோடு கிறித்து உயிரோடு இருந்து இயக்கிக் கொண்டுதான்...

நம்பிக்கையை அதிகமாக்கும்….

மாற்கு 9 : 14 – 21 இன்றைய நற்செய்தி நம் இறைநம்பிக்கைக்கு வலுவூட்டும் விதமாக அமைந்திருக்கின்றது. இச்சிறுவனைப் பிடித்துள்ள பேய் ஆற்றல் உள்ளது. அது அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் நுரை தள்ளிப் பல்லைக் கடிக்கிறான். அவனது உடலும் விறைத்துப் போகின்றது. இப்பேயின் ஆற்றலின் முன் சீடர்களின் ஆற்றல் குறைவாகவே இருக்கின்றது. இக்குறைவிற்கு காரணம் என்ன? என்றும், இந்த சிறுவனை எப்படி நிறைவாக்க முடியும்? என்றும் ஆண்டவர் இயேசு தெளிவுபடுத்துகிறார். இன்றைய சீடர்களாகிய நமக்கு இது எப்படி முக்கியம் என்றால் நாம் பிறருக்கு பிடித்திருக்கின்ற தீய சக்திகளை விரட்டுவதைக் காட்டிலும் நம்மிடம் நம்மைச் சார்ந்து இருக்கின்ற தீய சக்திகளை விரட்டியடிக்க வேண்டும். “என்னிடம் நம்பிக்கைக் கொள்வோர் என்னைவிடப் பெரிய காரியங்களைச் செய்வார்” ( யோவான் 14:12) என்ற இறை வார்த்தையை முதலில் நம்ப வேண்டும். நம்பிக்கை என்பது, ‘என்னால் இயலாது, இறைவா’ உம்மால் மட்டுமே எல்லாம் இயலும் என்று அவரது...

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

அன்பே இவ்வுலகின் அச்சாணி. இதனை மதங்கள் மட்டும் வலியுறுத்தவில்லை. அறிஞர்களும், சான்றோர்களும், புலவர் பெருமக்களும் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக உலகப் பொதுமறை தந்த செந்நாப்போதரும், ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்’ என்கிறார். இப்படி அன்பினைப் பற்றிப் பேசாதவர்களே இவ்வுலகில் இல்லை எனலாம். சாதாரண மாந்தர்களே இவ்வாறு கூறும்போது, அன்பினையே தனது பேச்சாக, மூச்சாக, உணர்வாக, உயிராகக் கொண்டிருக்கும் நம் அன்பின் கடவுள் இயேசு எவ்வளவு பேசியிருப்பார். உலகின் எல்லாச் சமயங்களும் வலியுறுத்துகின்ற ஒருபொன் விதி, பொதுவிதி என்றால் “பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்பதாகத்தான் இருக்க முடியும். எடுத்துக்காட்டாக, இந்துமதம், (மகாபாரதம் 5:1517) இசுலாம் (சன்னா) யூதமதம் (தால்முத் சாபத் 3) கன்சிபூசியனிசம் (15:23) தாவோயிசம் (தாய் ஷாங் கான்யாய் பைன்) எனப் பல மதங்களைக் குறிப்பிடலாம். ஆனால் கிறித்தவத்தின் தனித்தன்மை என்னவென்றால், புதிய ஏற்பாட்டு நூல்கள் அனைத்திலும் ‘அன்பு’ பரவிக்கிடக்கின்றது. ‘கடவுள்...

குருவுக்கே சிலுவை, சீடனுக்கு செங்கோலா?

மாற்கு 9 : 2- 13. சீடர்களின் ‘மெசியா என்றால் யார்? என்ற புரியாத குழப்பத்திற்கு மத்தியிலும் மானிடமகனின் மரணத்தைப் பற்றி கேட்டு சோர்ந்து போன சீடர்களுக்கு ஒரு தெளிவையும், உற்சாகத்தையும் கொடுப்பதே இன்றைய நற்செய்தி. தன்னை தன் சீடர்களைப் புரிந்து கொள்ளாத நிலையில் குறைந்தப்பட்சம் தன் நெருங்கிய சீடர்களாவது புரிந்து கொள்ளட்டும் என்று அவர்களை மட்டும் அழைத்துச் சென்று இந்த உருமாற்றத்தை ஆண்டவர் வெளிப்படுத்துகின்றார்.  தொல்லைகளாய் துவண்டு, அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டு, என்ன செய்;ய வேண்டுமென்றே தெரியாத சூழ்நிலையில் எல்லாம், நமக்கு ஒரு குரல் கேட்கவேண்டும். ‘இவரே என் அன்பார்ந்த மகன்” இவருக்குச் செவிசாய்ப்பாயாக” இந்த குரலின் முழு வடிவம் தான் நமது திருவிவிலியம். நமது திருவிவிலியத்தின்படி நடந்தால் நாமும் சீடர்களைப் போன்று இயேசுவின் மாட்சிமைப் பொருந்திய நிகழ்வுகளில் பங்கெடுக்க முடியும். அவருடைய வார்த்தைகளை வாழ்வாக்க முடியும்.  இந்த உருமாற்றம் இன்னொரு முக்கியமான பாடத்தை நமக்கு தருகின்றது. இயேசு...

வேர்களைத்தேடி…

மத்தேயு 16 : 13- 20 அதிகாரம் என்பது ஆட்டுவித்து ஒடுக்குவதற்கல்ல! அன்போடு வழிநடத்துவதற்கு! அதிகாரம் என்பது வாட்டி வதைப்பதற்கல்;ல! வாஞ்சையோடு இருப்பதற்கு! அதிகாரம் என்பது திட்டித் தீர்ப்பதற்கல்ல! தீர்க்கமான திட்டமிடுவதற்கு! இன்றைய நாள் நம் தாய்த் திருஅவையின் முதல் திருத்தந்தை பேதுருவின் தலைமைப்பீடத்தினை நினைவு கூர்ந்து பெருமையோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந் நாளினை நாம் உண்மையிலேயே கொண்டாட வேண்டுமா என்ற கேள்வி பலரின் எண்ணத்தில் உதிப்பது இயற்கையே. ஆனால் இன்று, இக்கட்டான காலகட்டத்தில் இன்னும் சிறப்பாக கொண்டாடக் கடமைப்பட்டிருக்கிறோம். காரணம், வெளியிலிருந்து வரும் பிரச்சனையைக் காட்டிலும் கிறிஸ்தவர்களுக்குள் இருக்கின்ற சவால்கள் மிக அதிகம். இன்று நம் வேர்களை மறந்து வாழும் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் சிலர் நம் வேர்களை திட்டமிட்டு மூடி மறைக்கிறார்கள். வெட்டி அழிக்கிறார்கள். நம் வேர்களைத் தேடி இன்றைய கிறிஸ்தவர்களை அழைத்துச் சென்றாலே பல பிரிவினை சபையைச் சார்ந்தவர்களுக்கு உண்மை எது? என புலப்பட்டுவிடும். அவர்களின் சாயம் வெளுத்து...