Category: Daily Manna

வாழ்க்கையில் விழாமல் இருக்க இது வேண்டும்…

மத்தேயு 7:21,24-27 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருவிவிலியத்தில் உள்ள ஆண்டவரின் வார்த்தைகள் மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டிருக்கிற அன்பு அறிவுரைகள். நம் வாழ்வை உயர்த்தும் அமுதமொழிகள். வாழ்க்கையில் நாம் விழாமல் நேராகச் செல்வதற்கான ஏணிப்படிகள். திருவிவிலியத்தை படிக்கிறவர்கள் தடுமாறுவதில்லை. தலைநிமிர்ந்து நிற்பார்கள். திருவிவிலியம் செய்யும் இரண்டு நன்மைகளை நாம் இன்று தெரிந்துக் கொள்ள வேண்டும். 1. துப்புரவு செய்கிறது காலையிலே திருவிவிலியத்தை எடுப்பவர் துப்புரவு செய்கிறார். எதை துப்புரவு செய்கிறார்? தன் மனதில் மாட்டிக்கிடக்கிற மாசுக்களை துப்புரவு செய்கிறார். ஆகவே திருவிவிலியம் வாசிப்பதால் காலையிலே மனது சுத்தப்படுத்தப்படுகிறது. அந்த நாளை பரிசுத்தமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள்ளே மிக விரைவாக ஓடி வருகிறது. இப்படி செய்வதால்...

இரண்டு வார்த்தைகளால் உங்கள் நோயை குணப்படுத்தலாம்!

மத்தேயு 15:29-37 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உடல்நோய், மனநோய் இந்த இரண்டினாலும் பாதிக்கப்பட்டவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை உண்டா? என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம். உடல்நோய் மற்றும் மனநோயை நாமே குணப்படுத்த முடியும். திருவிவிலியத்திலுள்ள இரண்டு வார்த்தைளை நாம் பயன்படுத்தினால் நம் உள்மனக் காயங்கள், வெளிமனக் காயங்கள் மற்றும் அனைத்து நோய்களும் குணமாகுகின்றன. அந்த இரண்டு வார்த்தைகள் இதோ: தாவீதின் மகனே இரங்கும் ஏற்கெனவே நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டவர் இயேசுவை நோக்கி ”தாவீதின் மகனே எனக்கு இரங்கும்” என மன்றாடும் போது அவர் அற்புத சுகம் அளிக்கிறார் இந்த வார்த்தை கடவுளின் பேரிரக்கத்தை பெற்றுத் தருகிறது கொடிய நோய்களுக்கு விடுதலை அளிக்கிறது. உம்மால் மட்டுமே முடியும்...

மறக்காதீ்ங்க! சொல்ல மறக்காதீங்க… ப்ளீஸ்!

லூக்கா 10:21-24 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஒருசில ஜெபங்களை நாம் உணர்ந்து சொல்லும்போது அது நம் உடல், மனம், ஆன்மாவிற்கான முழுபலனையும் தருகிறது. அந்த ஜெபத்தை சொல்லும்போது நம் உடலில் புதுசெல்கள் பிறக்கின்றன. அப்படிப்பட்ட மிக அருமையான ஜெபத்தை அறிமுகப்படுத்துகிறது இன்றைய நற்செய்தி வாசகம். அந்த ஜெபத்தை இரண்டு நேரங்களில் சொல்லும்போது அது அதிக பலன்களை பெற்றுத்தருகிறது. நம் திறமைகளை வெளிப்படுத்திய பிறகு நம்முடைய திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பான காரியங்களைச் செய்த பிறகு நமக்கு ஒரு சந்தோசம் கிடைக்கும். அந்த வேளையில் நாம் நம்மைக் குறித்து பெருமிதம் கொள்ளாமல் இறைவனை நினைக்க வேண்டும். அதைத்தான் இயேசு நற்செய்தி வாசகத்தில் செய்கிறார். நாமும் அவரைப்போல சிறப்பான செயல்களை...

நம்பிக்கை எப்போதும் வெல்கிறது

லூக்கா 21:25-28, 34-36 இறையேசுவில் இனியவா்களே! திருவருகைக்காலம் முதல் ஞாயிறு வழிபாட்டை ஆர்வத்தோடும் ஆசையோடும் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஒவ்வோர் ஆண்டும் திருவருகைக் காலத்துடன் ஒரு புதிய திருவழிபாட்டு ஆண்டை நாம் துவக்குகிறோம். கத்தோலிக்கர்களுக்கு இது புத்தாண்டு தொடக்க நாள். புத்தாண்டு என்றாலே, புதியனவற்றைப் புகுத்தும் எண்ணம் மனதில் எழுகிறது. இந்தத் திருவழிபாட்டு ஆண்டும் புதிய எண்ணங்களை, அந்த எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் புதிய கண்ணோட்டங்களை, புதிய மனதை நமக்குள் உருவாக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு, புதுப்பொலிவோடு புலா்ந்திருக்கிறது. திருவருகைக் காலம் எதிர்பார்ப்பின் காலம். நம்பிக்கையின் காலம். கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு நம்மை தயாரிக்கும் காலம். உண்மையில், நம்மில் இன்று பலருக்கு போதாத காலமாக உள்ளது. தனி வாழ்விலும், குடும்பவாழ்விலும், பொது வாழ்விலும் பல்வேறு பிரச்சினைகள்...

முதல் தேதியில் முக்கிய அறிவிப்பு

லூக்கா 21:34-36 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆண்டின் கடைசிமாதம் டிசம்பர். இந்த மாதம் நல்ல குளுகுளு மாதம். மானிடமகன் வரும் நாளில் எப்படியெல்லாம் இருக்க கூடாது என்பதே இம்மாதத்தின் முக்கிய அறிவிப்பு. மிகச் சிறந்த தயாரிப்பு செய்ய வேண்டும் என்பதே இன்றைய நற்செய்தியின் மையமாகும். இரண்டு விதங்களில் நாம் இருக்க கூடாது. 1. குடிவெறி தமிழ்நாடு குடியினால் தள்ளாடுகிறது. எல்லா ஊர்களிலும் மது கடைகளை அரசு திறந்து வைத்திருக்கிறது. குடிப்போரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. மிகவும் மோசமாக படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குடியினால் ஏற்பட்டிருக்கிற தீமைகள் அதிகம். குடிநோயாளிகள் மனநோளிகளாக நடமாடுகின்றனர். இது சமூக சீர்கேட்டிற்கு காரணமாக அமைகின்றது. அன்புமிக்கவர்களே! குடிவெறியிலிருந்து வெளியே வர...