Category: Daily Manna

விடாமல் விடாப்பிடியாக விரட்டு…

லூக்கா 11:5-13 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். எதையும் பெற வேண்டும் என்றால் தொடங்கிய முயற்சியை விடாமல் விடாப்பிடியாகத் தொடா்ந்து செய்யும் போது தான் வெற்றி என்பது கிடைக்கும். இறைவனிடம் இருந்து நாம் நம்முடைய வரங்களை பெற வேண்டும் என்றாலும் தொடர்ந்து விடாமல் விடாப்பிடியாக கேட்க வேண்டும். அதுதான் வரங்களை வாரி வழங்குகிறது. ஆகவே இன்றைய நாள் நாம் தொடங்குகிற முயற்சி, செயல் எல்லாம் தொடா்ந்து விடாமல் விறுவிறுப்பாக போகட்டும் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். அதை இரண்டு விதத்தில் நாம் ஆர்வமாக செய்யலாம். 1. முடியும் எதையும் செய்ய நம்மால் முடியும் என்ற உயா்ந்த எண்ணம் இருந்தாலே எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முடிகிறது. எதையும் பின்வாங்காமல்...

ஒரு நாளைக்கு மூன்று முறை சொல்லுங்க…

லூக்கா 11:1-4 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நம் ஆண்டவர் இயேசு கற்றுக் கொடுத்த ஜெபம் மிகவும் வல்லமை வாய்ந்தது. அந்த ஜெபம் நம் நாடி நரம்பு அனைத்திலும் துடிப்பை உருவாக்க கூடியது. உயிரிழந்த செல்களுக்கு புத்துயிர் அளிக்க வல்லது. நம் ஆன்மாவிற்கான ஆனந்த ராகம் அது. அதை உணா்ந்து தினமும் ஜெபிக்கும் போது எப்பொதும் வெற்றி உண்டு என்ற அறிவிப்போடு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். அடிக்கடி இந்த ஜெபத்தை சொல்வது மிக நல்லது. அடிக்கடி சொல்ல வாய்ப்பு இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு மூன்று முறை சொல்வது அந்த நாளை இனிய நாளாக்கும். 1. காலை சொல்லுங்க… காலை எழுந்ததும் ஆண்டவரை இந்த ஜெபத்தின் வழியாக...

தேவையானது ஒன்றே.. இது தெரியுமா?

லூக்கா 10:38-42 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் பலவற்றை தேடி அதிவேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த உலகத்திற்கு நன்றி சொல்லி விடைபெறுவதற்குள் பலவற்றை அடைய வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று மிகவும் பரபரப்பாக, படபடப்பாக அலைகிறோம். இப்படி அலைந்ததனால் அடைந்த இலாபம் என்ன? பெருநஷ்டம் தான் மிஞ்சியது. பெரும்கவலை தான் கிடைத்தது. வாழ்க்கையில் இலாபம் கிடைக்க வேண்டுமென்றால் ஒன்றே ஒன்றே போதும் என்கிறார் இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பொறுமை இருந்தால் போதும் வாழ்க்கையில் இலாபம் பொங்கி பொங்கி வரும். கலங்க வேண்டியதில்லை. இந்த பொறுமை நமக்கு பல நேரங்களில் இருப்பதில்லை. பொறுமையே நம் வாழ்விற்கு பெருமையைக் கொண்டு வருகிறது. பொறுமையை இரண்டு...

நல்ல சமாரியன் சாத்தியமா?

லூக்கா 10:25-37 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆண்டவர் இயேசு எல்லாரையும் நல்ல சமாரியனாக மாற அழைக்கிறார். ஆனால் அனைவரும் அவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதில்லை. இன்றைய நற்செய்தியில் வருகின்ற உவமையில் மூன்று நபர்கள் வருகின்றார்கள். ஆனால் அதில் ஒருவர் மட்டுமே நல்ல சமாரியனாக செயல்படுகிறார். ஒருவர் மாறும் போதே இயேசுவுக்கு இவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றால் பலர் மாறும்போது எப்படி இருக்கும். மாறலாமா? மாறுவோம் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். நல்ல சமாரியனாக மாற இரண்டு முயற்சிகள் முக்கியம். 1. உடனிருத்தல் நவீன காலத்தில் உடனிருத்தல் என்பது குறைந்து வருகிறது. இந்த சூழலில் நாம் இந்த முயற்சியை எடுக்க வேண்டும். முதலில் நம் இல்லத்தில் இருப்பவர்களின் இன்ப...

திருமண வாழ்க்கை எப்படி போகுது?

மாற்கு 10:2-16 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 27ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கட்டை விரலில் அடிபட்ட முதியவர் ஒருவர் தையலைப் பிரிக்க மருத்துவமனைக்கு வந்தார். நேரம் ஆக ஆக பதட்டமடைந்து கொண்டிருந்தார். “நான் எட்டரை மணிக்கு செல்ல வேண்டும்’ என்று தவியாய் தவித்தார். மருத்துவர் அவர் முறை வந்ததும் பக்குவமாகத் தையலை நீக்கினார். அவருக்கு வலிக்கக்கூடாது என்று பேசிக்கொண்டே தையலைப் பிரித்த அந்த மருத்துவர், “ஏன் இவ்வளவு பதற்றப்படுகிறீர்கள்?’ என்று கேட்டார். அந்த முதியவர், “நான் மருத்துவமனையில் இருக்கும் என் மனைவியோடு சிற்றுண்டி அருந்த சரியாக எட்டரை மணிக்கச் செல்லவேண்டும்’ என்று சொன்னார். “உங்கள் மனைவிக்கு என்ன ஆயிற்று’ என்று அக்கறையாக விசாரித்தார் மருத்துவர். “அவள் கொஞ்ச நாட்களாகவே அல்ஜீமர் என்கிற ஞாபகமறதி...