Category: Daily Manna

அன்பே மனிதன்

மத் 5 : 43 -48 ‘அன்பே கடவுள்’ (1யோவான் 4:8) என்பது உண்மையென்றால் ‘அன்பே மனிதன்’ என்று அமைவது தான் நியதி. ஒவ்வொருவரும் கடவுளின் சாயலோடு படைக்கப்பட்டிருக்கிறோம். ‘என் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள் என்கிறார் இயேசு. மனிதனின் நிறைவு என்பது அவன் புனிதனின் நிலையை அடைவதே. அவரின் சாயலோடு படைக்கப்பட்டவர்கள் அவரின் சாயலாகவே மாற வேண்டும். இது சாத்தியமா? சாத்தியமே. எப்படியென்றால், அன்பினால் இது சாத்தியமாகும். நாங்கள் தான் எங்களை அன்பு செய்கிறவர்களை அன்பு செய்கிறோமே என்பது போதாமை. மாறாக விண்ணகத் தந்தை எவ்வாறு அனைவரையும் ஒன்று போல் அன்பு செய்கிறாரோ அவரைப் போல நாமும் தீயவர்களையும், நமது பகைவர்களையும் அன்பு செய்ய வேண்டும். அவன் எனது பெயரைக் கெடுத்து விட்டானே! வாழ்வை சீர்குலைத்து விட்டானே! எனக்குரிய வாய்ப்புகளைத் தட்டிப் பறித்து விட்டானே! அவனை எவ்வாறு அன்பு செய்ய முடியும் என்று நினைக்கும் பொழுதெல்லாம்...

மனநிலையும் வழிபாடும்

மத் 5 : 20 -26 கண்ணால் காணமுடியாத கடவுளை அன்பு செய்கிறேன். அவருக்குப் பலி செலுத்துகிறேன் என்று அவருக்கும் நமக்கும் உள்ள உறவினை சரிசெய்வதற்கு முன்பாக, முதலில் கண்ணால் நீ காண்கின்ற உன் அயலானோடு உள்ள உறவுச் சிக்கலை சரிசெய்ய வேண்டும் என்பதே இன்றைய நற்செய்தி நமக்கு முன் படைக்கின்ற பாடமாகும். இதற்கு பரிசேயர்களின் அறநெறியைக் காட்டிலும் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களின் அறநெறி சிறந்ததாக இருக்க வேண்டும். பரிசேயர்களின் அறநெறி என்பது சட்டத்தை மட்டுமே சார்ந்தது. இரக்கம், அன்பு, மன்னிப்பு இவற்றிற்குச் சட்டத்தில் வேலையில்லை. ஆனால் இயேசு ‘நான் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்று சொல்லி அவர்களின் சட்டத்திற்கு புதிய பொருளும், அழுத்தமும் கொடுக்கிறார். அவர்களின் சட்டங்கள் அனைத்தும் ஒருவரின் செயலினை மட்டும் கொண்டே மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் ஆண்டவர் கூறும் புதிய நெறியில் செயலுக்குக் காரணமான மனநிலையையும் (யுவவவைரனந) நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார். எடுத்துக்காட்டாக, கொலை...

நிறைவை நிறைவானவரிடம் கேட்க, தேட, தட்ட

மத் 7 : 7- 12 இத்தவக்காலத்தில் செபத்தின் முக்கியத்துவத்தையும், செபிப்பதின் விளைவுகளையும், நாம் எப்படி செபிக்க வேண்டும் என்பதையும் பல கோணங்களில் பார்க்கிறோம். இன்றைய நற்செய்தியும் செபத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தையும், ஆன்மீகத்தையும் நமக்கு எடுத்துரைக்கிறது. ‘கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்’ என்றவுடன் நாம் நமது தேவைகளை மளிகைக்கடை பட்டியல் போல எடுத்துவிட ஆரம்பித்து விடுகிறோம். அது பல நேரங்களில் எங்கு? எப்படி? தொடங்குகிறது என்றே தெரியாது. குறிப்பாக இன்று பலபேர் அருட்கொடை இயக்கத்தில் செபிப்பது போலவே செபிப்பது செபம் என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் ஆண்டவர் நாம் கேட்கின்ற பொருளாதாரக் காரியங்களை விரும்பிக் கேட்பாரோ என்றால் அது கேள்விக் குறியே! காரணம் அவர் செல்வந்தர்களின் மனநிலையை அடியோடு வெறுக்கிறார். மிகுதியான உடைமைகளை வைத்திருப்பவர்களை அடித்து விரட்டுகிறார். இன்னுமொரு இடத்தில் “நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது, நீங்கள் உள்ளறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள்....

அவர் ஒரு ‘மாதிரி’

மத் 6 : 7 -15 அவர் ஒரு ‘மாதிரி’ தவக்கால ஆன்மீக முயற்சிகளில் (ஈதல், செபித்தல், நோன்பிருத்தல்) ஒன்றான செபித்தல் பற்றி இன்றைய நற்செய்தி விளக்குகிறது. ஆண்டவர் இயேசுவே நம் அனைவருக்கும் அனைத்திருக்குமான மாதிரியாக இருக்கின்றார் என்பதை அவர் கற்றுக் கொடுத்த செபத்தில் இருந்தும் நம்மால் கற்றுக் கொள்ள முடிகிறது. சில பிற சபையினர் இச்செபத்தைத் தினமும் எவ்வேளையும் சொல்லும் நம் தாய் திருஅவையினரைப் பார்த்து கேளி செய்வதுண்டு, ஏன் இவர்கள் திரும்ப திரும்ப சொல்கிறார்களென்று? இவர்கள் கேளியையும் கிண்டலையும் பார்த்து நாம் பின் வாங்கிட முடியாது. இவர்கள் இயேசுவையும் இறைவார்த்தையையும் கிண்டல் செய்கிறார்கள் என்பதே உண்மை. இயேசு கற்பித்த இச்செபமே தலை சிறந்த செபமாக இன்று உலகின் அதிக மொழிகளில் சொல்லப்படுகின்ற ஓர் முதன்மைச் செபமாகும். இதன் முதல்பகுதி, இறைவனின் இறையாட்சியை அதாவது இயேசு கண்ட கனவினை நோக்கி, இந்த உலகு உருண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை எடுத்துரைக்கின்றது....

தூக்கியெறியப்பட்ட இடத்தில் தூக்கி நிறுத்துவார்

இ.ச.26:4-10, உரோ. 10:8-13, லூக். 4:1-13 தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை வழிபாட்டு வாசகங்கள், சோதனைகளை எப்படி சாதனையாக்குவது என்பது பற்றி நமக்கு விளக்குகிறது. ஆண்டவர் இயேசு சோதிக்கப்பட அலகையினால் பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதை இன்றைய நற்செய்தி விளக்குகிறது. நம்மை மீட்பதற்காக மனிதனாகப் பிறந்த மனுமகன் மனித இயல்பினால் சோதனைகளை எதிர்கொள்கிறார். அவருடைய திருமுழுக்கு நேர் மறையாகத் தன் பணியை நிறைவேற்ற தயாரிக்கிறது. ஆனால் இந்தப் பாலைவன அனுபவமோ அவரை மிகவும் கடினமான முறையில் அவரைத் தயாரிக்கின்றது. வரலாற்றுப் பக்கங்களைத் தூசித்தட்டிப் பார்த்தோமென்றால், போராட்டத்திற்குப் பிறகுதான் சுதந்திரம் அல்லது விடுதலை என்பதை அறிய முடிகிறது. அவருடைய இந்தப் பாலைவனப் போராட்டம் தொடர்ந்து கல்வாரி சிலுவைப் பாதையின் வழியாக விடுதலை வாழ்விற்கு களம் அமைத்துக் கொடுத்தது. சோதனை என்பது அனைவருக்குமானது. சோதனை வருவதை நம்மால் தவிர்க்க இயலாது. தினமும் இந்தச் சோதனைகளைக் கடந்தால் தான் நம்மால் சாதிக்க முடியும். இதில் நன்றாகக்...