Category: Daily Manna

இறைவனின் உண்மையான அன்பு

செப்பனியா 3: 14 – 18 ”சீயோனின் மகளே! மகிழ்ச்சியாய் ஆர்ப்பரி! ஆரவாரம் செய்! மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி!” என்று, இறைவாக்கினர் செப்பனியா தன்னுடைய உள்ளத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். எதற்காக இந்த ஆரவாரம்? ஏன் இந்த ஆர்ப்பரிப்பு? ஏனென்றால், கடவுள் இஸ்ரயேல் மக்களின் பாவங்களையெல்லாம் மன்னித்து விட்டார். அவர்களை தண்டனையிலிருந்து தப்புவித்து விட்டார் என்பதுதான். யூதாவும், எருசலேமும் தாங்கள் செய்த தண்டனையிலிருந்து தப்பிவிட்டார்கள். அவர்களை கடவுள் தண்டிக்கவில்லை. எனவே, கடவுளைப் புகழ்ந்து போற்றி ஆர்ப்பரிக்க இறைவாக்கினர் கேட்டுக்கொள்கிறார். ஆர்ப்பரித்து மகிழ்ச்சி கொள்ளக்கூடிய தருணத்தில், மற்றொரு செய்தியும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது அவர்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம் என்பது. ”சீயோனே! அஞ்ச வேண்டாம்!” எதற்காக அஞ்ச வேண்டாம்? ”கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்!” இஸ்ரயேல் மக்கள் தாங்கள் கடவுளுக்கு எதிராக செய்த பாவங்களை நினைத்துப் பார்த்து, பயம் கொள்கிறார்கள். கடவுளைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். ஏனென்றால், தாங்கள்...

தன்னலமில்லாத வாழ்க்கை

திருத்தூதர் பணி 18: 1 – 8 ”உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பு. இனிமேல் நான் பிற இனத்தாரிடம் செல்கிறேன்” என்று, பிற இனத்து மக்கள் நடுவில் தூய பவுல் கடவுளுடைய வார்த்தையை அறிவிக்கச் செல்கிறார். இதற்கு முந்தைய பகுதியில் பவுல் ஏதேன்ஸ் நகரில் நற்செய்தி அறிவித்ததைப் பார்த்தோம். ஏதேன்ஸ் நகரில் பவுல் துன்புறுத்தப்பட்டாரா? என்பது தெரியவில்லை. ஆனால், அங்கு அவர் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது உறுதி. அங்கிருந்து புறப்பட்டு கொரிந்து நகருக்கு வருகை தருகிறார். கொரிந்து நகரம் செல்வமிக்கதும், பிரமாண்டமானதுமாகும். பவுல் மிகச்சிறந்த கல்விமானாக இருந்தாலும், கூடாரம் செய்வது அவரது தொழில். அதனை அவர் ஏளனமாக நினைக்கவில்லை. தான் இவ்வளவு படித்திருக்கிறேன், கிறிஸ்துவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன், கடவுள் கொடுத்த வல்லமையைப் பயன்படுத்தி புதுமைகளைச் செய்கிறேன். எனவே, என்னோடு இருக்கிறவர்கள் எனக்கு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்று, அவர் சோம்பேறித்தனம் படவோ, அடுத்தவரின் பணத்தில் தன்னுடைய வாழ்க்கையை நடத்தவோ...

அர்ப்பண வாழ்வு

திருத்தூதர் பணி 17: 15, 22 – 18: 1 திருத்தூதர் பவுல் முதன்முறையாக ஏதேன்ஸ் நகருக்குள் நுழைகிறார். கிறிஸ்தவ மறைப்பரப்பு பணியாளர்களிலேயே இவர் தான், முதலாவதாக இந்த நகரத்திற்குள் நுழைகிறார் என்று கூட சொல்லலாம். இந்த முதல் பயணம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது என்று நாம் சொல்லிவிட முடியாது. ஆனால், ஒரு சிலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதை நாம்பார்க்கிறோம். ”சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்” (17: 34). ஏதேன்ஸ் மிகப் பிரபலமான நகரம் என்பது நாம் அறிந்ததே. பலத்திற்கும், அறிவாற்றலுக்கும் பெயர் போனது. மிகப்பெரிய அறிவாளிகளும், அரசர்களும் இங்கிருந்து வந்திருக்க வேண்டும். அல்லது ஏதேன்ஸ் தொடர்புடையவர்களாக இருந்திருக்க வேண்டும். கிறிஸ்து பிறப்பிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர், எகிப்திய காலனியாக இருந்து வந்தது. “மினர்வா“ என்கிற கிரேக்க கடவுளின் பெயரால், இது ஏதேன்ஸ் என்கிற பெயர் பெற்றது. பவுல் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர்களுக்கு, அவர்களுடைய பிண்ணனியிலே அறிவிக்கிறார்....

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்

திருப்பாடல் 138: 1 – 2 , 2 – 3, 7 – 8 ஆண்டவருக்கு முழு மனத்துடன் நன்றி சொல்வது என்பது எது? நாம் எல்லாருமே கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறோம். ஆனால், எப்படிப்பட்ட மனநிலையோடு செலுத்துகிறோம்? நன்றி மனநிலையோடு கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறவர்களும் குறைவு. கடவுளுக்கு நன்றி செலுத்துகிறவர்களும் குறைவு. இதற்கு அடிப்படை காரணம், எதிர்பார்ப்பு. இன்றைக்கு கடவுளைத் தேடுகிறவர்கள் எல்லாருமே எதிர்பார்ப்போடு தான் தேடுகிறார்கள். கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்கிற மனநிலையோடு கடவுளைத் தேடுகிறவர்கள் இல்லாத சூழ்நிலை தான் காணப்படுகிறது. கடவுளுக்கு எதற்காக நன்றி செலுத்த வேண்டும்? ஏதாவது செய்தால் தானே நன்றி செலுத்த வேண்டும் என்பதான மனநிலை தான், மக்களிடத்தில் காணப்படுகிறது. ஆனால், கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட பலவற்றை நாம் பெற்றுக்கொண்டதாகவே நினைப்பது கிடையாது. அவற்றை வெகு சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். இந்த வாழ்க்கையும் சரி, நம்முடைய பெற்றோரும் சரி, நம்முடைய உடன்பிறந்தவர்களும்...

உடனிருந்து செயலாற்றும் இறைவன்

திருத்தூதர் பணி 16: 11 – 15 இறைவன் நம்மிலிருந்து செயலாற்றுகிறார் என்பதை, இன்றைய வாசகம் நமக்கு மிகச்சிறப்பாக உணர்த்துகிறது. ”இறைவன் முன் நாங்கள் பயனற்ற ஊழியா்கள். எங்கள் கடமையைத்தான் செய்தோம்” என்கிற இறைவார்த்தைக்கு ஏற்ப, பவுலடியார் தனக்கு நடக்கிற இன்னல்களை, இடையூறுகளை நினைத்து கவலைப்படாமல், தன்னுடைய பணியை அவர் செய்து கொண்டேயிருக்கிறார். ஆச்சரியம் என்னவென்றால், கல்லைக்கூட கரைக்க முடியும் என்பது போல, கடினமான உள்ளத்தவரும், பவுலடியாரின் வார்த்தைகளைக் கேட்டு மனம் திருந்துகிற அளவிற்கு, தூய ஆவியானவர் அவரோடு உடனிருந்து செயலாற்றுகிறார். நம்முடைய வாழ்க்கையில் நாம் முயற்சிகளை எடுக்கிறபோது, அதற்கான பலனை நாம் உடனே பெற்றுவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி கிடைக்காதபோது, நாம் ஏமாற்றமடைகிறோம். அது தவறு. நம்முடைய கடமையை நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கான பலனை கடவுள் கண்டிப்பாக நமக்குத் தருவார். எப்படிப்பட்ட கடினமான காரியம் என்றாலும், நாம் கடினமாக உழைக்கிறபோது, அதற்கான பலன் நமக்கு...