Category: Daily Manna

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்

திருப்பாடல் 34: 1 – 2, 15 – 16, 17 – 18 ஆண்டவரை எல்லா காலத்திலும், எல்லா நேரத்திலும் புகழ்வதாக திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். இது ஒரு முதிர்ச்சியான மனநிலையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. ஆண்டவரை எக்காலமும் போற்றுவது என்பதன் பொருள் என்ன? மனித மனம் வித்தியாசமானது. நம்மிடத்தில் நன்றாக இருக்கிறவர்களிடம் நன்றாக இருப்பதும், நம்மிடம் ஒரு தூரத்தை விரும்புகிறவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதும் மனித மனமாக இருக்கிறது. இந்த பார்வை கடவுளுடன் நாம் கொண்டிருக்கிற உறவிலும் செயல்படுகிறது. கடவுளிடமிருந்து நாம் நிறைவாகப் பெற்றுக்கொண்டிருக்கிறபோது, நாம் கடவுளிடம் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். கடவுளைப் போற்றுகிறோம். கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனால், கடவுளிடத்தில் நாம் கேட்டது கிடைக்கவில்லை என்றாலோ, நாம் நினைத்தது போல வாழ்க்கை அமையவில்லை என்றாலோ, கடவுளை விட்டு விலகிச்செல்கிறோம். கடவுளைப் போற்றுவதற்கோ, புகழ்வதற்கோ நமக்கு மனம் வருவதில்லை. இது சாதாரண மனித இயல்பு. இதனைக் கடந்து வாழக்கூடிய வாழ்வை, இந்த...

ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கிறீர்

திருப்பாடல் 139: 1 – 3அ, 3ஆ – 6, 7 – 8, 9 – 10 கடவுள் ஒருவர் தான் மனிதர்களை முழுமையாக அறிந்திருக்கிறார். அவர் ஒருவர் தான், நம்முடைய உள்ளத்திற்குள்ளாக சென்று, நம்மை முற்றிலும் தெரிந்தவராக இருக்கிறார். நம்முடைய பலம், நம்முடைய பலவீனம் இரண்டையும் ஆண்டவர் அறிந்திருக்கிறார். இந்த ஞானத்தை திருப்பாடல் ஆசிரியர் இங்கு பாடலாக வெளிப்படுத்துகிறார். கடவுள் எப்போதும் நம்மை அறிந்து அன்பு செய்கிறவராக இருக்கிறார். அவரிடத்தில் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதுதான், இந்த திருப்பாடல் நமக்கு தரும் செய்தியாக இருக்கிறது. திருப்பாடல் ஆசிரியர் ஆண்டவரிடம் கேட்பது என்ன? திருப்பாடல் ஆசிரியர் ஆண்டவரிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான். ஆண்டவர் அவரை முற்றிலும் அறிந்தவராயிருக்கிறதால், ஆண்டவரே அவரை வழிநடத்த வேண்டும் என்று, ஆசிரியர் விரும்புகிறார். ஆண்டவர் அவருடைய குறைகளை அறிந்திருக்கிறதனால், அவரை தீமையின் பக்கம் நெருங்கவிடாமல் பாதுகாத்துக் கொள்வார் என்பது, அவருடைய ஆழமான நம்பிக்கையாக...

உண்மையான விசுவாசம்

லூக்கா நற்செய்தியாளரைப் பொறுத்தவரையில், இயேசு சதுசேயர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய ஒரே இடமாக, இந்த வாக்குவாதம் அமைகிறது. சதுசேயர்கள் தாங்கள் என்ன செய்தோம், எதை நம்புகிறோம்? என்று அறியப்படுவதைவிட, எதை நம்பவில்லை என்பதன் அடிப்படையில், இந்த நற்செய்தியில் அறியப்படுகிறார்கள். சதுசேயர்கள் எதற்காக உயிர்த்தெழுதலை நம்பவில்லை? எதனால் அவர்கள் உயிர்த்தெழுதலை நம்பாதவர்களாக இருந்தனர்? இந்த கேள்விகளுக்கு பதில் கண்டுபிடித்தபின், இந்த வாசகம் நமக்குத்தரும் செய்தியைப் பார்ப்போம். அடிப்படையில் சதுசேயர்கள் “தோரா” என்று சொல்லப்படுகின்ற, முதல் ஐந்து புத்தகங்களை மட்டுமே நம்பினார்கள். ஆனால், பரிசேயர்கள் மற்ற புத்தகங்களையும் கடவுளால் ஏவப்பட்ட நூல்களாக நம்பினார்கள். முதல் ஐந்து புத்தகங்களில் உயிர்த்தெழுதல் பற்றிய வார்த்தைகள் இல்லை. இந்த உயிர்த்தெழுதல் பற்றிய எண்ணங்கள், சிந்தனைகள் தாமதமாகத் தோன்றியவை. எனவே, அவைகளைப் பற்றிய குறிப்பை நாம், தொடக்க புத்தகங்களில் பார்க்க முடியாது. இந்த வேறுபாடு தான், சதுசேயர்களையும், பரிசேயர்களையும் பிரிப்பதாக அமைந்தது. இதுதான் இவர்களை, ஒருவர் மற்றவர்க்கு எதிராக வேறுபடுத்திக் காட்டுவதாக...

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா

நோ்ந்தளியுங்கள்… நேராகுங்கள் யோவான் 2:13-22 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு திருவிழா திருப்பலி நம்மை கடவுளுக்கு நேர்ந்தளிக்க அழைப்பு கொடுக்கிறது. நாம் அனைவரும் கடவுளுக்கே சொந்தம் என்பதை ஆலயத்தில் அறிக்கையிட வேண்டும். உரக்க அதை வெளியிட வேண்டும். அதற்கான வாய்ப்பாக இந்த நாளை பயன்படுத்துவோம். இன்று ஆலயம் வந்திருக்கின்ற நாம் அதை முழு ஆர்வத்தோடும் ஆசையோடும் செய்வோம். அதுதான் இந்த திருவிழாவின் முக்கிய நோக்கமாகும். கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களை ஆலயத்தில் நேர்ந்தளிக்க வேண்டும். அப்படி ஆலயத்திற்கு நம்மை நேர்ந்தளிக்கும் போது இரண்டு விதங்களில் நாம் பயன் பெறுகிறோம். 1. பாதுகாப்பு பெறும் வளையம் உருவாகிறது நாம் ஆண்டவருக்கு ஆலயத்தில் வைத்து நம்மை நேர்ந்தளிக்கும்...

இயேசுவின் எல்லையில்லா அன்பு

வரிதண்டுவோரும், பாவிகளும் இயேசுவை நெருங்கிவந்தனர். ஆனால், பரிசேயரோ இயேசு சொல்வதைக் கேட்டு முணுமுணுத்தனர். இந்த முதல் இறைவார்த்தையே இருவேறான மக்களின் மனநிலையைப் படம் பிடித்துக்காட்டுகிறது. இயேசுவை நோக்கி எதற்காக பாவிகள் நெருங்கி வர வேண்டும்? பாவிகள், ஏழைகள், வரிதண்டுவோர் தங்களது வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கருதினர். தாங்கள் கடவுளால் ஏற்கெனவே தீர்ப்பிடப்பட்டதாகக் கருதினர். தங்களுக்கு இனிமேல் வாழ்வு இல்லை என்று நினைத்தனர். ஆனால், இயேசுவின் வார்த்தைகள் அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. தங்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது என்ற நம்பிக்கையை அவை விதைத்தன. மற்றொருபக்கத்தில் பரிசேயர்களோ, தாங்கள் ஏற்கெனவே கடவுளின் அரசுக்கு தகுதிபெற்று விட்டதாக எண்ணிக்கொண்டிருந்தனர். தாங்கள் மட்டும் தான், கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்று நினைத்தனர். ஏழைகளையும், பாவிகளையும் வாழ்வை இழந்துவிட்டதாகப் போதித்துக்கொண்டிருந்தனர். அவர்களது போதனை இப்போது, இயேசுவின் போதனையால் வெல்லப்பட்டு விட்டது. அது மட்டுமல்ல, அவர்களுக்கே அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டது. இதுவரை தங்களிடம் பணிந்து நின்றவர்கள், இப்போது இவர்களைப் பார்த்து பரிகாசிக்க தொடங்கியவுடன்,...