Category: Daily Manna

உண்மையா?

யோவான் 8: 31-42 “உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” -இதை இன்றைய தேர்தல் நெருங்குகிற சூழலில் சொன்னால் கண்டிப்பாக அனைவரும் சிரித்துவிடுவர். “உண்மையா அது என்ன” என்று பிலாத்து கேட்டதுப் போலதான் நாம் அனைவரும் கேட்போம். காரணம் யார் அதிகமாக பொய்க்கூறி ஏமாற்றுவார்களோ அவர்களே சிறந்தவர்கள், தலைவர்கள் ஆகுகிறார்கள். காரணம் இன்றைய உலகம் உண்மைப் பேசுபவர்களைவிட பொய் பேசுபவர்களுக்கே அதிகம் முக்கியத்துவம் தருகிறது. மசாலா தடவிப் பேசுபவர்களை உடனடியாக நம்புகிறது. பல வருடங்களாக மாற்றாத, பொய்யான தேர்வு வரைவினை இன்றுவரை கட்சிகள் வெளியிடுவது நாம் எவ்வளவு பொய்யானாலும் நம்புவோம் என்பதை அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். உண்மை ஊனமாகி விட்டது இவ்வுலகினில். ஆனால் இவ்வுலகில் இயேசுவின் வார்த்தையில் நிலைத்திருப்பவன் உண்மையை உணர்கின்றான். அது அவனுக்கு விடுதலை அளிக்கும், எதையும் தனது இயல்பான நாட்டத்தின் வழியே, செய்ய வேண்டியதை மனத்திடத்துடன் செய்வதே உண்மையான விடுதலையாகும். அத்தகைய உரிமை வாழ்வுக்கே இயேசு நம்மை அழைக்கிறார். அதையம்...

தாழ்த்தினால் உணர்வாய்

யோவான் 8: 21-30 கடவுளுக்கும் மோசேவுக்குமான உரையாடலில் மோசேவின் கேள்விக்கு கடவுளின் பதில் கிடைக்கிறது. காண்க வி.ப 3:13-14, “கடவுள் மோசேயை நோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நாமே” என்றார். இன்றைய நற்செய்தியில் அவர்களின் கேள்விக்கு இயேசு ‘இருக்கிறவர் நாமே’ என்ற பதிலினைக் கொடுக்கின்றார். கடவுளின் வார்த்தையை மோசே முழுவதுமாக புரிந்து கொண்டாரா? என்பது தெரியவில்லை, ஆனால் அவரின் வார்த்தை அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க உந்தி தள்ளியது. அவரும் தன்னிடம் பேசிய அக்குரலினை நம்பி ஏற்றுக் கொண்டார். ஆனால் இன்றைய நற்செய்தியில் ஆண்டவரின் குரலினை மட்டும் அவர்கள் கேட்கவில்லை, மாறாக, அவரையும் அவரின் ஒவ்வொரு வல்ல செயல்களையும் தன் கண்களால் பார்த்தும் உணர்ந்தும் கொண்டவர்கள,; அவரை நம்ப தயங்கி, ‘இருக்கின்றவராக இருக்கிறவர் நானே’ என்பதினை இன்னும் எளிதாக்கி ‘நானே’ என்று ஏழுமுறை எடுத்துக்காட்டோடு பேசியவரின் (நேற்றைய சிந்தனையைப் பார்க்கவும்) வார்த்தைகள் இவர்களின் அதிமேதாவித்தனத்துக்கு புரியவில்லை. புரிந்தாலும் தன்னோடு பார்த்து பழகியவர்கள் என்பதால் அவர்களின்...

நான் எதற்கும் அஞ்சிடேன்

திருப்பாடல்130: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 குற்றங்களைச் செய்துவிட்ட ஒரு மனிதனின் உள்ளத்திலிருந்து, கடவுளின் இரக்கத்திற்காக ஏங்கக்கூடிய பாடல் தான் இந்த திருப்பாடல். கடவுள் செய்திருக்கிற எல்லா நன்மைகளையும் மறந்து, தவறு செய்துவிட்டு, அந்த தவறை நினைத்து மீண்டும், மீண்டுமாக வருந்தக்கூடிய இந்த பாடல், ஏறக்குறைய நமது வாழ்வோடு இணைந்த ஒன்றாக இருக்கிறது. நாமும் கூட, நமது வாழ்க்கையில் கடவுளிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றவர்கள். ஆனால், அந்த நன்றியுணர்வு சிறிது கூட இல்லாமல், கடவுளுக்கு எதிராக நாம் தவறு செய்கிறோம். மீண்டும் மீண்டுமாக அதே தவறைச் செய்து கொண்டிருக்கிறோம். இன்றைய நற்செய்தியில், கடவுள் எந்த அளவுக்கு நம்மீது மனமிரங்குகிறவராக இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். தன்னுடைய நண்பர் இலாசர் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டவுடன், அதிலும் குறிப்பாக இலாசர் இல்லாமல் அவருடைய உடன்பிறந்த சகோதரிகளின் வேதனையை முற்றிலுமாக உணர்ந்து,...

ஆண்டவரிடம் பேரன்பும் மீட்பும் உள்ளது

திருப்பாடல்130: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 குற்றங்களைச் செய்துவிட்ட ஒரு மனிதனின் உள்ளத்திலிருந்து, கடவுளின் இரக்கத்திற்காக ஏங்கக்கூடிய பாடல் தான் இந்த திருப்பாடல். கடவுள் செய்திருக்கிற எல்லா நன்மைகளையும் மறந்து, தவறு செய்துவிட்டு, அந்த தவறை நினைத்து மீண்டும், மீண்டுமாக வருந்தக்கூடிய இந்த பாடல், ஏறக்குறைய நமது வாழ்வோடு இணைந்த ஒன்றாக இருக்கிறது. நாமும் கூட, நமது வாழ்க்கையில் கடவுளிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றவர்கள். ஆனால், அந்த நன்றியுணர்வு சிறிது கூட இல்லாமல், கடவுளுக்கு எதிராக நாம் தவறு செய்கிறோம். மீண்டும் மீண்டுமாக அதே தவறைச் செய்து கொண்டிருக்கிறோம். இன்றைய நற்செய்தியில், கடவுள் எந்த அளவுக்கு நம்மீது மனமிரங்குகிறவராக இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். தன்னுடைய நண்பர் இலாசர் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டவுடன், அதிலும் குறிப்பாக இலாசர் இல்லாமல் அவருடைய உடன்பிறந்த சகோதரிகளின் வேதனையை முற்றிலுமாக உணர்ந்து,...

பிளவு ஏன்?

(யோவான் 07 : 40-53) “அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது” (யோவான் 7:43) ஆம், நேற்றைய நற்செய்தியின் தொடக்கமாக இன்றைய நற்செய்தியின் சிந்தனை அமைகின்றது. அவருக்குச் சார்பாகவும் எதிராகவும் மக்களிடையே பிளவு ஏற்படுகிறது. இப்பிளவுக்குக் காரணம் இயேசுவா? உறுதியாக இல்லவே இல்லை. மக்களின் முற்சார்பு எண்ணங்களையும், அறியாமையையும், அதிகார வர்க்கத்தினர் மிகவும் சரியாக அவர்களுக்கேற்றார் போல் பயன்படுத்திக் கொள்கின்றனர். கலிலேயர்கள் என்றாலே கலகக்காரர்கள் என்ற முற்சார்பு எண்ணத்தையும், கலிலேயாவில் இயேசு தன் பணிவாழ்வின் பெரும்பகுதியை செலவழித்ததால் அவர் ஒரு கலிலேயன் என்ற முடிவுக்கு வருகின்ற அறியாமையை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும். ‘கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றவில்லை’ என்ற எண்ணம் திசை திருப்புபவர்களின் திமிரையும், அதிகார வர்க்கத்தினரின் அடக்குமுறையையும், படித்தவர்களின் முட்டாள் தனத்தையும் காட்டுகின்றது. இதே நபர்கள் தான் இன்றும் நம்மைப் போன்ற பாமர மக்களின் அறியாமையையும், முற்சார்பு எண்ணத்தையும் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். கடவுளுக்கும் எல்லை...