Category: Daily Manna

கட்டளைகளைக் கடைபிடிக்க

(யோவான் 3 : 16-21) மொத்த இறையியலையும் இறையியலின் மையமான கிறித்துவியலையும் ஒரே வாக்கியத்திற்குள் அடக்கிவிட்ட இறைவார்த்தைதான் 3:16. இயேசு என்றால் யார்? இயேசு ஏன் நமக்காக இறக்க வேண்டும்? என்ற அனைத்துவிதமான கேள்விகளுக்கும் இந்த ஓரு வசனம் இரத்தினச் சுருக்க விளக்கமாக அமைகின்றது. ‘அன்பே கடவுள்’ என்பது இறைவனின் இலக்கணம். அவரது அன்பு சொல்லில் மட்டுமல்லாது செயலிலும் வெளிப்படுகிறது. உலகப் படைப்பிலும் அதன் பராமரிப்பிலும் கடவுளின் அன்பை நாம் காண முடிகிறது. அதே அன்பு இறையேசுவின் உருவத்தில் தங்கி நம்மோடு இன்று வரை அவரின் உடனிருப்புடன் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. கல்வாரி மலையில் இந்த அன்பு உச்சத்தை அடைகின்றது. ஆனால் இன்றைய நற்செய்தி இறையன்பையும் அதன் நிராகரிப்பையும் நம்முன் வைக்கின்றது. “ நாம் கடவுளுக்கு அன்பு செய்வதில் அன்று, அவரே நம்மை அன்பு செய்து நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தம் மகனையே அனுப்பியதால் தான் அன்பின் தன்மை விளங்குகின்றது” (உரோ...

தூய ஆவியின் செயல்பாடுகள்

கடவுளைப்பற்றியும், கடவுள் சார்ந்த செயல்பாடுகளைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு நமது மனித அறிவு புரிந்து கொள்ள முடியாம் இருப்பதை நிக்கதேமும், அதனை விளக்குவதற்கு முயற்சி எடுக்கிற இயேசுவைப்பற்றியும் இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கிறோம். நிக்கதேம் ஒரு படித்த மனிதர். மறைநூலை நன்கு ஆராய்ந்து அறிந்தவர். இறைஉணர்வு மிக்கவர். கடவுள் மற்றும் கடவுள் சார்ந்த செயல்பாடுகளுக்கு முக்கியத்துவத்தைக் கொடுப்பவர். ஆனால், அவராலே, இயேசுவின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த உலகத்தில், ஒன்று எப்படி இயங்குகிறது என்பது தெரியாமலேயே பலவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். மின்சாரமோ, தொலைக்காட்சியோ, வானொலியோ எப்படி இயங்குகிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவைகளை நாம் பயன்படுத்துகிறோம். அவற்றைப்பற்றிய முழுமையான அறிவு இல்லையென்றாலும் கூட, அவற்றின் பயன்பாட்டில் நாம் எந்தவித சுணக்கமும் காட்டுவதில்லை. அதே போலத்தான் தூய ஆவியைப்பற்றிய நமது அறிவும். தூய ஆவியின் செயல்பாடு எப்படி என்பதை நம்மால் அறிய முடிவதில்லை. ஆனால், தூய ஆவியின் செயல்பாடு ஒவ்வொரு...

உயிர்ப்பும் திருமுழுக்கும்

(யோவான் 3 : 1 – 8) இயேசுவின் வாழ்வில் நிக்கதேமின் பங்களிப்பு அளப்பரியது. இவர் ஒரு பரிசேயராக இருந்தாலும் நேர்மையானவர். எனவேதான் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் ஆண்டவரைச் சிறைப்பிடிக்க ஆள் அனுப்பியதைக் கண்டித்து, ஆண்டவர் இயேசுவின் சார்பாகக் குரல் கொடுத்தார் (யோவான் 7 : 51) இவரின் முதல் சந்திப்பே இன்றைய நற்செய்தி. நிக்கதேம் ஆணடவரின் உரையை முன்னரே கேட்டிருக்க வேண்டும். அவரது புதுமைகளைக் கண்டிருக்க வேண்டும். அவரே மெசியா என ஊகித்திருக்க வேண்டும். எனவேதான், “ராபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை அறிவேன். தன்னோடு கடவுள் இருந்தாலன்றி எவனும் நீர் செய்கிற அருங்குறிகளைச் செய்ய முடியாது” என்று தன் உரையைத் தொடங்குகிறார். ஆண்டவர் அப்படியே இறையாட்சியைப் பற்றியும், திருமுழுக்கின் முக்கியத்துவத்தைப் பற்றியும் விளக்குகின்றார். திருமுழுக்கிற்கும் இயேசுவின் உயிர்ப்பிற்கும் மிக நெருக்கமானத் தொடர்பு இருப்பது இதன் மூலம் இன்னும் வலுப்படுத்தப்படுகிறது. திருமுழுக்கு வழியாக நாம் கிறிஸ்துவோடு இணைந்து விடுவதால்...

ஆண்டவர் தோற்றுவித்த நாள் இதுவே

திருப்பாடல் 118: 2 – 4, 22 – 24, 25 – 27a, (1) ”கடவுள் தோற்றுவித்த நாள்“ என்கிற இந்த வரிகள் பல நேரத்தில் தவறாக விளக்கம் கொடுக்கப்படுகிறது. இது புதிய நாளை குறிக்கக்கூடிய அர்த்தத்தில் பார்க்கப்படுகிறது. ஆனால், அது தவறு. இது கடவுள் பிற்காலத்தில் அனுப்ப இருக்கிற மீட்பரின் நாளை குறிக்கக்கூடியதாக இருக்கிறது. அதாவது, இயேசுவைக் குறிக்கும் வார்த்தையாக இது இருக்கிறது. இயேசுவில் மீட்பிற்கான அடித்தளக்கல்லை கடவுள் நட்ட இருக்கிறார் என்பதை, இந்த வரிகள் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. பழங்காலத்தில், மிகப்பெரிய அரசுகள், வெகு எளிதாக தங்களது அதிகாரத்தை சாதாரண நாடுகள் மீது நிலைநாட்டின. இஸ்ரயேலை அவர்கள் ஒரு பொருட்டாக மதித்ததே இல்லை. ஆனால், கடவுள் அவர்கள் வழியாகத்தான் இந்த உலகத்தை மீட்டார். பாபிலோனிலிருந்து நாடுகடத்தப்பட்ட யூதர்கள், தங்களது நாட்டிற்கு வந்து, மீண்டும் கோவிலைப் புதுப்பிக்கத் தொடங்கிய நாட்களில், இந்த திருப்பாடல் எழுதப்பட்டிருக்கலாம். எனவே தான், கட்டிடத்தின் தொடர்பான...

ஆண்டவரது வலக்கை உயர்ந்துள்ளது

திருப்பாடல் 118: 1, 14 – 15, 16, 18, 19 – 21 (21a) நமது அன்றாட வாழ்வில், நமக்கு நெருக்கமானவர்களைப் பார்த்து நாம் சொல்வோம்: ”இவர் என்னுடைய வலக்கரம் போன்றவர்”. இங்கு வலக்கரம் என்பது நம்பிக்கைக்குரியவராக அடையாளப்படுத்தப்படுகிறது. எசாயா 41: 13 ”நானே உன் கடவுளாகிய ஆண்டவர். உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, ”அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்”. பொதுவாக எல்லா மக்களுமே வலது கையை முக்கியமாக பயன்படுத்துவதால், அது ஒருவருடைய பலத்தை, ஆற்றலை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. லூக்கா 20: 43 ”நான் உம் பகைவரை உமக்கு கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” என்று திருப்பாடலில் உள்ள வசனம் மேற்கோள் காட்டப்படுகிறது. இங்கு வலது கரம், அதிகாரத்தின் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. மாற்கு 10: 37 ல், யாக்கோபு மற்றும் அவருடைய சகோதரர்கள், இயேசுவின் வலப்பக்கத்தில் அமரும் பாக்கியத்தைக் கேட்கின்றனர். மத்தேயு 25 வது அதிகாரத்தில், தந்தையின் ஆசீர்...