Category: Daily Manna

பேராசையை சுட்டு பொசுக்குங்கள்…

லூக்கா 12:13-21 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். வாழ்வில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். ஆனால், அந்த ஆசைகள் பேராசையாக மாறும் போது தான் பிரச்னைகளும் சேர்ந்து வருகின்றன. அத்தகைய பேராசைகளை வேரறுக்க வேண்டும் என, நமக்கு உணர்த்தும் நாளே தித்திப்பான திங்கள்கிழமை. எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். பேராசை பொல்லாதது அந்த பொல்லாததை எப்படி சுட்டு பொசுக்க வேண்டும் என்பதை நாம் இரண்டு வழிகளில் தெரிந்துக்கொள்ள வேண்டும். 1. சிறிய வழி பேராசை பெரும்பாலும் நிறைய பொருட்களை குவிக்க வேண்டும், நிறைய சொத்துக்களை குவிக்க வேண்டும். பணக்காரர்களாக மாற வேண்டும் என்பதில் உள்ளது. அப்படிப்பட்ட நம்முடைய எண்ணம் தவறானது...

இறைவனுக்குப் பிரமாணிக்கமாய் இருப்போம்

இயேசுவின் காலத்திலே பாலஸ்தீனம் உரோமையர்களுக்கு அடிமை நாடாக இருந்தது. ஒவ்வொரு யூதக்குடிமகனும் மூன்று வகையான வரிகளைச்செலுத்த வேண்டியிருந்தது. முதலில் நிலவரி (Ground Tax). நிலத்திலிருந்து பெறப்படும் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு உரோமையர்களுக்கு வரியாக செலுத்த வேண்டியிருந்தது. இரண்டாவது வருமான வரி(Income Tax). வருமானத்தில் ஒரு சதம் உரோமையர்களுக்கு செலுத்த வேண்டிய வரி. மூன்றாவது, ஆள் வரி (Poll Tax). 14 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆண்மகனுக்கும், 12 வயது முதல் 65 வயது வரை உள்ள பெண்களும் ஒரு தெனாரியம் வரியாக செலுத்த வேண்டும். இங்கே நற்செய்தியில் விவாதிக்கப்படுவது ஆள்வரி(Poll Tax). வரி செலுத்துவதில் என்ன குற்றம் காண முடியும்? அல்லது என்ன விவாதம் இருக்க முடியும்? என்று கேட்கலாம். யூதர்களைப்பொறுத்தவரையில் அவர்கள் அரசராக ஏற்றுக்கொள்வது கடவுளை மட்டும்தான். வேறு யாரையும் அரசராக ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் உரோமையர்களுக்கு அடிமை நிலையில் இருப்பதால், வேறு வழியில்லாமல் ஒரு...

நன்றாக பேசத் தெரியாதவரா நீங்கள்?

லூக்கா 12:8-12 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்களாகிய நாம் பிறந்ததும் அம்மா என்ற அழகான வார்த்தையை பேசுகிறோம். அந்த வார்த்தையைப் பேசிய பிறகு வளர வளர வாயிலிருந்து வரும் வார்த்தைகளை கேட்கவே சகிக்க முடியவில்லை. எப்படி பேச வேண்டும் என்பது தெரியவில்லை. பேசத் தெரியாமல் பிறரை காயப்படுத்தும், களங்கப்படுத்தும் நபர்களுக்கான நல்லாலோசனையாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். என்ன நல்லாலோசனை? அது தூய ஆவியார் தரும் நல்லாலோசனை. தூய ஆவியார் துணையை தினமும் நாடும் போடு அவர் கற்றுக்கொடுக்கிறார். அவர் வழிநடத்துகிறார். எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதெல்லாம் நமக்கு இயல்பாகவே தெரிகிறது. எப்படி தூய ஆவியாரை நாட வேண்டும். இரண்டு வழிகளில்...

இருளில் பேசியவை ஒளியில் கேட்கும்…

லூக்கா 12:1-7 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் அதிகமாக ரகசியங்களை, பேசக்கூடாதவைகளை பேசுவதற்கு நாம் தேடுகின்ற இடம் இருள். அந்த இடம் பாதுகாப்பானது அல்ல, அனைத்தும் வெளியே தெரிந்துவிடும். இருளில் பேசியது அனைத்தும் ஒளியில் கேட்கும். ஆகவே கவனமாய் இருங்கள் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். நாம் வாழும் இந்த நவீன உலகத்தில் ரகசிங்களை பேசுவதற்கு, இச்சைக்குரிய காரியங்களை பேசுவதற்கு, செய்வதற்கு பலவிதமான வாய்ப்புகள் உள்ளது. மறைவாக பேசுவற்கு எவ்வளவு வாய்ப்புகள் உள்ளதோ அதே அளவுக்கு அது தெரிவதற்கும் உள்ளது. இதற்கு என்ன செய்யலாம்? இரண்டு வழிகள் எப்போதும் உண்டு. 1. ஒளியை விரும்பலாம் இந்த உலகில் எதுவும் மறைவு கிடையாது என்ற விழிப்புணர்வு வேண்டும்....

தன்னலமில்லாத தலைவர்கள்

இன்றைக்கு நமது நாட்டில் ஏராளமான தலைவர்களுக்கு நினைவுச்சின்னங்களை எழுப்பியிருக்கிறோம். ஒரு சில தலைவர்களின் பிறந்தநாளில் பொதுவிடுமுறை அறிவித்து, அவர்களைச் சிறப்பாக நினைவுகூர்கிறோம். முகநூல் பதிவுகளில் இன்றைக்கு சமுதாயத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கக்கூடிய நல்ல மனிதர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். ஆனால், இவர்கள் வாழ்ந்தபோது, இப்போது வாழ்ந்தகொண்டிருக்கிற நல்ல மனிதர்களுக்கு, அவர்களுக்கான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுக்கிறோமா? என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறி. “லைக்“ போடுவதோடும், “கமெண்ட்” எழுதுவதோடும் நின்றுவிடுகிறோம். அவர்களை வெறும் அடையாளத்திற்குத்தான் வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை ஆளவோ, அதிகாரத்தைக் கொடுக்கவோ நாம் விடுவதில்லை. இரோம் ஷர்மிளா, மேதாபட்கர், சுப.உதயகுமார், தோழர் நல்லகண்ணு என்று, இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மக்களுக்காக உண்மையாக உழைக்கிறவர்களை நாம் எப்போதும், ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இது இப்போது மட்டும் அல்ல. இஸ்ரயேல் மக்களின் தொடக்க கால வரலாற்றிலிருந்தே நாம் பார்க்கலாம் என்பதைத்தான், இயேசுவின் வார்த்தைகள் நமக்கு வெளிப்படுத்துகிறது. இறைவன் இந்த உலகத்தைப் படைத்த தருணத்திலிருந்து எத்தனையோ மனிதர்கள் கடவுளின் ஆவியால் தூண்டப்பட்டு,...